惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
P
Proofpoint News Feed
宝玉的分享
宝玉的分享
人人都是产品经理
人人都是产品经理
博客园_首页
爱范儿
爱范儿
博客园 - 叶小钗
aimingoo的专栏
aimingoo的专栏
S
SegmentFault 最新的问题
MyScale Blog
MyScale Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
IT之家
IT之家
Microsoft Security Blog
Microsoft Security Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
博客园 - 【当耐特】
Y
Y Combinator Blog
量子位
博客园 - 三生石上(FineUI控件)
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
T
The Blog of Author Tim Ferriss
月光博客
月光博客
有赞技术团队
有赞技术团队
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
A
About on SuperTechFans

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மத்திய பிரதேச அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய 3 போலி மரு...
செய்திப்பிரிவு · 2026-06-08 · via hindutamil

Updated on: 

போபால்: மத்​திய பிரதேச அரசு மருத்துவமனை​களில் பணியாற்றிய 3 போலி மருத்துவர்கள் கைது செய்​யப்​பட்டு உள்ளனர். தேசிய சுகா​தார திட்​டத்​தின் கீழ் மத்​திய பிரதேச அரசு சார்​பில் மாநிலம் முழு​வதும் 783 சஞ்​சீவினி மருத்​து​வ​மனை​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. சஞ்​சீவினி மருத்​து​வ​மனை​களில் ஒப்பந்த அடிப்​படை​யில் 2,000-க்​ கும் மேற்​பட்ட மருத்​து​வர்​கள் உள்ளனர். அவர்​களுக்கு மாதம் ரூ.80,000 ஊதி​யம் வழங்​கப்​பட்டு வரு​கிறது.

இந்த சூழலில் தமோ நகரில் செயல்​படும் சஞ்​சீவினி மருத்துவமனை​யில் போலி மருத்​து​வர்​கள் பணி​யாற்றி வரு​வ​தாக புகார்​கள் எழுந்​தன. இதுதொடர்​பாக மத்​திய பிரதேச சுகா​தா​ரத் துறை மற்​றும் காவல் துறை இணைந்து தமோ பகுதி சஞ்​சீவனி மருத்​து​வ​மனை​களில் திடீர் சோதனை நடத்​தினர்.

அப்​போது அரசு மருத்​து​வ​மனை​களில் மருத்​து​வர்​களாக பணியாற்​றிய குமார் சச்​சின் யாதவ், ராஜ்​பால் கவுர், அஜய்மவுரியா ஆகியோர் போலி மருத்​து​வர்​கள் என்​பது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. அவர்​கள் 3 பேரும் கைது செய்​யப்பட் டனர்.

இதுகுறித்து சுகா​தா​ரத் துறை வட்​டாரங்​கள் கூறிய​தாவது: கைதான போலி மருத்​து​வர்​கள் ரூ.10 லட்​சம் கொடுத்து போலி எம்பிபிஎஸ் சான்​றிதழை பெற்று உள்​ளனர். 3 போலி மருத்துவர்களும் சுமார் 2 ஆண்​டு​களுக்கு மேலாக அரசு மருத்துவர்​களாக பணி​யாற்றி நோயாளி​களுக்கு சிகிச்சை அளித்து உள்​ளனர்.

தமோ பகு​தி​யைத் தொடர்ந்து மாநிலம் முழு​வதும் சஞ்​சீவினி மருத்​து​வ​மனை​களில் பணி​யாற்றும் மருத்​து​வர்​கள் குறித்து ஆய்வு நடத்​தப்​பட்டு வரு​கிறது. முதல்​கட்ட விசா​ரணை​யில் 10 மாவட்​டங்​களை சேர்ந்த சஞ்​சீவனி மருத்​து​வ​மனை​களில் 14 போலி மருத்​து​வர்​கள் பணி​யாற்​று​வது கண்​டறியப்​பட்டு உள்​ளது.

அவர்​களில் சிலர் பணி​யில் இருந்து திடீரென ராஜி​னாமா செய்துள்​ளனர். சிலர் பணிக்கு வரவில்​லை. 14 பேரும் தலைமறைவாகி விட்​டனர். அவர்​களை தேடும் பணி தீவிரப்படுத்தப்​பட்டு உள்​ளது. சந்​தேகத்​தின் அடிப்​படை​யில் மாநிலம் முழு​வதும் 80 மருத்​து​வர்​களின் எம்​பிபிஎஸ் சான்றிதழ்கள் தீவிர ஆய்​வுக்கு உட்​படுத்​தப்​பட்டு உள்​ளன. இவ்வாறு மத்​திய பிரதேச சுகா​தா​ரத் துறை வட்​டாரங்​கள் தெரிவித்​துள்​ளன.

இதுதொடர்​பாக மத்​திய பிரதேச போலீஸ் மூத்த அதி​காரி அலோக் ஸ்ரீவஸ்​தவா கூறிய​தாவது: தேசிய சுகா​தார திட்ட அதிகாரி​கள் அளித்த புகார்​களின் அடிப்​படை​யில் போலி மருத்துவர்​கள் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்டு உள்​ளது. இவர்​கள் மூத்த மருத்​து​வர்​களின் பதிவெண்​களை பயன்​படுத்தி போலி எம்பிபிஎஸ் சான்​றிதழ்​களை தயாரித்து உள்​ளனர்.

சிலர் ஆயுர்​வேதம், சித்தா மருத்​து​வப் படிப்​பு​களை படித்​து​விட்டு போலி எம்​பிபிஎஸ் சான்​றிதழ்​களை ரூ.8 லட்​சம் முதல் ரூ.10 லட்சத்துக்கு வாங்கி உள்​ளனர்.

இவர்​களுக்கு போலி எம்​பிபிஎஸ் சான்​றிதழ்​களை தயாரித்து கொடுத்​தது யார், தேசிய சுகா​தார திட்​டத்​தில் இவர்​களை பணி​யில் சேர்த்​தது யார் என்​பது குறித்து தீவிர​மாக வி​சா​ரணை நடத்தி வரு​கிறோம். இந்த மோசடி​யில் தொடர்​புடைய அனை​வர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும்​. இவ்​வாறு போலீஸ்​ மூத்​த அதி​காரி அலோக்​ ஸ்ரீவஸ்​த​வா தெரிவித்துள்ளார்​.