惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Recent Announcements
Recent Announcements
爱范儿
爱范儿
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
宝玉的分享
宝玉的分享
T
Tailwind CSS Blog
博客园_首页
IT之家
IT之家
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 三生石上(FineUI控件)
有赞技术团队
有赞技术团队
大猫的无限游戏
大猫的无限游戏
雷峰网
雷峰网
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - 司徒正美
WordPress大学
WordPress大学
Last Week in AI
Last Week in AI
人人都是产品经理
人人都是产品经理
Jina AI
Jina AI
月光博客
月光博客
小众软件
小众软件
S
SegmentFault 最新的问题
量子位
阮一峰的网络日志
阮一峰的网络日志
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழர் முன்னேற்றத்துக்கு பாடுபட்டவர் இ.சுந்தரமூர்த்தி: நி...
செய்திப்பிரிவு · 2026-06-18 · via hindutamil

Updated on: 

சென்னை: தமிழ் மொழி மற்​றும் தமிழர்​களின் முன்​னேற்​றத்​துக்கு பாடு​பட்​ட​வர் பேராசிரியர் இ.சுந்​தரமூர்த்தி என்​று, சென்​னை​யில் நடை​பெற்ற நினை​வேந்​தல் நிகழ்ச்​சி​யில், விஐடி பல்​கலைக்​கழக வேந்​தர் கோ.​விசுவ​நாதன் புகழாரம் சூட்​டி​னார்.

தஞ்சை தமிழ்ப் பல்​கலைக்​கழக முன்​னாள் துணைவேந்​தர் பேராசிரியர் இ.சுந்​தரமூர்த்​தி, சென்​னை​யில் கடந்த மே 13-ம் தேதி கால​மா​னார். இந்​நிலை​யில், தமிழியக்​கம், டாக்​டர் உ.வே.​சா. நூல் நிலை​யம், சேக்​கிழார் ஆராய்ச்சி மையம் சார்​பில், அவருக்கு நினை​வேந்​தல் நெகிழ்வு நிகழ்ச்​சி, சென்னை கோட்​டூர்​புரம், தமிழ் இணை​யக்​கல்விக் கழக கலை​யரங்​கில் நேற்று நடை​பெற்​றது.

இதில், தமிழியக்​கம் நிறு​வனத் தலை​வரும், வேலூர் விஐடி பல்​கலைக்​கழகத்​தின் வேந்​தரு​மான கோ.​விசுவ​நாதன் தலைமை தாங்கி பேசி​ய​தாவது: பேராசிரியர் இ.சுந்​தரமூர்த்​தி​யுடன் நெருங்கி பழகிய​வன் நான். இனிமை​யான மனிதர். யாரை​யும் குறை சொல்​ல​மாட்​டார். கடிந்து பேச​மாட்​டார். 32 ஆண்டு காலம் பேராசிரிய​ராக பணி​யாற்றி ஓய்வு பெற்​றவர்.

ஆனால், தமிழ் பணி​யில் இருந்து அவர் ஓய்வு பெற​வில்​லை. அவருடைய இழப்பு தமிழ் உலகுக்கு பேரிழப்​பு. 70-க்​கும் மேற்​பட்ட புத்​தகங்​களை​யும், எண்​ணற்ற கட்​டுரைகளை​யும் எழு​தி​யுள்​ளார். தமிழ் உயர வேண்​டும், தமிழர்களும் உயர வேண்​டும் என்று விரும்​பிய​வர்.

தனக்​கும், தனது குடும்​பத்​துக்​கும் எந்த சொத்​தும் சேர்த்து வைக்​காதவர். குடும்​பத்​துக்கு கல்​வியை மட்​டும் தான் சேர்த்து வைத்​தார். ஓலைச் சுவடிகளை புத்​தக​மாக மாற்ற பல முயற்​சிகளை எடுத்​தார். வெளி​நாட்டு மாணவர்​களுக்கு தமிழ் கற்று கொடுத்​தார். வெளி​நாடு​களுக்​குச் சென்று அங்​கும் தமிழை பரப்​பி​னார். அவரைப் போன்​றவர்​கள் இன்​றைய தினம் தேவை.

