惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

月光博客
月光博客
Martin Fowler
Martin Fowler
cs.CL updates on arXiv.org
cs.CL updates on arXiv.org
Stack Overflow Blog
Stack Overflow Blog
C
Check Point Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
B
Blog
O
OpenAI News
云风的 BLOG
云风的 BLOG
Threat Intelligence Blog | Flashpoint
Threat Intelligence Blog | Flashpoint
L
LangChain Blog
V
Vulnerabilities – Threatpost
P
Privacy & Cybersecurity Law Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
H
Help Net Security
博客园 - 三生石上(FineUI控件)
C
Cyber Attacks, Cyber Crime and Cyber Security
N
News | PayPal Newsroom
The Register - Security
The Register - Security
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
T
Threat Research - Cisco Blogs
C
Cisco Blogs
www.infosecurity-magazine.com
www.infosecurity-magazine.com
Vercel News
Vercel News
宝玉的分享
宝玉的分享
T
Tailwind CSS Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Attack and Defense Labs
Attack and Defense Labs
人人都是产品经理
人人都是产品经理
S
Security Affairs
爱范儿
爱范儿
Engineering at Meta
Engineering at Meta
T
Tor Project blog
大猫的无限游戏
大猫的无限游戏
L
Lohrmann on Cybersecurity
aimingoo的专栏
aimingoo的专栏
K
KPMG report finds enterprise disconnect between AI and its ROI | CIO
博客园 - 【当耐特】
V
V2EX
V
Visual Studio Blog
The GitHub Blog
The GitHub Blog
雷峰网
雷峰网
WordPress大学
WordPress大学
Exploit-DB.com RSS Feed
Exploit-DB.com RSS Feed
L
LINUX DO - 最新话题
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Schneier on Security
Schneier on Security
小众软件
小众软件
PCI Perspectives
PCI Perspectives

