惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

H
Help Net Security
大猫的无限游戏
大猫的无限游戏
雷峰网
雷峰网
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 聂微东
V
Visual Studio Blog
爱范儿
爱范儿
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
美团技术团队
有赞技术团队
有赞技术团队
云风的 BLOG
云风的 BLOG
Google DeepMind News
Google DeepMind News
Blog — PlanetScale
Blog — PlanetScale
The Cloudflare Blog
Engineering at Meta
Engineering at Meta
博客园 - 三生石上(FineUI控件)
WordPress大学
WordPress大学
Vercel News
Vercel News
F
Fortinet All Blogs
Last Week in AI
Last Week in AI
M
MIT News - Artificial intelligence
小众软件
小众软件
月光博客
月光博客
A
About on SuperTechFans

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அதிகரிக்கும் ஆலை விபத்துகள் | சொல்... பொருள்... தெளிவு
உதயசங்கரன் பாடகலிங்கம் · 2026-06-17 · via hindutamil

Updated on: 

கடந்த ஜூன் 7 அன்று குஜராத்தின் சூரத் நகரில் ஓர் ஆலையில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட நான்கு பேர் நச்சுவாயு தாக்கி உயிரிழந்தனர். மறுநாள் (ஜூன் 8) விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் கொள்கலன் வெடித்துச் சிதறியதில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

பாதுகாப்பு நெறிமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டனவா, ஒப்பந்தப் பணியாளர்கள் இருப்பு முறையாகப் பேணப்பட்டதா என்கிற கேள்விகளை இந்த இரண்டு சம்பவங்களும் எழுப்புகின்றன.

பணியாளர் பாதுகாப்பு

சம்பவம் 1: சூரத்தின் அஸ்வினிகுமார் பகுதியில் நகைகள் செய்யும் இடம் ஒன்றில், கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் மூன்று பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு பணியாளருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆபத்துக்குள்ளான நிலையில், அவரைக் காப்பாற்ற மற்ற இரண்டு பணியாளர்களும் அவர்களின் கண்காணிப்பாளரும் முயன்றனர்.

ஆனால், நால்வரும் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். முன்னதாக, நிலைமையை உணர்ந்த கண்காணிப்பாளர்தான் சம்பவம் பற்றித் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்திருந்தார். விபத்து நடந்த இடத்தில் பாதுகாப்புக் கருவிகள் ஏதுமில்லை. பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை. அண்மைக்காலமாக சூரத்தில் இதே போன்ற முறையில் உயிரிழப்புகள் தொடர்ச்சியாகப் பதிவாகிவருகின்றன.

சம்பவம் 2: விசாகப்பட்டினம் ராஷ்ட்ரிய இஸ்பத் நிகம் லிமிடெட்டின் (RINL) எஃகு உருக்கும் பிரிவு 1இல் விபத்து நேரிட்டதில் 10 பேர் இறந்ததுடன் 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.

இதையடுத்து, 22 பணியாளர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு, காயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்கான நிதியுதவி உள்ளிட்டவை மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. விசாரணை மேற்கொள்ள நிபுணர் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

2012இல் இதே எஃகு ஆலையில் நிகழ்ந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். அப்போதும், இதே போன்ற நிர்வாகரீதியிலான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பணியிடங்களில் விபத்துகளைத் தடுப்பதற்குத் தேவையான நிறுவனரீதியிலான வழிமுறைகளை வரையறுப்பதில் இந்தியாவில் நிலவும் பற்றாக்குறை நிலைமையை இது வெளிக்காட்டுகிறது.

பணியாளர்கள் எண்ணிக்கை குறைப்பு, அதிகப் பணிச்சுமை, நாள்பட்ட இயந்திரங்கள், ஒத்திவைக்கப்பட்ட பராமரிப்புப் பணிகள், ஒப்பந்தத் தொழிலாளர்களைச் சார்ந்திருத்தல் அதிகரிப்பு ஆகியவற்றை விசாகப்பட்டினம் ஆலையில் நிலவிய பிரச்சினைகளாகத் தொழிற்சங்கத்தினரும் முன்னாள் பணியாளர்களும் தெரிவித்திருக்கின்றனர்.

தரமற்ற மூலப்பொருள்கள், உற்பத்தியை அதிகரித்தாக வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளிட்டவையும் விபத்துக்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன. இந்த எஃகு ஆலையைத் தனியார்மயப்படுத்தும் வகையில் மத்திய அரசு தனது பங்குகளைத் திரும்பப்பெறுகிற முடிவைச் செயல்படுத்தியதும், முதலீடுகள் குறைந்ததால் ஏற்பட்ட சிரமங்களை ஆலை எதிர்கொள்ள வேண்டியிருந்ததும் பிற காரணிகளாகச் சொல்லப்படுகின்றன.

ஒப்பந்தப் பணியாளர்கள் நிலை

நிறுவனரீதியிலான பலவீனங்கள் அதிகரிக்கும் போதுதான் பெரிய ஆலைகளில் பெரும்பாலும் விபத்துகள் நிகழ்கின்றன. இவ்விரு விபத்துகளிலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இழப்புக்கு உள்ளாகியிருப்பது பொதுவான அம்சமாக இருப்பது தற்செயலானது அல்ல.

