






















தவெக ஆட்சிக்கு வந்தால் 60 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தின்போது தவெக தலைவர் விஜய் வாக்குறுதி அளித்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று கடந்த மே மாதம் ஆட்சியமைத்தை தொடர்ந்து, சட்டப்பேரவை விவாதத்தில் முதல்வர் விஜய் பேசும்போது, திமுக அரசின் திட்டங்கள் தொடரும் என்று அறிவித்தார். அதேபோல், தவெக அறிவித்த மகளிர் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும்.
அதற்கு காலஅவகாசம் தேவை என அறிவித்தார். இதனால் ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை நிறுத்தப்படுமோ? என்று பெண்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், கடந்த மாதம் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது. அதேபோன்று இந்த மாதமும் பெண்களுக்கான உரிமைத் தொகை வங்கிக் கணக்கில் நேற்று வரவு வைக்கப்பட்டது.
இதற்கிடையே, 60 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என தவெக தேர்தல் வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும்? என எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், ஏற்கெனவே மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன் அடைந்துவரும் பெண்களுக்கு ரூ.1000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படுமா? அல்லது புதிதாக விண்ணப்பங்கள் பெற்று பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்களா? என்ற கேள்வியும் மகளிர் மத்தியில் நிலவுகிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。