惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
L
LangChain Blog
WordPress大学
WordPress大学
MyScale Blog
MyScale Blog
The Cloudflare Blog
J
Java Code Geeks
Google DeepMind News
Google DeepMind News
Recent Announcements
Recent Announcements
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Y
Y Combinator Blog
有赞技术团队
有赞技术团队
Last Week in AI
Last Week in AI
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Martin Fowler
Martin Fowler
小众软件
小众软件
量子位
月光博客
月光博客
P
Proofpoint News Feed
IT之家
IT之家
腾讯CDC
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 司徒正美
雷峰网
雷峰网
V
Visual Studio Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கடல்சார் பணியாளர்களின் பாதுகாப்பு முக்கியம்: ட்ரம்ப்பிடம்...
செய்திப்பிரிவு · 2026-06-18 · via hindutamil

Updated on: 

பாரிஸ்: இந்​தி​யக் கடல்​சார் பணி​யாளர்​களின் பாது​காப்பு தொடர்​பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்​பிடம் பிரதமர் நரேந்​திர மோடி வலி​யுறுத்​தி​னார்.

ஜி7 அமைப்​பில் அமெரிக்​கா, பிரிட்​டன், பிரான்​ஸ், ஜெர்​மனி, இத்தாலி, கனடா, ஜப்​பான் ஆகிய நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்ளன. இந்த ஆண்​டுக்​கான ஜி7 உச்சி மாநாடு பிரான்​ஸின் ஏவியான் நகரில் கடந்த 15-ம் தேதி தொடங்​கியது.

இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரிட்​டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்​மர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்​ரான், ஜெர்மனி பிரதமர் பிரெட்​ரிக் மெர்​ஸ், இத்​தாலி பிரதமர் ஜார்​ஜியா மெலோனி, கனடா பிரதமர் மார்க் கார்​னி, ஜப்​பான் பிரதமர் சனேடகைச்​சி, ஐரோப்​பிய ஆணை​யத்​தின் தலை​வர் உர்​சுலா வொன் டெர் லியன், ஐரோப்​பியக் கவுன்​சில் தலை​வர் அந்தோணியோ கோஸ்டா உள்​ளிட்​டோர் பங்​கேற்​றுள்​ளனர்.

இதனிடையே, பிரதமர் மோடி கடந்த 13-ம் தேதி டெல்​லி​யில் இருந்து பிரான்ஸ் சென்​றநிலை​யில் அங்​கிருந்து ஸ்லோவேக்கியாவுக்கு பயணம் மேற்​கொண்​டார். அந்​நாட்​டுத் தலை​வர்​களைச் சந்​தித்​துப் பேச்​சு​வார்த்தை நடத்​திய பின்​னர் அவர் ஜி7 மாநாட்​டில் பங்​கேற்​ப​தற்​காக பிரதமர் மோடி நேற்று முன்​தினம் மீண்​டும் பிரான்​ஸுக்கு திரும்​பி​னார்.

பிரான்​ஸின் ஏவி​யான் நகரில் நேற்று முன்​தினம் மாலை நடை​பெற்ற ஜி7 அமர்​வு​களில் பிரதமர் மோடி சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்​றார். ஜி7 மாநாட்​டின் போது அமெரிக்க அதிபர் ட்ரம்​பை, பிரதமர் மோடி நேற்று சந்​தித்​துப் பேசி​னார். இரு தலை​வர்​களும் கைகுலுக்கி கொண்​டனர். இரு​வரும் அரு​கருகே அமர்ந்து 5 நிமிடங்​கள் பேசினர். கடந்த 2025-ம் ஆண்டு பிப்​ர​வரி​யில் அமெரிக்கா​வுக்கு சென்ற மோடி, அதிபர் ட்ரம்பை சந்​தித்​துப் பேசினார்.

அதன் பிறகு அமெரிக்க அரசின் கூடு​தல் வரி விதிப்​பால் இரு நாடுகள் இடையி​லான உறவில் லேசான விரிசல் ஏற்​பட்​டது. இந்தச் சூழலில் சுமார் 16 மாதங்​களுக்​குப் பிறகு அதிபர் ட்ரம்பை அவர் நேற்​று​முன்​தினம் மீண்​டும் சந்​தித்​துப் பேசி​யது முக்கியத்துவம் பெற்​றது.

