惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

S
SegmentFault 最新的问题
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
B
Blog RSS Feed
Y
Y Combinator Blog
T
Tailwind CSS Blog
博客园 - 三生石上(FineUI控件)
J
Java Code Geeks
Stack Overflow Blog
Stack Overflow Blog
aimingoo的专栏
aimingoo的专栏
Jina AI
Jina AI
The GitHub Blog
The GitHub Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
A
About on SuperTechFans
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
D
Docker
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
C
Check Point Blog
M
MIT News - Artificial intelligence
Last Week in AI
Last Week in AI
V
V2EX
腾讯CDC
F
Fortinet All Blogs
博客园 - 叶小钗
T
The Blog of Author Tim Ferriss

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நிரபராதிகள் தண்டிக்கப்படாததை உறுதி செய்வதில் நீதி அமைப்பு...
கி.மகாராஜன் · 2026-06-22 · via hindutamil

Updated on: 

மதுரை: நிரபராதிகள் அநியாயமாகத் தண்டிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்வதில் குற்றவியல் நீதி அமைப்பு கவனம் செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய நிதியில் மோசடி செய்து, அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக, மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் கார்த்திகேயன், அமலரசு, முரளி ஆகியோர் மீது 2016-ல் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில், தேனி நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யக்கோரி அமலரசு, முரளி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.

இதை நீதிபதி எல்.விக்டோரியா கெளரி விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதிடுகையில், ‘விசாரணை நீதிமன்றத்தில் இரு ஆவணங்களை தாக்கல் செய்யக் கேட்டு மனு செய்தோம். அந்த ஆவணங்களில் நாங்கள் மேற்பார்வை சார்ந்த குறைபாடுகளுக்கு மட்டுமே பொறுப்பானவர்கள் என்றும், முறைகேட்டுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் தெளிவாக உள்ளன. இருப்பினும், அந்த ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது’ எனக் கூறப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஒரு வழக்கில் நியாயமான தீர்ப்புக்கு கூடுதல் சான்றுகள் தேவை எனக் கருதினால், அவற்றை ஏற்க மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 391 அதிகாரம் அளிக்கிறது. இப்பிரிவு நீதி மறுக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டது. இதை குறுகிய அல்லது வெறும் சட்ட நுணுக்கங்கள் சார்ந்த கண்ணோட்டத்தில் அணுகக்கூடாது.

குற்றவியல் நடவடிக்கைகளுக்கும், துறைசார் நடவடிக்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. துறைசார் நடவடிக்கைகளின் முடிவுகள் குற்றவியல் நீதிமன்றத்தைக் கட்டுப்படுத்தாது. இருப்பினும், துறைசார் நடவடிக்கையின்போது பெறப்பட்ட ஆவணங்கள், குற்றம் சாட்டப்பட்டவரின் பங்கு மற்றும் குற்றத்தன்மையை நிர்ணயிப்பதில் சாட்சியத்தின் மதிப்பைக் கொண்டிருக்கக்கூடும்.

குறிப்பாக, குற்றம் சாட்டப்பட்டவரை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கக்கூடிய சாத்தியமுள்ள சாட்சியங்கள் இருக்கும்போது, ​​தொடர்புடைய மற்றும் முக்கியமான அனைத்து சாட்சியங்களும் நீதிமன்றப் பதிவில் சேர்க்கப்படுவதை உறுதி செய்வது, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் கடமையாகும்.

நீதி வழங்கப்படுவதை உறுதி செய்யவும், நீதி தவறுவதைத் தவிர்க்கவும் மட்டுமே குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 391-ன் கீழ் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும். அந்த அடிப்படையில், குறிப்பிட்ட ஆவணங்களைக் கருத்தில் கொள்ளாதது நீதி தவறுவதற்கு வழிவகுக்கக்கூடும்.

எந்தவொரு நிரபராதியும் அநியாயமாகத் தண்டிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்வதில், குற்றவியல் நீதி அமைப்பு கவனம் செலுத்த வேண்டும். இதனால், தேனி முதன்மை அமர்வு நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிடப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.