惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Microsoft Security Blog
Microsoft Security Blog
Recent Announcements
Recent Announcements
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Last Week in AI
Last Week in AI
罗磊的独立博客
腾讯CDC
云风的 BLOG
云风的 BLOG
月光博客
月光博客
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 三生石上(FineUI控件)
宝玉的分享
宝玉的分享
U
Unit 42
I
InfoQ
D
DataBreaches.Net
Blog — PlanetScale
Blog — PlanetScale
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
V
V2EX
美团技术团队
IT之家
IT之家
Stack Overflow Blog
Stack Overflow Blog
F
Fortinet All Blogs
GbyAI
GbyAI
S
SegmentFault 最新的问题

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“திமுக மீண்டும் ஆட்சிக்கு வராமல் இருப்பதை உறுதி செய்ய உதய...
2026-05-14 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: இந்து மதத்தை தாக்குவதன் மூலம் திமுக மீண்டும் ஆட்சிக் வராமலேயே இருப்பதை உறுதிசெய்ய உதயநிதி ஸ்டாலின் விரும்புகிறார். நித்தியமான அந்த சனாதன தர்மம் அவரது விருப்பத்தை நிறைவேற்றி வைக்கட்டும் என்று ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்துப் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனது உரையின் இறுதியில், ”மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்” எனக் கூறி முடித்தார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்தக் கருத்துக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர், “உதயநிதி ஸ்டாலின் தமிழில் சனாதனம் என்பதை திரும்பத் திரும்ப தாக்கிப் பேசும்போது, மிகுந்த மதப்பற்று கொண்ட தமிழ் இந்துக்களிடையே ஏன் அதிகப்படியான கொந்தளிப்பு ஏற்படவில்லை?

இதற்கு காரணம் மொழிதான் என்று நான் கருதுகிறேன்.

தமிழ் மொழியில் சனாதனம் (நித்தியமானது என்று பொருள்படும்) என்ற சொல் வழக்கமான பயன்பாட்டில் இல்லை. பெரும்பாலான தமிழ் மக்களுக்கு இந்த சொல் பற்றி தெரியாது. சிறுவயதில் எனக்கே கூட இச்சொல் பற்றி தெரிந்திருக்கவில்லை.

அதேநேரத்தில், தர்மம் அல்லது தருமம் என்ற சொல் மிகவும் பரவலாகப் புழக்கத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் தர்மபுரி என்ற பெயரில் ஒரு மாவட்டமே உள்ளது. மேலும், தர்மம் என்ற சொல்லுக்கு இணையான அதே பொருளில் தமிழில் அறம் என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது.

சுவாரஸ்மான விஷயம் என்னவென்றால் இந்தி மொழியில் தரம் (dharam) என்ற சொல் பொதுவாக மதம் என்பதையே குறிக்கிறது. அதன்படி, இந்து மதம் என்பது இந்து தரம் அல்லது சனாதன தரம் என்றும் கிறிஸ்தவ மதம் என்பது ஈசாய் தரம் என்றும் இந்தியில் அழைக்கப்படுகிறது.

ஆனால், தமிழ் மொழியின் பயன்பாட்டில் தர்மம் என்ற சொல் இந்தியில் குறிக்கப்படும் இந்து தரம் என்பதையே நடைமுறையில் உணர்த்துகிறது.

இப்போது உதயநிதி ஸ்டாலின் தமிழில் தர்மம் என்பதைத் தாக்கிப் பேசி இருந்தால் (தமிழில் அச்சொல் நடைமுறையில் இந்து மதம் என்பதையே குறிப்பதால்) அவர் அதர்மத்தைப் போதிப்பதாகக் கூறி பரவலான விமர்சனத்துக்கு உள்ளாகி இருப்பார்.

அதனால்தான் அவர் தாக்குவதற்கு சனாதனம் என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஏனெனில், அச்சொல் தமிழ் மக்களிடையே பரவலாக அறியப்பட்ட ஒன்றாக இல்லை.

தனது உண்மையான முயற்சிகள் அனைத்தின் மூலமாகவும் அவர் அச்சொல்லை தமிழ் மக்களிடையேயும் பிரபலப்படுத்தி வருகிறார். மேலும், தமிழ்நாட்டில் ஏற்கனவே வலுவாக இருந்த திமுகவுக்கு எதிரான வாக்குகளை அவர் இன்னும் அதிகப்படுத்தி உள்ளார். திமுகவுக்கு எதிரான அந்த பலத்த அலை காரணமாகவே அக்கட்சியால் இதுவரை எந்த தேர்தலிலும் தனித்து வெற்றிபெற முடிந்ததில்லை.

இந்து தெய்வங்கள் மீது அவர்கள் தொடர்ந்து தொடுத்து வந்த தாக்குதல்களின் மூலமாகவே திமுகவுக்கு எதிரான அந்த அலையை அவர்கள் உருவாக்கினார்கள். அதிமுக ஒருபோதும் அத்தகைய தாக்குதல்களை நடத்தியதில்லை. மாறாக, திமுகவுக்கு எதிரான அந்த அலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் அறுவடை செய்தார்கள்.

இப்போது திமுகவுக்கு எதிரான புதிய கட்சியாக தவெக உருவெடுத்துள்ள போதிலும், திமுகவுக்கு எதிரான வாக்குகள் அதிமுகவும் பிரித்துக்கொண்டபோதிலும், திமுக மிக அதிகமான பணத்தைச் செலவழித்திருந்தபோதிலும், திமுக வலுவான கூட்டணிக் கட்சிகளைக் கொண்டிருந்த போதிலும், தவெகவுக்கு எந்த கூட்டணியும் இல்லாத போதிலும் திமுக இந்த தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வராமலேயே இருப்பதை உறுதி செய்ய உதயநிதி விரும்புகிறார். நித்தியமான அந்த சனாதன தர்மம், அவரது விருப்பத்தை நிறைவேற்றி வைக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.