மாநாடு இறுதி நாள்

இந்​நிலை​யில் மாநாட்​டின் இறுதி நாளான நேற்​று, பிரிட்​டிஷ், கனடா, இத்​தாலி பிரதமர்​கள், ஐக்​கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் ஜயாத் அல் நயான் உள்​ளிட்​டோரை பிரதமர் மோடி தனித்​தனி​யாகச் சந்​தித்​துப் பேசி​னார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்​புட​னும் பிரதமர் மோடி தனி​யாகப் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். காலை​யில் தொடங்​கிய மாநாட்டு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்ற பின்​னர் மதிய உணவு இடைவேளை​யின்​போது அதிபர் ட்ரம்ப்பை பிரதமர் மோடி சந்​தித்​தார்.

அப்​போது உலக அளவில் உள்ள கடல் சார் பணி​யாளர்​களில் 10 சதவீதம் பேர் இந்​தி​யர்​கள் என்​றும், இந்​தி​யக் கடல்​சார் பணி​யாளர்​கள் பாது​காப்​பாக பணி​யாற்ற அமெரிக்கா உதவவேண்​டும் என்று பிரதமர் மோடி அப்​போது வலி​யுறுத்தி​னார். கடல்​சார் பணி​யாளர் உயிருக்​குத் தேவை​யான பாது​காப்பை வழங்​கு​வது தொடர்​பாக​வும், அவர்​கள் அச்​சுறுத்​தல் இல்​லாமல் பணி​யாற்​று​வதன் அவசி​யத்​தை​யும் பிரதமர் மோடி அதிபர் ட்ரம்​பிடம் எடுத்​துரைத்​தார்.

அமெரிக்​கா-ஈ​ரான் இடையே போர் நடை​பெற்று வந்த நிலை​யில், அண்​மை​யில் ஓமன் கடல் பகு​தி​யில் அமெரிக்க ராணுவம் நடத்​திய தாக்​குதலில் 3 இந்​திய மாலுமிகள் உயி​ரிழந்த சம்​பவம் கடந்த வாரம் இரு​நாட்டு உறவில் புதிய சிக்​கலை ஏற்​படுத்​தி​யது. இதைத் தொடர்ந்தே இந்த விவ​காரத்தை பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப்​பிடம் எடுத்​துரைத்​தார் என்று தெரிய​வந்​துள்​ளது.

இந்த சந்​திப்​பின்​போது இரு நாடு​களுக்கு இடையி​லான நல்​லுறவு, பொருளா​தார வளர்ச்​சி, விநி​யோகச் சங்​கி​லிகள், செயற்கை நுண்​ணறிவு (ஏஐ), முதலீட்​டுப் பங்​களிப்​பு​கள், வர்த்​தகம், பாது​காப்பு ஒத்​துழைப்​பு, எரிசக்​திப் பாது​காப்​பு, முக்​கிய கனிமங்​கள், விசா தொடர்​பான விவ​காரங்​கள், மேற்கு ஆசி​யா​வில் ஏற்​பட்​டுள்ள மாற்​றங்​கள் உள்​ளிட்​ட​வை குறித்​து வி​வா​திக்​கப்​பட்​ட​தாகத்​ தெரிய​வந்​துள்​ளது.

பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் புகழாரம்

பிரதமர் மோடி குறித்து அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “இந்தியப் பிரதமர் மோடி மிகவும் அமைதியானவர், நிதானமானவர். எதையும் சாதிக்கக்கூடிய திறமை படைத்தவர். நான் அப்படி இல்லை. அவர் எப்படி இருக்கிறார் பாருங்கள்’’ என்று பாராட்டினார்.

வர்த்தகம் மற்றும் வரிவிதிப்பு விவகாரங்கள் குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலிலும், பிரதமர் மோடிக்கு, அதிபர் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், அவர்களின் அதிகாரப்பூர்வ சந்திப்பு முக்கித்துவம் பெற்றுள்ளது.