惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Jina AI
Jina AI
月光博客
月光博客
F
Fortinet All Blogs
Stack Overflow Blog
Stack Overflow Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
Visual Studio Blog
小众软件
小众软件
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 司徒正美
P
Proofpoint News Feed
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
M
MIT News - Artificial intelligence
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
B
Blog RSS Feed
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
S
SegmentFault 最新的问题
博客园_首页
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
J
Java Code Geeks
L
LangChain Blog
博客园 - 聂微东
G
Google Developers Blog
博客园 - Franky

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“முதல்வர் விஜய் ‘கட்சி நிதி’ என்றதும் திமுகவுக்கு பயம் ஏன...
தமிழினி · 2026-06-23 · via hindutamil

Updated on: 

சென்னை: “முதல்வர் விஜய் தனது உரையில் ‘பார்ட்டி ஃபண்ட்’ எனச் சொன்னவுடன் திமுகவுக்கு ஏன் பயம் என தெரியவில்லை. அவர்கள் வெளியேறிவிட்டனர்” என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “முதல்வர் உரை தொடங்கியுடன் அவர், ‘பார்ட்டி ஃபண்ட்’ என சொன்னவுடன், திமுகவுக்கு என்ன பயம் எனத் தெரியவில்லை. பேரவையில் இருந்து அவர்கள் வெளியேறிவிட்டனர்.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தனது அறையில் அமர்ந்து, முதல்வரின் உரையை கேட்டுவிட்டு, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவருக்கு என் நன்றி. ஒவ்வொருக்கும் ஒவ்வொரு பாணி உள்ளது. எனக்கு ஒரு பாணி, கருணாநிதிக்கு ஒரு பாணி என அனைவருக்கும் ஒவ்வொரு பாணி உள்ளது. அப்போதும், எம்ஜிஆரை இப்படித்தான் பேசினார்கள். அதே டெக்னிக்கை தான் இப்போதும் பின்பற்றுகிறார்கள். இதை அவர்கள் மாற்றப் போவதில்லை.

கடந்த ஆட்சியில் பணம் இல்லாமல், டிரான்ஸ்ஃபர் நடக்கவில்லை. ஆனால், இப்போது அப்படி இல்லை. திமுக ஆட்சியில் சாமானிய, ஏழை, எளிய மக்கள் சட்டப்பேரவைக்குள் வந்தது இல்லை; புரோக்கர்கள் மட்டுமே வந்தனர். ஆனால், இப்போது, ஒவ்வொரு அமைச்சரையும் சாதாரண ஏழை, எளிய மக்கள் சந்திக்கின்றனர். இதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு துறைக்கும் பி.ஏ.க்களை நியமித்து வசூல் செய்யும் வேலையைதான் அவர்கள் செய்தனர்.

எடப்பாடி பழனிசாமியையும் சந்திக்க நேரம் கேட்டோம். ஆனால் அவர்கள், தற்போது அதிமுகவில் உட்கட்சி பிரச்சினை உச்சத்தில் இருப்பதால், தற்போது சந்திப்பு நடந்தால் நன்றாக இருக்காது என சொல்லிவிட்டனர். எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக போன் கிடையாது. அவரை சுற்றியிருக்கும் மூன்று, நான்கு பேருக்குதான் தொடர்பு கொள்ள வேண்டும். அதனால் அவர்களை தொடர்பு கொண்டுதான் பேசினோம். இதனால், அதிமுகவின் அடுத்தகட்ட தலைவர்களை சந்திக்கலாம் என நினைத்தோம். அந்தச் சந்திப்பு மரியாதை நிமிர்த்தமாக தான் நடந்தது. அவர்களை வைத்து வாக்கேடுப்பில் நாங்கள் வெற்றிபெற்றோமா?

நான் முதல்வன் திட்டத்தை யாரும் முடக்கவில்லை. ஒவ்வொரு திட்டத்தின் பெயரும் அதன், செயல்பாடு சார்ந்து இருக்க வேண்டும். அந்தப் பெயரில் பல்வேறு குழப்பம் இருக்கிறது.

பார்ட்டி ஃபண்ட் உங்கள் கட்சியில் இல்லையா? 30 ஆயிரம் கோடி ரூபாய் குறித்து அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் பிடிஆரிடம் கேளுங்கள். இது பார்ட்டி ஃபண்டா இல்லையா எனக் கேளுங்கள். இது குறித்து விசாரணை நடத்தலாமா வேண்டாமா எனக் கேளுங்கள்.

சட்டம் - ஒழுங்கு குறித்து தெளிவாக முதல்வர் சொல்லிவிட்டார். எங்கள் உறுப்பினர்கள் பேரவைக்குள் அமைதியாகவே இருந்தனர். அவர்கள்தான் கத்திக் கொண்டிருந்தனர். தற்போது பார்ட்டி ஃபண்ட் ஒழிக்கப்பட்டுவிட்டது” என்று அவர் தெரிவித்தார்.