惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - Franky
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
美团技术团队
The Cloudflare Blog
量子位
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园_首页
F
Fortinet All Blogs
J
Java Code Geeks
人人都是产品经理
人人都是产品经理
N
Netflix TechBlog - Medium
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
爱范儿
爱范儿
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
B
Blog RSS Feed
博客园 - 聂微东
Hugging Face - Blog
Hugging Face - Blog
WordPress大学
WordPress大学
小众软件
小众软件
Y
Y Combinator Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Vercel News
Vercel News
S
SegmentFault 最新的问题
有赞技术团队
有赞技术团队

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“சாமானிய மக்களின் வயிற்றில் அடிக்கும் பெட்ரோல், டீசல் வில...
2026-05-15 · via hindutamil

வேல்முருகன் | கோப்புப்படம்

Updated on

2 min read

சென்னை: “நாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்கும் எரிபொருள் விலையை, கார்ப்பரேட்டுகளின் லாபத்துக்காக சாமானிய மக்களின் வயிற்றில் அடிக்கும் கருவியாகப் பயன்படுத்துவது பாசிச பாஜக அரசின் நிர்வாகச் சீர்கேட்டையே காட்டுகிறது” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் சாடியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “சர்வதேசச் சந்தை மற்றும் போர்களால் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் காரணம் காட்டி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 3 ரூபாய் 10 காசுகள் வரை உயர்த்தியுள்ள ஒன்றிய பாஜக அரசின் செயல், இந்தியப் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்குத் தள்ளும் மக்கள் விரோத நடவடிக்கையாகும்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்கும் எரிபொருள் விலையை, கார்ப்பரேட்டுகளின் லாபத்திற்காகச் சாமானிய மக்களின் வயிற்றில் அடிக்கும் கருவியாகப் பயன்படுத்துவது இந்த பாசிச அரசின் நிர்வாகச் சீர்கேட்டையே காட்டுகிறது.

இந்த விலை உயர்வு என்பது வெறும் பெட்ரோல் பங்கோடு முடிந்துவிடுவதல்ல. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளின் உற்பத்திச் செலவை இது பலமடங்கு உயர்த்துகிறது. டீசலை நம்பி இயங்கும் இயந்திரங்கள் மற்றும் தொழிற்சாலை மின் உற்பத்திக் கருவிகளின் செலவு அதிகரிப்பதால், சிறு வணிகர்கள் தங்கள் தொழிலை நடத்த முடியாமல் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பாதிப்பதோடு, வேலையில்லாத் திண்டாட்டத்தையும் தீவிரமாக்குகிறது.

நாட்டின் ரத்த நாளங்களாகச் செயல்படும் லாரி உள்ளிட்ட சுமையுந்து போக்குவரத்துத் துறை, இந்த டீசல் விலையேற்றத்தால் மரண அடியைச் சந்தித்துள்ளது. வாடகை உயர்வு, உதிரிபாகங்களின் விலை அதிகரிப்பு எனப் பலமுனைத் தாக்குதலால் லாரி உரிமையாளர்கள் தொழிலைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல், ஆட்டோ, வாடகைக் கார் மற்றும் அன்றாடப் பயணங்களை நம்பியுள்ள சாமானிய மக்களின் போக்குவரத்துச் செலவு இருமடங்காக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கானப் பயணங்களையும் பெரும் சுமையாக மாற்றியுள்ளது.

டீசல் விலை உயரும்போது, விளைபொருட்களைச் சந்தைக்குக் கொண்டு வரும் போக்குவரத்துச் செலவு அதிகரிக்கிறது. இதன் விளைவாக, அரிசி, பருப்பு, எண்ணெய் முதல் காய்கறிகள் வரை அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் ஏழை மக்களின் கைக்கெட்டாத உயரத்திற்குச் செல்கிறது. ஒரு விவசாயியின் உழைப்பு முதல் இல்லத்தரசிகளின் சமையலறை பட்ஜெட் வரை இந்த விலை உயர்வு நேரடியாகத் தாக்குகிறது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நடுத்தரக் குடும்பங்கள், இந்தச் சங்கிலித் தொடர் விலையேற்றத்தால் தங்கள் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

140 கோடி மக்களை, உலகச் சந்தையின் அதிர்வுகளுக்குப் பலிகொடுத்துவிட்டு, நீண்டகால எரிபொருள் பாதுகாப்புத் திட்டங்களை உருவாக்கத் தவறியது பாஜக அரசின் மிகப்பெரிய தோல்வியாகும். தற்சார்புப் பொருளாதாரம் என்று மேடைக்கு மேடை முழங்கும் இவர்கள், உண்மையில் மக்களை அந்நியச் சந்தைக்கு அடிமையாக்கி வைத்துள்ளனர். இது மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் கடமையிலிருந்து தவறிய ஒரு பாசிச அரசின் முகத்திரையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

மக்களின் வியர்வையைச் சுரண்டி, கார்ப்பரேட்டுகளின் கஜானாவை நிரப்புவது ஓர் அரசின் வேலையாக இருக்கக் கூடாது என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும். எனவே, தொழில்துறையையும், ஏழை எளிய மக்களின் வாழ்வையும் சீரழிக்கும் இந்த எரிபொருள் விலை உயர்வைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மக்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை உணர்ந்து, இந்த விலை உயர்வை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.