惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 叶小钗
D
Docker
GbyAI
GbyAI
Y
Y Combinator Blog
Google DeepMind News
Google DeepMind News
G
Google Developers Blog
P
Proofpoint News Feed
云风的 BLOG
云风的 BLOG
雷峰网
雷峰网
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Stack Overflow Blog
Stack Overflow Blog
WordPress大学
WordPress大学
小众软件
小众软件
Engineering at Meta
Engineering at Meta
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
I
InfoQ
B
Blog
H
Help Net Security
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 聂微东
The GitHub Blog
The GitHub Blog
A
About on SuperTechFans
B
Blog RSS Feed
Microsoft Security Blog
Microsoft Security Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“செங்கோட்டையன், ஓபிஎஸ் போல் நானும் வெளியேறுவேன் என நினைக்...
டி.ஜி.ரகுபதி · 2026-06-29 · via hindutamil

Updated on: 

கோவை: கோவையில் இன்று (ஜூலை 28) நடந்த கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுகவிலிருந்து செங்கோட்டையன், ஓபிஎஸ் போல் நானும் வெளியேறுவேன் என நினைக்கின்றனர் என உருக்கமாக பேசினார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு, அதிமுகவில் தனி அணியாக செயல்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பி்ன்னர் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமியை சந்தித்து இணைந்தார். எனினும் எஸ்.பி வேலுமணியிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பதவி திருப்பி வழங்கப்படவில்லை. அதிமுக துணை பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு மட்டும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ஆதரவாளர்களுடன் இன்று (ஜூலை 28) மாலை ஆலோசனையில் ஈடுபட்டார்.

கட்சி கொடி,பேனர் எதுவும் இல்லாமல் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுக நிறுவனர் எம்ஜிஆர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகிய இருவரின் புகைப்படங்கள் மட்டும் வைக்கப்பட்டு இருந்தன. 500-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் திருமண மண்டபத்தில் திரண்டு இருந்த நிலையில், ஆதரவாளர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி பேசினார். அப்போது சட்டப்பேரவை தேர்தல் முடிந்தவுடன் சென்னையில் 25 நாட்களாக என்ன நடந்தது? என்பது குறித்து ஆதரவாளர்களிடம் விளக்கினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, ‘‘எந்த நேரத்திலும் உங்களுக்காக என்ன பிரச்சினை என்றாலும் நான்தான் வந்து நிற்பேன். சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஓ.பன்னீர்செல்வமும் நம்முடன் சேர்த்து இருந்திருந்தால் இன்னும் பலமாக இருந்திருக்கும்.

திமுகவுடன் கூட்டணி என்று சொன்னதால்தான் பிரச்சினை வந்தது. அதிமுகவை எம்.ஜி.ஆர் ஆரம்பித்தது திமுகவை எதிர்க்கத்தான். திமுகவுடன் அதிமுவை சேர்ப்பது என்பதை எப்படி ஏறறுக்கொள்ள முடியும். திமுகவுடன் யார் போனாலும் ஏற்கமாட்டோம். 30 மாவட்ட செயலாளர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதிமுகவை அழிவு பாதையில் கொண்டு செல்ல முயன்றனர். அடுத்து என்ன செய்ய வேண்டுமென நீங்க என்ன நினைக்கின்றீர்களோ அது தான் என் கருத்து.

21 வருடமாக மாவட்ட செயலாளராக இருந்திருக்கிறேன். கட்சியில் சாதாரண உறுப்பினராக கூட இருப்பேன். என்னை நம்பி வந்தவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன். தவறு செய்தால் கண்டிப்பாக கேட்போம். திமுக எதிர்ப்பு எப்போதும் இருக்கும். நிறைய பேர் வாட்ஸ்அப்பில் குழு உருவாக்கி என்னை கேவலப்படுத்தி வருகின்றனர். அதிமுகவிலிருந்து செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம், ஜேசிடி பிரபாகர் என ஒவ்வொருவராக வெளியேறினர். அதுபோல நானும் வெளியே செல்வேன் என நினைக்கின்றனர்” இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், நிகழ்ச்சி முடிந்த கிளம்பிய எஸ்.பி.வேலுமணியிடம் கூட்டம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, ‘‘நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொண்டோம். இது மீட்டிங்கே கிடையாது. தேர்தலில் பணியாற்றியவர்களுக்கு நன்றி சொன்னோம். அவ்வளவுதான்’’என்றார்.