惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

罗磊的独立博客
美团技术团队
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Hugging Face - Blog
Hugging Face - Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
月光博客
月光博客
WordPress大学
WordPress大学
The Cloudflare Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园_首页
博客园 - Franky
博客园 - 司徒正美
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
爱范儿
爱范儿
Jina AI
Jina AI
Last Week in AI
Last Week in AI
雷峰网
雷峰网
IT之家
IT之家
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 聂微东
小众软件
小众软件
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
V
V2EX

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
காட்டுக்குள் கேட்ட குரல்கள்! | கதை
2026-05-06 · via hindutamil

Updated on

2 min read

செண்பகக் காட்டின் மலை அணில் வயிறு முட்டப் பழங்களைச் சாப்பிட்டுவிட்டு, நிம்மதியாகக் தூங்குவதற்கு ஓர் இடத்தைத் தேடிக்கொண்டிருந்தது. அப்போதுதான் மலை அடிவாரத்தில் திடீரென முளைத்திருந்த ஓர் இரும்புக் கோபுரம் அதன் கண்ணில் பட்டது. அது ஓர் அலைபேசி நிறுவனம் தனது இணைய சேவைக்காகவும், தகவல் பறிமாற்றத்துக்காகவும் நட்டு வைத்த கோபுரம்.

கோபுரத்தின் உச்சியில் ஏறிப் பார்த்தால் மேகத்தைத் தொட்டுவிடலாம் போலிருக்கிறதே என்று நினைத்த மலை அணில், மடமடவென ஏறியது. சுமார் 60 அடி உயரத்திற்குச் சென்றதும் குளிர்ந்த காற்று வீசியது. இரும்புக் கோபுரத்தில் கவிழ்த்த குடை போலிருந்த ஆண்டெனா பெட்டியை நெருங்கியதும், ‘அப்பாடா, இதுதான் சரியான இடம்’ என்று அதன் அடியில் படுத்துக்கொண்டது மலை அணில்.

சில நிமிடங்களில் அங்கு ஓர் அதிசயம் நிகழ்ந்தது. சில விசித்திரமான குரல்கள் அணிலின் காதுகளில் கேட்கத் தொடங்கின. "வணக்கம்! நான் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுகிறேன். உங்கள் உயிருக்கு நாங்கள் பாதுகாப்பு தருகிறோம். மிகக் குறைந்த பிரீமியத்தில் மாதம் வெறும் 500 ரூபாய் கட்டினால் போதும்" என்று சொன்னதைக் கேட்ட மலை அணில் அதிர்ச்சி அடைந்தது.

சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தது. ஆனால் யாரையும் காணோம். ‘யார் அது? என் உயிர் பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. ஒருவேளை நான் மரத்திலிருந்து குதிக்கும்போது வால் துண்டானால் புதிய வால் தருவார்களா?’ என்று தனக்குத்தானே பேசிக்கொண்டது.

அடுத்து ஒரு பெண் குரல், "சார், உங்களுக்கு கிரெடிட் கார்டு வேண்டுமா? வாழ்நாள் முழுவதும் இலவசமாக எதை வேண்டுமானாலும் வாங்கலாம். ஒரு மாதத்துக்குப் பிறகு பணம் கட்டலாம்” என்றது. ‘எனக்குத் தேவையான பழங்களையும் பருப்புகளையும் நானே உழைத்துச் சம்பாதித்துக்கொள்வேன். எனக்கு எதுக்கு இந்தக் கடன் அட்டை?’ என்று நினைத்த அணிலுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

அடுத்து வந்த குரலோ இன்னும் வேடிக்கை. “வாழ்த்துகள்! நீங்கள் 5 கோடி குலுக்கல் லாட்டரியில் வென்றிருக்கிறீர்கள். உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைத் தந்தால் பணத்தை அனுப்பி வைப்போம்” என்றது.

