惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Y
Y Combinator Blog
D
Docker
有赞技术团队
有赞技术团队
D
DataBreaches.Net
The GitHub Blog
The GitHub Blog
爱范儿
爱范儿
H
Help Net Security
美团技术团队
MyScale Blog
MyScale Blog
B
Blog RSS Feed
C
Check Point Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
A
About on SuperTechFans
小众软件
小众软件
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
GbyAI
GbyAI
G
Google Developers Blog
月光博客
月光博客
Google DeepMind News
Google DeepMind News
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Blog — PlanetScale
Blog — PlanetScale
MongoDB | Blog
MongoDB | Blog
F
Fortinet All Blogs

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சுதந்திர நாடுகள் மீது தனது கொள்கையை திணிக்கும் நிலையில் இ...
2026-04-28 · via hindutamil

ஈரான் அரசுக்கு ஆதரவாகவும் அமெரிக்காவுக்கு எதிராகவும் தலைநகர் தெஹ்ரான் வீதிகளில் போராடும் பொதுமக்கள்

Updated on

1 min read

தெஹ்ரான்: “பிறநாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பதை அமெரிக்காவால் இனி திணிக்க முடியாது. சுதந்திரமான நாடுகள் மீது தனது கொள்கையை திணிக்கும் நிலையில் இனி அமெரிக்கா இல்லை.” என்று ஈரான் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரெசா தலாய் நிக் தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆசிய போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்காவுக்கு ஈரான் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ள நிலையில், ஈரான் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரெசா தலாய் நிக் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “பிறநாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பதை அமெரிக்காவால் இனி திணிக்க முடியாது. சுதந்திரமான நாடுகள் மீது தனது கொள்கையை திணிக்கும் நிலையில் இனி அமெரிக்கா இல்லை. தனது சட்டவிரோத, பகுத்தறிவற்ற கோரிக்கைகளை கைவிட வேண்டும் என்ற ஈரானின் கோரிக்கையை அமெரிக்கா ஏற்கும்” என தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்கள், உலகின் அனைத்து நாடுகளையும் பாதித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ், “அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களால் கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. ஒவ்வொரு கடற்கரை நாட்டையும் மட்டுமல்லாது, நிலத்தால் சூழப்பட்ட நாட்டையும் இது பாதிக்கிறது. உலக அளவில் அதிகரித்து வரும் பிளவுகள் நம்பிக்கையை அரித்து, சர்வதேச சட்டத்துக்கு சவால் விடுத்து கூட்டுப் பாதுகாப்பின் அடித்தளங்களை சிதைக்கின்றன” என தெரிவித்துள்ளார்.

ஈரான் - அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும் அது நிச்சயமற்றதாக இருப்பதால், கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் 2.8% உயர்ந்து ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய் 109 அமெரிக்க டாலருக்கு விற்பனையாகிறது. ஹார்முஸ் ஜலசந்தி பெரும்பாலும் கடக்க முடியாத நிலையில் உள்ளதால் அந்த பகுதியில் அசாதாரண சூழலே நிலவி வருவதாக புளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. உலகில் எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டிருக்கும் இந்த கடற் பாதை முடக்கப்பட்டுள்ளதால், பல நாடுகளில் எண்ணெய் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. எனவே, மோதலை விரைவாக முடிவுக்குக் கொண்டு வர இந்தியா உட்பட பல நாடுகள் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.