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம் இந்தியாவின் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி ஒரு மாதத்தில் 40%-லிருந்து 60% ஆக உயர்வு விஜய் தனிக்கட்சி தொடங்கியிருப்பது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம் “இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டே பழகிவிட்டேன்” - செங்கோட்டையன் ஒப்புதல் “ஸ்டாலினும், உதயநிதியும் டெல்டாக்காரர்கள் அல்ல...உல்டாக்காரர்கள்” - டிடிவி.தினகரன் நக்கல் “திமுக இனி ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது” - அண்ணாமலை கருத்து “மக்களவைத் தேர்தல் என ஸ்டாலின் நினைக்கிறார்” - அன்புமணி கிண்டல் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 ஏப்ரல் 2026 ஜோதிட நாள்காட்டி 12.04.2026 | பங்குனி 29 - ஞாயிற்றுக்கிழமை திமுக கூட்டணியை ஆதரித்து ஏப். 17 முதல் கமல் பிரச்சாரம் ‘ஜனநாயகன்’ படத்தை கசிய விட்டது யார்? - சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை தருமபுரி தொகுதியில் தடம் பதிப்பது யார்? பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: ஐசியூ-வில் தீவிர சிகிச்சை திருப்பத்தூர் தொகுதியில் திருப்பம் யாருக்கு? “பாஜகவுடன் சேர்ந்து ஜேடியு தலைவர்கள் நிதிஷ் குமாருக்கு எதிராக சதி செய்தனர்” - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு பிடிஆர் Vs சுந்தர்.சி: வெடித்த வார்த்தைப் போர் - மதுரை மத்திய தொகுதியில் நடப்பது என்ன? “என்டிஏ வந்தால் மீண்டும் தமிழகத்தை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவர்” - முதல்வர் ஸ்டாலின் “திமுக ஆட்சியில் கனிமவள கொள்ளை தீவிரம்” - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு The Voice of Hind Rajab: எல்லாரும் கேட்க வேண்டிய குரல் | சினிமாவும் அரசியலும் 26 தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்? திருத்துறைப்பூண்டி தொகுதியில் ‘திக் திக்’ வெற்றி யாருக்கு? உத்திரமேரூர் உக்கிரம் எடுக்கும் தேர்தல் பிரச்சாரம் காக்கி சர்க்கஸ்: நகைச்சுவை வெடிப்பும் காதலின் துடிப்பும் | ஓடிடி திரைப் பார்வை “ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கட்டணம் விதிக்க அமெரிக்கா அனுமதிக்காது” - ட்ரம்ப் உறுதி சங்கராபுரம் தொகுதியில் வெல்லப்போவது யார்? “மேற்கு வங்கத்தை கூட்டாக கொள்ளையடிப்பவர்களுக்கு தண்டனை உறுதி” - அமித் ஷா “தேதி குறித்து கள் இறக்குவேன்; என்னை சுடுங்கள் பார்க்கலாம்...” - சீமான் சவால் மடத்துக்குளம் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்? திருப்பத்தூர் தொகுதியில் தவெகவின் மாற்று வேட்பாளர் சுயேட்சையாக போட்டி! ஆயிரம் விளக்கு தொகுதியில் அனல் பறக்கும் ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள் கூடலூரில் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா திமுக? தி.நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சிகள் “திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” - பிரதமர் மோடி மேஷம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் “இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதற்கான நிதி குறித்து விளக்க வேண்டும்” - வெங்கய்ய நாயுடு ஆர்.கே.நகர் தொகுதியில் வீதிகளில் வலம்வரும் வேட்பாளர்கள் “மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது” - குஷ்பு ‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானது பற்றி சிபிஐ விசாரணை கோர விஜய் தயாரா? - பாஜக கேள்வி “அடுத்த 10 நாட்களுக்கு...” - தவெகவினருக்கு விஜய் வைத்த கோரிக்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஜே.டி. வேன்ஸ், முகம்மது பாகர் கலிபா இஸ்லாமாபாத் வருகை தலைமைச் செயலர் மாற்றம், சந்தீப் மிட்டல் நியமனத்தை திரும்பப்பெறுக - தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு கடிதம் “234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” - முதல்வர் ஸ்டாலின் மதுபாலா பயோபிக்​கில் சாரா அர்ஜுன் ரிஷபம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் LiK - விமர்சனம்: பிரதீப் ரங்கநாதனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் காதல் கதை எப்படி? பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பட்டையை கிளப்பப்போவது யார்? மோச​மான வதந்​தி​களை பரப்பிய ஹீரோ: சோமி அலி புகார் 7 உண்​மைச் சம்​பவங்​களை மையப்படுத்​திய ‘மிஸ்டர் எக்ஸ்’ - இயக்​குநர் தகவல் மலையாள இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் தமிழகத்தில் வணிக ரீதியான எல்பிஜி ஒதுக்கீட்டை 70% அதிகரிக்க நடவடிக்கை: இந்திய எண்ணெய் கழகத் தலைவர் தகவல் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வரின் தனிச்செயலர் மீது நடவடிக்கை கோரி வழக்கு சினி​மா​வில் 21 வருடங்கள்: நடிகை தமன்னா நெகிழ்ச்சி “முன்மாதிரி தொகுதியாக தாம்பரம் மாற்றப்படும்” - அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உறுதி தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் புதுச்சேரியில் ஏப்.19-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி! இந்​தி​யில் மீண்டும் நிமிஷா சஜயன் மத்திய பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: தேர்தலை சுதந்திரமாக நடத்த அறிவுறுத்தல் வட அமெரிக்கா​வில் இளையராஜா இசை சுற்றுப்பயணம் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி நீக்கம்: செல்வப்பெருந்தகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா வழக்கு “பயிற்சியில் 150 சிக்ஸர்கள் வரை விளாசுவேன்” - லக்னோ அணியின் புதிய ஹீரோ முகுல் சவுத்ரி ‘காசி’ தொகுதி சலசலப்பு | உள்குத்து உளவாளி “பேட்ஸ்மேன்களின் சாதுர்யத்தால் டி20 மாறிவிட்டது” - மனம் திறக்கும் நடராஜன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் “நடுவர் செய்த தவறால் லக்னோவிடம் தோற்றோம்” - கொல்கத்தா அணியின் ரோவ்மன் பாவல் ஆதங்கம் வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? - டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இன்று மோதல் இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்! மாதவிடாய் குறித்து சர்ச்சைக் கருத்து: ஸ்ரீலீலாவுக்கு எதி​ராக விமர்​சனம் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியாக உதயநிதி, எல்.முருகன் தான் காரணம்: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: கிருஷ்ணசாமி அறிவிப்பு Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13
பாஸ்போர்ட், ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையால் குடியுரிமையை நிரூபிக்க முடியுமா?
போத்தி ராஜ்.க · 2026-06-29 · via hindutamil

