惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - Franky
U
Unit 42
MyScale Blog
MyScale Blog
B
Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
量子位
IT之家
IT之家
The GitHub Blog
The GitHub Blog
F
Fortinet All Blogs
Recent Announcements
Recent Announcements
V
Visual Studio Blog
G
Google Developers Blog
Last Week in AI
Last Week in AI
雷峰网
雷峰网
博客园 - 聂微东
博客园 - 叶小钗
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
J
Java Code Geeks
博客园 - 司徒正美
Y
Y Combinator Blog
T
The Blog of Author Tim Ferriss
月光博客
月光博客
aimingoo的专栏
aimingoo的专栏

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
செய்திப்பிரிவு · 2026-06-14 · via hindutamil

Updated on: 

தரம்சாலா: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நேற்று நடைபெற்றது. மழை காரணமாக 25 ஓவர்களை கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது.

முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 24.5 ஓவர்களில் 194 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரஹ்மனுல்லா குர்பாஸ் 51 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் விளாசினார். இது அவருக்கு 9-வது சதமாக அமைந்தது. கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி 27, அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 26 ரன்கள் சேர்த்தனர்.

இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர்களான வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார், சுழற்பந்து வீச்சாளர் ஹர்ஷ் துபே ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். தொடக்கத்தில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 14 ரன்களில் இருந்தபோது அர்ஷ்தீப் சிங் வீசிய பந்து அவரது கால்காப்பை தாக்கியது. ஆனால் பந்து மட்டையில் பட்டதாக தவறாக உணர்ந்து இந்திய அணி எல்பிடபிள்யூ முறையில் அவுட் கேட்கவில்லை. டி.வி.ரீப்ளேவில் பந்து லெக் ஸ்டெம்பை தாக்குவது தெரிந்தது.

195 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 22.5 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஷுப்மன் கில் 66 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 84 ரன்களும், கே.எல்.ராகுல் 19 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 39 ரன்களும் விளாசினர்.

முன்னதாக இந்திய அணிக்காக அதிக வயதில் விளையாடிய வீரர் என்ற பெருமையுடன் களமிறங்கிய ரோஹித் சர்மா (39 வயது 44 நாட்கள்) 16 ரன்னில் ரன் அவுட் ஆனார். இஷான் கிஷன் 34 ரன்களில் ரஷித் கான் பந்தில் போல்டானார். ஸ்ரேயஸ் ஐயர் 12 ரன்களில் ஜியாவுர் ரஹ்மான் பந்தில் வெளியேறினார்.

7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் வரும் 17-ம் தேதி லக்னோவில் நடைபெறுகிறது.

48 பந்துகளில் சதம்: தரம்சாலா போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரரான ரஹ்மனுல்லா குர்பாஸ் 48 பந்துகளில் தனது விளாசினார். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்காக குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னர், அந்த அணியின் முகமது ஷாஷாத் கடந்த 2010-ம் ஆண்டு ஸ்காட்லாந்துக்கு எதிராக 72 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.

மேலும் இந்திய அணிக்கு எதிராக குறைந்த பந்துகளில் சதம் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையையும் ரஹ்மனுல்லா குர்பாஸ் பெற்றார். இந்த வகையில் பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிடி கடந்த 2005-ம் ஆண்டு கான்பூர் போட்டியில் 45 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.