惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Engineering at Meta
Engineering at Meta
D
Docker
IT之家
IT之家
博客园_首页
罗磊的独立博客
V
V2EX
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
美团技术团队
Y
Y Combinator Blog
博客园 - 聂微东
量子位
阮一峰的网络日志
阮一峰的网络日志
GbyAI
GbyAI
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - Franky
Martin Fowler
Martin Fowler
Jina AI
Jina AI
大猫的无限游戏
大猫的无限游戏
C
Check Point Blog
月光博客
月光博客
G
Google Developers Blog
B
Blog
T
The Blog of Author Tim Ferriss
爱范儿
爱范儿

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உயரத்தால் அல்ல, உள்ளத்தால் உயர்வோம் | நட்சத்திரக் குழந்தை...
ரேவதி · 2026-05-12 · via hindutamil

Updated on: 

உயரம் ஒருவரின் ஆளுமையைத் தீர்மானிப்பதில்லை என்பதற்கு வாழும் எடுத்துக்காட்டு ஜோதி ஆம்கே. 62.8 சென்டிமீட்டர் உயரம் கொண்ட இவர் உலகின் மிகக் குள்ளமான பெண் எனும் அடிப்படையில் கின்னஸ் சாதனை புத்த கத்தில் இடம்பிடித்துள்ளார். ஹாலிவுட் தொடர்களிலும் நடித்துப் புகழ்பெற்றுள்ளார்.

வயதுவந்தோர் 4 அடி 10 அங்குலத் துக்கு (147 செ.மீ) குறைவான உயரம் இருந்தால் குள்ளத்தன்மை கொண்டவர் என்கிறது மருத்துவ அறிவியல். இது நோய் அல்ல, ஒரு வகையான வளர்ச்சி மாற்றம் அல்லது மரபணு மாறுபாடு. உலக அளவில் 200க்கும் மேற்பட்ட மருத்துவக் காரணங்களால் குள்ளத்தன்மை ஏற்படுகிறது.

குள்ளத்தன்மை எதனால்?

குள்ளத்தன்மை ஏற்படுவதற்குப் பின்னால் பல மரபணு, மருத்துவக் காரணங்கள் உள்ளன.

* சமச்சீரற்ற குள்ளத்தன்மை: இதில் உடல் பாகங்கள் ஒன்றுக்கொன்று சரியான விகிதத்தில் இருக்காது. எடுத்துக்காட்டாக தலை, உடல் இயல்

பான அளவில் இருக்கும். கைகள், கால்கள் மிகவும் சிறியதாக இருக்கும். இதற்கு ‘அகோண்ட்ரோபிளாசியா' முக்கியக் காரணமாகும்.

* சமச்சீரான குள்ளத்தன்மை: இதில் உடல் பாகங்கள் அனைத்தும் ஒன்றுக் கொன்று சரியான விகிதத்தில் இருக்கும். ஒட்டுமொத்த வளர்ச்சி மிகவும் குறைவாக இருக்கும். இது பெரும் பாலும் ஹார்மோன் குறைபாடுகளால் ஏற்படுகிறது.

முக்கிய காரணங்கள்

* மரபணு மாற்றம்: பெற்றோர் உயரமாக இருந்தாலும், கரு உருவாகும்போது தன்னிச்சையாக ஏற்படும் மரபணு மாற்றம்.

* பரம்பரை: குள்ளத்தன்மை கொண்ட பெற்றோர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் இது வர வாய்ப்புள்ளது.

* வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு: பிட்யூட்டரி சுரப்பி போதிய அளவு வளர்ச்சி ஹார்மோன்களைச் சுரக்காதபோது உடல் வளர்ச்சி தடைப்படுகிறது.

சவால்களும் தீர்வுகளும்

குள்ளத்தன்மை கொண்டவர்கள் எதிர் கொள்ளும் உடல்ரீதியான சிரமங்கள் சாதாரணமானவை அல்ல.

* முதுகெலும்பு வளைவு அல்லது நரம்புகள் அழுத்தப்படுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

* குறுகிய மூச்சுக்குழாய் காரணமாக உறக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படலாம்.

* காதுகளின் உட்புற அமைப்பு சிறியதாக இருப்பதால் அடிக்கடி தொற்று ஏற்படக்கூடும்.

<div class="paragraphs"><p>ஜோதி ஆம்கே</p></div>

ஜோதி ஆம்கே

இருப்பினும், நவீன மருத்துவ உலகம் இவர்களுக்குப் பல்வேறு தீர்வுகளை வழங்குகிறது. ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தால், ஹார்மோன் சிகிச்சைகள் மூலம் சிலரது வளர்ச்சியைத் தூண்ட முடியும். எலும்பு வலிமையை அதிகரிக்கவும், மூட்டுவலிகளைப் போக்கவும் பிசியோதெரபி உதவும்.