Updated on: 

ஒருவர் இந்தியர் என்பதற்கும், குடியுரிமையை நிரூபிப்பதற்கும் எந்தவிதமான ஆவணங்கள் தேவை, எந்த ஆவணங்கள் செல்லாது என்பதில் நாளுக்கு நாள் குழப்பம் கூடி வருகிறது. 

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பதன் மூலம் இந்தியக் குடியுரிமை வைத்திருப்பவர் என்று கூற இயலாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்த வெளியுறவுத் துறையின் விளக்கம், குழப்பத்தை இன்னும் வலுப்படுத்தியுள்ளது. அப்படியென்றால், இந்தியக் குடியுரிமையை நீரூபிக்க சட்டப்பூர்வ ஆதாரம் எது என்ற கேள்வியும் எழுகிறது. 

வெளியுறவுத் துறை கூறியது என்ன?

கடந்த ஜூன் 24-ம் தேதி, 1967-ம் ஆண்டு பாஸ்போர்ட் சட்டம் இயற்றப்பட்டதை நினைவுகூரும் வகையில் ‘பாஸ்போரட் சேவா திவாஸ்’ வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் கொண்டாடப்பட்டது. அப்போது இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் ஒரு விளக்கம் அளித்தது.

அதில் ‘இந்தியர் ஒருவர் வைத்திருக்கும் இந்திய பாஸ்போர்ட் என்பது குடியுரிமையை நிரூபிக்க சட்டப்பூர்வ ,உறுதியான ஆதாரமாகக் கருத முடியாது. ஆனால், சர்வதேச பயணத்தை மேற்கொள்ள அவருக்கு அளிக்கப்பட்ட அதிகாரபூர்வ ஆவணம்; அடையாள அட்டை மட்டும்தான்’ என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அளித்துள்ள விளக்கம் பெரிய விவாதத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குழப்பும் விவரங்கள்

2019-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி என்ஆர்சி எனப்படும் தேசிய குடியுரிமைப் பதிவேடு குறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அமைப்பு வெளியிட்ட அறிக்கை முரணாகவும் குழப்பமாகவும் இருந்தது.

அதில் ‘ஒருவர் இந்தியக் குடியுரிமையை நிரூபிக்க பிறந்த தேதி, பிறந்த ஊர் குறித்த எந்த ஆவணத்தையும் தாக்கல் செய்யலாம். இருப்பினும், ஏற்றுக்கொள்ளக்கூடிய இத்தகைய ஆவணங்கள் குறித்த முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

‘இந்தியக் குடியுரிமையை உறுதியாக நிரூபிக்க எந்த ஆவணம்தான் தேவை?’ எனும் கேள்வி தற்போது இந்தியர்கள் மனதில் எழுந்துள்ளது.

சரி, குடியுரிமைச் சட்டம் 1955, அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது? 

இந்தியக் குடியுரிமை என்பது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட ஆவணத்தின் மூலமாகவோ அல்லது அந்த ஓர் ஆவணத்தை வைத்து மட்டும் உறுதி செய்வது இல்லை. 

இந்திய குடியுரிமைச் சட்டத்தின்படி, 1950 இந்திய குடியுரிமைச் சட்டத்தின்படி, 1950 ஜனவரி 26-ம் தேதி அல்லது அதற்கு பின்னரோ மற்றும் 1987-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதிக்கு முன்னரோ இந்தியாவில் பிறந்தவராக இருந்தால், அவர் பிறப்பால் இந்தியர் ஆவார்

1987-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பின் ஒருவர் இந்தியாவில் பிறந்திருந்தால், அவரின் பெற்றோர் இருவரில் ஒருவர் இந்தியராக இருத்தல் வேண்டும்.

