
























Updated on:
சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளை கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலர் தலைமையில் கடந்த மே 27-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உடற்கல்வி பாடவேளை கட்டாயம் இடம்பெற வேண்டும். அந்த பாடவேளைகளில் மாணவர்களுக்கு உடற்பயிற்சி வகுப்புகள் நடத்த அறிவுறுத்த வேண்டும்.
அனைத்து உடற்கல்வி இயக்குநர்களும், ஆசிரியர்களும் உடற்கல்வி பாடவேளையில் அதற்கான பாடத் திட்டத்தை பயன்படுத்தி வகுப்புகள் எடுக்க வேண்டும். விளையாட்டில் விருப்பம் உள்ள மாணவர்களுக்கு, பள்ளி நேரம் முடிந்த பிறகு, சிறப்பு விளையாட்டுக்கான பயிற்சி வகுப்புகளை எடுக்க வேண்டும்.
எந்தெந்த அரசுப் பள்ளிகளில் மைதானங்கள் பயன்பாட்டில் இல்லை என்ற விவரங்களை உடனே முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். தங்கள் மாவட்டங்களில் மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளையாட்டுகளில் சாதனை படைத்த பள்ளிகள் விவரம், எந்த விளையாட்டுகள் என்ற விவரத்தை முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்களுக்கு உடனே தெரிவிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。