惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

L
LangChain Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
雷峰网
雷峰网
量子位
V
V2EX
S
SegmentFault 最新的问题
月光博客
月光博客
博客园 - 【当耐特】
Hugging Face - Blog
Hugging Face - Blog
V
Visual Studio Blog
大猫的无限游戏
大猫的无限游戏
T
Tailwind CSS Blog
博客园_首页
博客园 - Franky
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
美团技术团队
Y
Y Combinator Blog
The Cloudflare Blog
C
Check Point Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
腾讯CDC
B
Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
P
Proofpoint News Feed

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பைகாரா ஏரியில் படகு போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ...
2026-04-26 · via hindutamil

Updated on

2 min read

கோடை சீசன் என்பதால் ஊட்டி பைகாரா ஏரியில் படகு போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி சுற்றுலா வளர்ச்சிக் கழகம் விடுத்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி பைகாரா ஏரியில் படகு சவாரிக்கு பெட்ரோல், டீசலில் இயங்கும் இயந்திர படகுகள் பயன்படுத்தப்படுவதால் வனப்பகுதியில் ஒலி மாசு ஏற்பட்டு வனவிலங்குகள் பாதிக்கப்படு வதுடன், ஏரி நீரும் மாசடைந்து வருவதாக சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வில் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் தாக்கல் செய்திருந்த அறிக்கையில், அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் படகு சவாரி செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்றும் சுற்றுச்சூழல் மாசுவை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து கோவையில் உள்ள சலீம் அலி பறவையியல் கல்வி நிறுவனம் மற்றும் ஊட்டியில் உள்ள மத்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து பைகாரா ஏரியில் மோட்டார் இயந்திர படகுகளின் ஒலி அளவு, ஏரி நீரின் மாசு ஆகியவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்றும் இதற்கான ஏற்பாடுகளை சுற்றுலா வளர்ச்சிக் கழகம் செய்ய வேண்டுமென்றும் நீதிபதிகள் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்த போது பைகாரா ஏரி ஆய்வு தொடர்பாக எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்பட வில்லை. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் அதிகாரிகளும் ஆஜராகவில்லை. அதையடுத்து நீதிபதிகள் பைகாரா ஏரி தொடர்பான தங்களது முந்தைய உத்தரவை சம்பந்தப்பட்ட சலீம் அலி பறவை யியல் கல்வி நிறுவனம் மற்றும் மத்திய அரசின் மண் மற்றும் நீர் பாதுகாப்பு ஆராய்ச்சி (ஐசிஏஆர்) நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்க கோவை மற்றும் நீலகிரி மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கு உத்தரவிட்டனர்.

அந்த உத்தரவுப்படி நிபுணர்களை நியமித்து அந்த நிறுவனங்கள் பைகாரா ஏரியை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்றும், அதுவரை பைகாரா ஏரியில் பெட்ரோல், டீசலில் இயங்கும் இயந்திர படகுகளை இயக்கக் கூடாது என இடைக்காலத் தடை விதித்தும் விசாரணையை தள்ளிவைத்திருந்தனர்.

ரூ.40 லட்சம் வருவாய் இழப்பு: இந்நிலையில் இந்த வழக்கு இதே அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஏற்கெனவே பைகாரா ஏரியில் படகு போக்குவரத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதால் ரூ.40 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கோடை சீசன் என் பதால் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், பைகாரா ஏரியில் நீர் மாசு மற்றும் ஒலி மாசு தொடர்பான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக அறிக்கைக்காககாத் திருக்கிறோம். அந்த அறிக்கை வந்த பிறகு தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்து விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.