ஒரு நபர் 2004 டிசம்பர் 3-ம் தேதிக்குப் பின் பிறந்திருந்தால், பெற்றோர் இருவருமே இந்தியர்களாக இருந்தால் மட்டுமே பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை கோர முடியும். அல்லது பெற்றோரில் ஒருவர் இந்தியராகவும், மற்றொருவர் சட்டவிரோத குடியேறியாக இல்லாமல் இருத்தல் வேண்டும்.

1955-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் 5 தனித்துவமான வழிகள் மூலம் ஒரு நபர், தனது குடியுரிமைத் தகுதியைப் பெறுகிறார் எனப் பட்டியலிட்டது. அதில் பிறப்பு, வம்சாவளி, குடியுரிமை, பதிவு, குடியுரிமை பெறுதல் ஆகியவை மூலம் குடியுரிமையை நிரூபிக்க முடியும் என விளக்கப்பட்டுள்ளது.

பிறந்த தேதி, இடம் அடிப்படையில் ஒருவர் ‘இந்த மண் உரிமை’ என்ற அடிப்படையில் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம். ஆனால், சட்டவிரோத குடியேறிகள் தொடர்பாக இந்த விதிகளில் கிடுக்கிப்பிடி கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்திய பெற்றோருக்கு இந்தியாவில் அல்லாமல் வெளிநாடுகளில் பிறந்திருந்தால், வம்சாவளி முறை அடிப்படையில் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம். உதாரணமாக, 2004-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி அல்லது அதற்குப் பின் இந்தியப் பெற்றோருக்கு வெளிநாட்டில் குழந்தை பிறந்திருந்தால், அதை ஓராண்டுக்குள் இந்தியத் தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்திய வம்சாவளியினர் அல்லது இந்தியக் குடிமக்களைத் திருமணம் செய்துகொண்டவர்கள், குறிப்பிட்ட வசிப்பிட மற்றும் குறிப்பிட்ட நிபந்தனைகளை நிறைவு செய்ய வேண்டும்.

வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு 12 ஆண்டுகள் இந்தியாவில் குடியிருந்திருக்க வேண்டும், 3-வது பட்டியலில் உள்ள சில தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும்.

ஏன் இவை முழுமையான ஆவணம் இல்லை?

ஆதார் கார்டு: பிஹார் மாநிலத்தில் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பக்சி அளித்த தீர்ப்பில் ‘ஆதார் கார்டு என்பது ஓர் அடையாள அட்டை மட்டும்தான். மாறாக, அது குடியுரிமையை நிரூபிக்க முழுமையான குடியுரிமை ஆவணம் ஆகாது, 

கோரிக்கைகள் மற்றும் மேல்முறையீடு, கருத்துகளை தாக்கல் செய்யும்போது ஆதார் பயன்பாடானது அடையாளச் சான்றாக மட்டுமே இருக்குமே தவிர, இந்தியக் குடியுரிமைக்கான சான்றாக இருக்காது.

 எந்தத் தனிநபரும் இந்தியாவில் 182 நாட்கள் அல்லது 12 மாதங்களுக்கு மேல் குடியிருந்துவிட்டால், அவர் ஆதார் கார்டு கோரி விண்ணப்பம் செய்ய தகுதியுடையவர் ஆகிறார்; ஆதார் பெறவும் தகுதியுடையவராகிறார். ஆனால், குடியுரிமை பெறுவதற்கான தகுதியாகக் கொள்ள முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை: வாக்காளர் அட்டை என்பது தேர்தல் ஆணையத்தால் வாக்களிக்க ஒருவர் தகுதியுடையவர் என்பதற்காக வழங்கப்படும் அடையாள அட்டை; வசிப்பிடத்தற்கான ஓர் ஆவணம். வாக்களிக்கும் உரிமைக்காக மட்டுமே வழங்கப்பட்ட பிரத்யேக ஆவணமே வாக்காளர் அடையாள அட்டை.

குடியுரிமையை நீரூபிக்க வாக்காளர் அடையாளர் அட்டையை ஒருபோதும் பயன்படுத்த முடியாது என்று நீண்ட காலத்துக்கு முன்பே விளக்கம் அளிக்கப்பட்டது.