ஒப்பீடு அடிப்படையில், நிரந்தரப் பணியாளர்களைவிட அதிக ஆபத்தான பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவது பணியிடப் பாதுகாப்பு சார்ந்த ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது.

குறைந்த பயிற்சி, அமைப்பாகத் திரள முடியாத நிலைமை உள்ளிட்டவற்றை ஒப்பந்தத் தொழிலாளர்கள் எதிர்கொண்டுவருவது இவ்விபத்துகளில் தெளிவாகத் தெரிகிறது. பணியாளர் பற்றாக்குறை, ஆபத்தான பணிகளில் சாதி, வர்க்க அடிப்படையில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுதல், நிதி நெருக்கடிக்கு உள்ளான நிறுவனங்களில் பணியாளர் பாதுகாப்பைவிட மற்ற செலவுகளுக்கு முக்கியத்துவம் தருவது ஆகியனவும் முக்கியக் காரணிகளாகச் சொல்லப்படுகின்றன.

பெரும்பாலான ஆலைகளில் பணியாளர் எண்ணிக்கைக்கு ஏற்பப் பாதுகாப்புக் கட்டமைப்பு வலுப்படுத்தப்படுவது இல்லை. அமைப்புரீதியாகத் திரள்கிற சாத்தியங்களை நிரந்தரப் பணியாளர்கள் கொண்டிருப்பதால், அதை முன்வைத்தே பல இடங்களில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.

இன்னொரு புறம், இந்தியாவில் புதிய தொழில்சார் பாதுகாப்பு நடைமுறைகள் (Occupational Safety Framework) சீரற்ற வகையிலும் படிப்படியாகவும் செயல்படுத்தப்படுகிற நிலையில், இந்த விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. இதுபோன்ற விபத்துகளைப் பதிவுசெய்வதில் இருக்கிற குறைகளும் தற்போது பூதாகரமாகி வருகின்றன.

போதுமான கண்காணிப்பு இல்லாமை

தொழிலாளர் பாதுகாப்புத் தரவுகளைத் திரட்டும் தொடக்க நிலையிலேயே பிரச்சினைகள் தொடங்குகின்றன; ஆலை ஆலோசனை சேவை, தொழில் நிறுவனங்களுக்கான தலைமை இயக்குநரகத்தின் (DGFASLI) வருடாந்திர நிலையான விளக்கக் குறிப்புகளில் (SRNs) இருக்கிற இடைவெளி இதை வெளிப்படுத்துகிறது.

பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம், பணிச்சூழல் (OSH) நெறிமுறைகள் 2020-ஐச் செயல்படுத்த இந்த இயக்குநரகம் உதவிய நிலையில், மேற்சொன்ன விதிகள் கடந்த மாதம்தான் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக, இயக்குநரகத்தின் பெயரானது பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரத் தலைமை இயக்குநரகம் என்று மாற்றப்பட்டிருக்கிறது.

நிலையான விளக்கக் குறிப்பு ஆவணங்களில் ஆலை விபத்துகள் இரண்டு பிரிவுகளில் பதிவு செய்யப்படுகின்றன. தொழிலாளர் பணியகம், ஆலைகளுக்கான தலைமை ஆய்வாளர்களிடம் இருந்து டிஜிஎஃப்ஏஎஸ்எல்ஐ திரட்டுபவை என இந்த இரு வேறு தரவுகளும் ஒருபோதும் பொருந்திப்போவதே இல்லை.

கடந்த 10 ஆண்டுகளில் ஆலைகளில் தீ விபத்துகளால் உயிரிழந்தோர், காயமடைந்தோர் குறித்த இந்த இரண்டு தரவுகளிலும் வித்தியாசம் உள்ளது; அதேநேரத்தில், இந்திய விபத்து மரணங்கள் - தற்கொலைகள் (ADSI) அறிக்கையில் உள்ள எண்ணிக்கையில் மூன்றில் ஒருபங்கு மட்டுமே இவை இரண்டிலும் இருப்பது இன்னொரு முரண்.

தேசிய அளவில் ஆலை ஆய்வாளர்கள் குறைவாக இருப்பதால் அவர்கள் கண்காணிக்கிற ஆலைகளும் கணிசமாகக் குறைந்தது, அவற்றின் பாதுகாப்பின்மையைக் காட்டுகிறது.

தேசிய அளவில் தொழில் துறைப் பாதுகாப்பு ஆணையம் போன்ற ஓர் அமைப்பை நிறுவுதல், தொழில்நுட்பரீதியிலான கண்காணிப்பை வலுப்படுத்துதல், சீரான பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துதல், பணியாளர் பயிற்சி / பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்துதல், ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பாதுகாத்தல், அவசரகாலத் தயார்நிலை / மீட்பு நடவடிக்கைகளைத் தரம் உயர்த்துதல் எனப் பல அம்சங்களின் வழியே ஆலை விபத்துகளால் தொழிலாளர்கள் நசிவதைப் பெருமளவில் தடுக்க முடியும்.