惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

T
Tailwind CSS Blog
MyScale Blog
MyScale Blog
博客园 - Franky
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
WordPress大学
WordPress大学
有赞技术团队
有赞技术团队
雷峰网
雷峰网
罗磊的独立博客
小众软件
小众软件
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
V
V2EX
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
The Cloudflare Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 【当耐特】
博客园 - 司徒正美
Last Week in AI
Last Week in AI
月光博客
月光博客
阮一峰的网络日志
阮一峰的网络日志
美团技术团队
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
量子位
宝玉的分享
宝玉的分享

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஊரெங்கும் மரக்கன்றுகளை நட்டு வைத்து விருதுநகரை பசுமையாக ம...
2026-04-27 · via hindutamil

விருதுநகர் பேராலி சாலையில் மாவட்ட நிர்வாகம் வழங்கிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நர்சரி. (உள்படம்) புஷ்பராஜ்

Updated on

1 min read

விருதுநகர்: விருதுநகரை பசுமையாக மாற்ற பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் சேவையை ஆலமரம் அமைப்பு மேற்கொண்டு வருகிறது. மரக்கன்றுகளை உருவாக்கி ‘நர்சரி’ அமைக்க, இந்த அமைப்புக்கு மாவட்ட நிர்வாகம் இலவசமாக நிலம் ஒதுக்கி ஊக்கப்படுத்தியுள்ளது.

விருதுநகரை பசுமைப் பகுதியாக மாற்ற, மரக்கன்றுகள் நட்டுவைத்துப் பராமரிக்க தன்னார்வலர்களால் 2020-ல் ஆலமரம் அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், கூலித் தொழிலாளர்கள் என 250 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஆலமரம் அமைப்பு மூலம், இம்மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமைதோறும் இந்த அமைப்பில் உள்ள தன்னார்வலர்கள் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மரக்கன்றுகளை நட்டு வைக்கின்றனர். மற்றொரு குழுவினர் ஏற்கெனவே நட்டு வைத்த மரக்கன்றுகளைப் பராமரிக்கும் பணிகளை மேற்கொள்கின்றனர்.

விருதுநகர் அருகே உள்ள வரலொட்டி, தாதம்பட்டி, வில்லிப் பத்திரி ஆகிய கிராமங்களில் குறுங்காடுகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதோடு, அரசு மருத்துவமனை வளாகம், அரசுப் பள்ளி வளாகம் உள்ளிட்ட பகுதிகளிலும் நூற்றுக் கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.

முன்பு பல்வேறு தன்னார்வ அமைப்புகளையும், அரசு மற்றும் தனியார் நர்சரிகளையும் அணுகி மரக்கன்றுகளைப் பெற்று வந்தனர். ஆலமரம் அமைப்பின் செயல்பாடுகளை அறிந்து, அவர்கள் நர்சரி அமைக்க பேராலி சாலையில் ஓடைப் புறம்போக்கு பகுதியை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது.

தற்போது 200 மீ.க்கு நர்சரி அமைத்து 2 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து ஆலமரம் அமைப் பின் ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் கூறுகையில், "ஓடை புறம்போக்குப் பகுதியில் 1,000 மீட்டர் தூரத்துக்கு எங்களுக்கு நிலம் ஒதுக்கிய மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றி.

மரக்கன்றுகளை பிறரிடமிருந்து வாங்கும் சிரமத்துக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, நாங்களே சொந்தமாக மரக் கன்றுகளை விதை நடவு மூலம் உற்பத்தி செய்கிறோம்.

இதன்மூலம் தேவைப்படும் பகுதிகளில் நாங்களே மரக்கன்றுகளை நட்டு வைக்க வசதியாக உள்ளது. தற்போது ஓடை கரையோரம் 500 மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரித்து வருகிறோம்" என்று கூறினார்.