பான் கார்டு: பான் கார்டும் வாக்காளர் அடையாள அட்டை போன்று குறிப்பிட்ட ஒரு துறைக்காக வழங்கப்படும் அடையாள அட்டைதான். நிதி மற்றும் வரி தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யவும், வரி செலுத்தவும், வருமான வரித்துறை சார்பில் வழங்கப்பட்ட ஓர் ஆவணம். இந்த பான் கார்டு, இந்தியாவில் வரி செலுத்தும் வெளிநாட்டினருக்கும், என்ஆர்ஐ மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் வழங்கப்படும்.

வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவை இந்தியக் குடியுரிமையை நிரூபிக்க தகுதியான சான்றுகள், ஆவணங்கள் இல்லை என பல்வேறு நீதிமன்றங்கள் ஏராளமான தீர்ப்புகள் மூலம் உறுதி செய்துள்ளன. எதிர்காலத்தில் இதுபோன்ற ஆவணங்களை வைத்திருந்தால் மட்டுமே இந்தியக் குடியுரிமை வைத்திருப்பவர் ஆகிவிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆவணங்கள் யாவும் அரசின் சேவைகளைப் பெற உதவும் அடையாள அட்டை மட்டுமே. ஆனால், இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955, அடிப்படை விதிகளை மீறியதாகக் கூற முடியாது.

பாஸ்போர்ட் மூலம் என்ன பயன்? 

பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) என்பது இந்தியர்களுக்காக மட்டும் இந்திய வெளியுறவுத் துறையால் வழங்கப்படுகிறது. ஆனால், இதை மட்டும் வைத்து இந்தியக் குடியுரிமையை நிரூபிக்க முடியாது; முழுமையான ஆவணமாகவும் இதைக் கருத முடியாது.

 இந்தியாவில் பாஸ்போர்ட் வழங்குவது என்பது வழங்கப்படும் நபர் குறித்து உள்ளூர் போலீஸாரின் தீவிரமான விசாரணை, ஆய்வுக்குப் பின்புதான் வழங்கப்படும். தேசியப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், விண்ணப்பதாரரின் உடலமைப்பு, அடையாளம், முகவரி, ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளாரா, வழக்கு ஏதேனும் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து உள்ளூர் போலீஸார் அறிக்கை அனுப்புவார்கள். அதைச் சார்ந்தே மத்திய அரசும் இருக்கிறது.

அப்படியென்றால், அடையாள அட்டைக்கும், குடியுரிமைக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?

பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரி ஒருவர், 1967 பாஸ்போர்ட் சட்டம் பிரிவு 5-ன் கீழ், விண்ணப்பத்தைப் பரிசீலித்து, தேவையான விசாரணை நடத்தி, உறுதி செய்த பின்பே பாஸ்போர்ட் வழங்குகிறார். பிரிவு 6(2)-ன் கீழ், விண்ணப்பதாரர் இந்தியாவைச் சேர்ந்தவர் இல்லை எனத் தெரிந்தால், அவருக்கு பாஸ்போர்ட் வழங்காமல் அதிகாரி நிறுத்தி வைக்கலாம். அவருக்கு பாஸ்போர்ட் வழங்குவதும், மறுப்பதும், மாநில - மத்திய அரசின் ஒப்புதலுக்கு உட்பட்டதாகும்.

ஆதலால், ஒருவருக்கு பாஸ்போர்ட் கிடைத்திருக்கிறது என்றால், அவரின் குடியுரிமை குறித்து இந்திய அரசு மனநிறைவடைந்து இருக்கிறது என்று அர்த்தம். எவ்வாறாகினும், அந்த நபர் தனது பாஸ்போர்ட் மூலம் குடியுரிமையை நிரூபிக்க முடியாது. 

குடியுரிமையை நிரூபிக்க பாஸ்போர்ட் முழுமையான, உறுதியான ஆவணமாக கருதப்படவில்லை; குடியுரிமைக்கான சான்றாக கருதப்படுகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியப் பாஸ்போர்ட்டை ரத்து செய்யவும், நிறுத்தி வைக்கவும், தடையிலிருந்து நீக்கவும் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அதிகாரம் இருக்கிறது. இருப்பினும், அவர்களால் தன்னிச்சையாக அவ்வாறு செயல்பட முடியாது. இந்த அதிகாரம் 1967-ஆம் ஆண்டின் பாஸ்போர்ட் சட்டத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.