சமூகச் சிக்கல்

சராசரி உயரம் கொண்டவர்களுக் காகவே வடிவமைக்கப்பட்ட பொருள் களால் ஆனது உலகு. இதனால் பேருந்துப் படிக்கட்டுகள், அலுவலக மேசைகள், சுவிட்ச் போர்டுகள், கழிப்பிடம் என அடிப்படைத் தேவைகளைக்கூட மற்றவர்களின் உதவி யின்றிப் பூர்த்தி செய்துகொள்ள முடியாதசூழல் குள்ளத்தன்மை உடையோருக்கு ஏற்படுகிறது.

மேலும், நீண்ட நேரம் நடப்பதோ, நிற்பதோ அவர்களின் எலும்பு அமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தி, முதுகுவலி, மூட்டு வலி போன்ற நாள்பட்ட உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கிறது.

இதுபோக சமூகரீதியாக அவர்கள் சந்திக்கும் மன உளைச்சல் கொடியது. பொது இடங்களுக்குச் செல்லும்போது மக்கள் விசித்திரமாகப் பார்ப்பதும், கேலி பேசுவதும் அவர்களின் தன்னம் பிக்கையைக் கடுமையாகப் பாதிக்கிறது.

குறிப்பாகக் கல்வி நிலையங்களிலும் பணியிடங்களிலும் அவர்களின் திறமையை விடவும் உருவமே முன்னிறுத்தப்படுவதால், தகுதியிருந்தும் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.

அவர்கள் முதிர்ச்சியடைந்த பெரியவர்களாக இருந்தாலும், 'சிறுபிள்ளை' போன்ற தோற்றத்தின் சமூகம் அவர்களை மரியாதையுடன் நடத்துவதில்லை. இத்தகைய பாகுபாடுகளும், “தங்களால் எதையும் தனியாகச் செய்ய முடியாது" என்ற பிம்பமும் அவர்களைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தும் நிலைக்குத் தள்ளுகின்றன.

சட்டத்தின் குரல்

இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணும் நோக்கில், குள்ளத்தன்மையை ஒரு தனித்துவமான மாற்றுத்திறனாக அங்கீகரித்து அவர்களுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் (2016) வழங்குகிறது.

இச்சட்டத்தின் படி, 147 செ.மீ., அல்லது அதற்கும் குறைவானவர் குள்ளத்தன்மையாளர். அரசு சலுகைகளைப் பெற அவர் தகுதியானவர். கல்வி, அரசு வேலை வாய்ப்புகளில் அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ள இடஒதுக்கீடு, அவர்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்கிறது.

மேலும் பொது இடம், போக்குவரத்து, கட்டிடங்கள் குள்ளத் தன்மை கொண்டவர்களின் பயன் பாட்டுக்கு ஏற்றவாறு தடையற்ற சூழலில் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. வெறும் சலுகைகளைத் தாண்டி, அவர்கள் சுயமரியாதை யுடனும் சமத்துவத்துடனும் வாழ்வதற் கான உரிமையை இச்சட்டம் உறுதிப் படுத்துகிறது.

செய்ய வேண்டியவை

* மரியாதைக் கொடுங்கள்: குள்ளத் தன்மையானவர்களைக் கண்டால் விசித்திரமாகப் பார்ப்பதையோ, ஒளிப்படம் எடுப்பதையோ தவிர்க்க வேண்டும்.

* உதவிக் கரம்: பொது இடத்தில் அவர்கள் கைகள் எட்டாத உயரத்திலி ருக்கும் பொருள்களை எடுக்கச் சிரமப்பட்டால், கண்ணியத்தோடு உதவி செய்ய முயல வேண்டும்.

* குழந்தைகளிடம் விழிப்புணர்வு: குழந்தைகளுக்கு உடல் மாற் றங்கள் இயற்கை என்பதைப் புரிய வைக்க வேண்டும். யாரையும் உருவக் கேலி செய்யக் கூடாது என்பதைப் பெற்றோர்கள் கற்றுத்தர வேண்டும்.

வானத்தை எட்டிப்பிடிக்க ஏணிகள் தேவையில்லை, விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தாலே போதும். ஒவ்வொரு மனிதரும் தனித்துவம் வாய்ந்தவர் என்பதை உணரும் போது, உருவக் கேலிகள் மறைந்து மனிதாபிமானம் தழைக்கும்.

(ஒளிரும்)

- கட்டுரையாளர்: முனைவர், சிறப்புக் கல்வியியல் நிபுணர்; revbest15@gmail.com