அணில் இப்போது பரபரப்பானது. ‘5 கோடியா? ஒருவேளை 5 கோடி நிலக்கடலைகளாக இருக்குமோ? அந்த அளவு கடலை கிடைத்தால் வாழ்நாள் முழுவதும் கவலையே இருக்காது. வங்கி என்றால் எறும்புகள் சேமித்து வைக்கும் குழியைப் போன்றதா? ஆனால், எதையும் பத்திரமாகக் கையாள வேண்டும். தப்பித் தவறி கறையான் புற்றில் 5 கோடியைப் பத்திரப்படுத்தினால் கறையான்கள் தின்றுவிடுமே’ என்று கவலைப்பட்டது.

எதிர்பாராத நேரத்தில் ஓர் எச்சரிக்கைக் குரல் கேட்டதும் அணிலுக்குப் பயம் அதிகரித்தது. "உங்கள் ஏ.டி.எம் கார்டு முடக்கப்பட்டுள்ளது. அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர உங்களின் ரகசிய எண்ணைச் சொல்லுங்கள்" என்கிற வார்த்தைகளைக் கேட்ட அணிலுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரே குழப்பம்.

மலை அணில் பயத்தில் எழுந்து உட்கார்ந்தது. “ஐயோ, இங்கு எனக்கு எதிராக ஏதோ சதி நடக்கிறது. நான் பருப்புகளையும், நிலக்கடலைகளையும் ஒளித்து வைத்திருக்கும் 3 மரப்பொந்துகள் பற்றி அந்த எலி தகவல் தந்திருக்குமோ? என் ரகசிய இடத்தை யாரிடமும் சொல்ல மாட்டேன்” என்று தலையை ஆட்டியது.

தொடர்ந்து வந்த அழைப்புகள் மலை அணிலைக் குழப்பத்தில் ஆழ்த்தின. கடைசியாக ஒரு நிறுவனத்தின் மேலாளர், "நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு 24 மணிநேரமும் சேவை செய்கிறோம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களை அழைக்கலாம்..." என்றார் கரகரத்த குரலில்.

அப்போதுதான் மலை அணிலுக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. சில நாள்களுக்கு முன் காட்டில் முகாமிட்டிருந்த மனிதர்கள், சிக்னல் கிடைக்கவில்லை என்று கோபுரத்தின் அடியில் நின்று கத்திக்கொண்டிருந்தார்கள்.

‘இது மனிதர்களின் குரல். 24 மணி நேரமும் யாரோ ஒருவரிடம் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு நிமிடம்கூட அமைதியாக இயற்கையை ரசிக்கவோ, பறவைகளின் பாட்டைக் கேட்கவோ நேரம் ஒதுக்குவதில்லை. எப்போதும் எதையாவது வாங்க, விற்க ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். கை நிறையப் பணம் இருந்தாலும், நிம்மதியாகத் தூங்க ஒரு நல்ல மரக்கிளைகூட மனிதர்களுக்குக் கிடைப்பதில்லை போலிருக்கிறது’ என்று பரிதாபப்பட்டது மலை அணில்.

திடீரெனக் கோபுரத்திலிருந்து ஒரு பலமான ‘பீப்' சத்தம் கேட்க, மலை அணில் காதுகளைப் பொத்திக்கொண்டு, “ஆளை விடுங்க. எனக்கு இன்சூரன்ஸும் வேண்டாம், 5 கோடியும் வேண்டாம். எனக்கான காடு, என் மரம், நான் சேமித்த பழங்கள், பருப்புகள்... இவையே எனக்குப் போதும்” என்று கத்திக்கொண்டே கீழே இறங்கியது.

வேகமாக ஓடிவந்த மலை அணில் ஆலமரப் பொந்திற்குள் புகுந்துகொண்டது. அங்கு வந்த பக்கத்து மர அணில், “எங்கே போயிருந்தாய்?” என்று கேட்டது. “மனிதர்களின் உலகத்திற்குப் போனேன்.

அவர்கள் எப்போதும் யாருடனாவது பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.” “நமக்கு அந்தத் தொல்லை இல்லை. நிம்மதியாகத் தூங்கு” என்றது பக்கத்து மர அணில். அன்று இரவு மலை அணில் எந்தத் தொந்தரவும் இன்றி நிம்மதியாக உறங்கியது.