இன்று எல்​லோரும் தங்​கள் தாய்​மொழி வளர வேண்​டும் என்று விரும்​பு​கிறார்​கள். தாய்​மொழி மீது பற்​றும், அக்​கறை​யும் வைப்​பது தவறு அல்ல. ஆனால், மொழியை மற்​றவர்​கள் மீது திணிக்​கக் கூடாது. அவ்​வாறு செய்​யும் போது​தான் பிரச்​சினை ஏற்​படு​கிறது. பேராசிரியர் சுந்​தரமூர்த்தி தமிழ் மீது பற்று கொண்​ட​வர்​தான்.

ஆனால், அவர் மற்​றவர்​களை கட்​டாயப்​படுத்​த​வில்​லை. இன்று மத்​திய அரசு மும்​மொழிக் கொள்​கையை கட்​டாயப்​படுத்​துகிறது. ஆனால், நமது மொழிக் கொள்கை இரு​மொழிக் கொள்​கை​தான். பேராசிரியர் சுந்​தரமூர்த்தி தமிழ் மொழி​யும், தமிழர்​களும் முன்​னேற வேண்​டும் என்று பாடு​பட்​டார்.

தமிழர்​கள் பொருளா​தா​ரத்​தி​லும் முன்​னேற வேண்​டும் என்று விரும்​பி​னார். அவரது விருப்​பங்​களை நிறைவேற்ற தமிழியக்​கம் தொடர்ந்து பாடு​படும். இவ்​வாறு விசுவ​நாதன் பேசி​னார். சேக்​கிழார் ஆராய்ச்சி மையத்​தின் தலை​வர் நீதிபதி எஸ்​.ஜெகதீசன் புகழஞ்​சலி பேருரை ஆற்றி பேசும்​போது, ``தமிழின் போ​ராளி​யாக இ.சுந்​தரமூர்த்தி திகழ்ந்​தார்.

தன்​னுடைய பதவி​களை தமிழ் மொழிக்​கும், தமிழர்​களுக்​கும் சேவை செய்ய பயன்​படுத்​தி​னார்” என்று குறிப்​பிட்​டார். உலக திருக்​குறள் இணை​யக் கல்விக்​கழக இயக்​குநர் மறைமலை இலக்​கு​வ​னார், தமிழியக்​கம் பொதுச்​செய​லா​ளர் அப்​துல் காதர், துணை தலை​வர் ஜெ.மோகன், பொருளாளர் வே.​பது​ம​னார், மாநிலச் செய​லா​ளர் மு.சுகு​மார், மேலாண்​மைக் குழு உறுப்​பினர் மணிமேகலை கண்​ணன், அனைத்​துலக தமிழ்க் கல்வி பண்​பாட்டு அறி​வியல் மேம்​பாட்டு இணைய ஒருங்​கிணைப்​பாளர் ஒப்​பிலா மதி​வாணன், டாக்​டர் உ.வே.சா நூல் நிலைய செய​லா​ளர் தி.சத்​தி​யமூர்த்​தி, ஆட்​சிக் குழு உறுப்​பினர் ராம.குரு​நாதன் ஆகியோ​ரும் சுந்​தரமூர்த்​தி​யின் நினை​வு​களை பகிர்ந்​துக் கொண்​டனர்.

நிறை​வாக, சுந்​தரமூர்த்​தி​யின் மூத்த மகன் சு.எழில் நம்பி நெகிழ்​வுரை நிகழ்த்​தி​னார். சுந்​தரமூர்த்​தி​யின் மனைவி இ.வசந்​தி, சென்னை பல்​கலைக்​கழக முன்​னாள் துணைவேந்​தர் எஸ்​.பி.​தி​யாக​ராஜன்​ மற்​றும்​ தமிழ்ப் பேராசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.