惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
MongoDB | Blog
MongoDB | Blog
B
Blog
博客园 - Franky
博客园 - 三生石上(FineUI控件)
A
About on SuperTechFans
N
Netflix TechBlog - Medium
MyScale Blog
MyScale Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
美团技术团队
Vercel News
Vercel News
云风的 BLOG
云风的 BLOG
WordPress大学
WordPress大学
S
SegmentFault 最新的问题
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
宝玉的分享
宝玉的分享
小众软件
小众软件
P
Proofpoint News Feed
aimingoo的专栏
aimingoo的专栏
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
月光博客
月光博客
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
D
DataBreaches.Net
量子位

hindutamil

​பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல்
அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஜே.டி. வேன்ஸ், முகம்ம...
மோகன் கணபதி · 2026-04-11 · via hindutamil

ஜே.டி. வேன்ஸ் மற்றும் முகம்மது பாகர் கலிபா

Updated on: 

இஸ்லாமாபாத்: மேற்காசியாவில் நடைபெற்று வரும் மோதலுக்கு முடிவு கட்டும் நோக்கில் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான அமெரிக்க குழுவினரும், நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது பாகர் கலிபா தலைமையிலான ஈரான் குழுவினரும் இஸ்லாமாபாத் வந்தனர்.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கின. இதில் அந்த நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உட்பட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். பதிலுக்கு இஸ்ரேலின் முக்கிய நிலைகளை குறிவைத்தும், அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகளை குறிவைத்தும் ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய கடல் வழியான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. இதனால், சர்வதேச அளவில் இந்த போர் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

போரை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சியை அடுத்து, இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தத்துக்கு கடந்த 8-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புக்கொண்டார். மேலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா பங்கேற்கும் என்றும் ட்ரம்ப் அறிவித்தார்.

ஈரானும் இரண்டு வார கால போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டது. எனினும், லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தியதால் அதிருப்தி அடைந்த ஈரான் பேச்சவார்த்தையில் பங்கேற்க இயலாது என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து லெபனான் மீதான தாக்குதலை நிறுத்திவைக்குமாறு ட்ரம்ப் விடுத்த வேண்டுகோளை இஸ்ரேல் ஏற்றது. இதனையடுத்து, பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள ஈரான் முன்வந்தது.

அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினர் இஸ்லாமாபாத் வந்துள்ளனர். இதேபோல், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது பாகர் கலிபா தலைமையிலான குழுவினரும் இஸ்லாமாபாத் வந்துள்ளனர். இரு தரப்பினரையும் பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தர், நாடாளுமன்ற சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக், ராணுவத் தலைமைத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி ஆகியோர் வரவேற்றனர்.

இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவை அமெரிக்கா எதிர்பார்க்கிறது. அமெரிக்காவை ஏமாற்ற ஈரான் செய்யும் எந்த ஒரு முயற்சிக்கும் உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். முன்னதாக, அமெரிக்கா ஈரானுக்கு 15 அம்ச திட்டத்தை நிபந்தனையாக முன்வைத்தது. பதிலுக்கு ஈரானும் 10 அம்ச திட்டத்தை அமெரிக்காவுக்கு நிபந்தனையாக முன்வைத்தது. இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.