惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Jina AI
Jina AI
T
The Blog of Author Tim Ferriss
B
Blog
L
LangChain Blog
Y
Y Combinator Blog
美团技术团队
博客园 - 三生石上(FineUI控件)
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
G
Google Developers Blog
量子位
博客园_首页
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
C
Check Point Blog
D
Docker
小众软件
小众软件
The Cloudflare Blog
大猫的无限游戏
大猫的无限游戏
T
Tailwind CSS Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园 - 聂微东
Blog — PlanetScale
Blog — PlanetScale
GbyAI
GbyAI
Google DeepMind News
Google DeepMind News
IT之家
IT之家

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“தமிழகம், புதுச்சேரியில் பாஜகவுக்கு இடமில்லை என்பது உறுதி...
2026-05-02 · via hindutamil
அ.முன்னடியான்

Updated on

2 min read

புதுச்சேரி: “தேர்தலுக்கு பிறகு மாறுப்பட்ட கருத்துக் கணிப்புகள் வந்தாலும், புதுச்சேரி மற்றும் தமிழத்தில் பாஜகவுக்கு இடமில்லை என்பது உறுதி” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தமிழ்ச்செல்வனின் ‘திருப்பி அடித்த வரலாறு’ நூல் வெளியீடு மற்றும் பாராட்டு விழா, அவரது சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டதை கொண்டாடும் விழா என இருபெரும் விழா தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தேர்தல் முடிவு நாளை மறுதினம் வெளியாகிறது. இதனை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் மத்திய அரசு வணிக சிலிண்டர் விலையை ஆயிரம் ரூபாய் உயர்த்தியுள்ள கொடுமை நடந்திருக்கிறது. இதனால் வணிக நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி இருப்பது மட்டுமல்ல ஓட்டல்களில் விற்கப்படும் உணவு பொருட்களின் விலை 20 சதவீதம் உயரும் என்று அறிவுத்துள்ளார்கள். இதன்மூலம் மிகப் பெரிய அளவுக்கு மக்கள் தலைமையில் சுமையை மத்திய அரசு ஏற்றி விட்டுள்ளது.

அடுத்தகட்டமாக சமையல் எரிவாயு மற்றும் டீசல், பெட்ரோல் விலையும் உயரும் என்ற அறிவிப்பும் வந்து கொண்டிருக்கிறது. அந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

தேர்தலுக்கு பிறகு மாறுப்பட்ட கருத்துக் கணிப்புகள் வந்தாலும், புதுச்சேரி, தமிழத்தில் பாஜகவுக்கு இடமில்லை என்பது உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாராட்டத்தக்கது.

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் என்கிற சூழல்தான் உள்ளது. தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் புதிய அரசியல் சூழ்நிலை உருவாக வாய்ப்புள்ளது.

புதுச்சேரியில் தேர்தல் முடிவு எப்படி இருக்கும், யார் முதல்வராக வருவார், எந்த அணி வெற்றி பெறும் என்பதை தெளிவாக கணிக்க முடியவில்லை. ஏனென்றால், தேர்தலில் குழப்பமான சூழ்நிலை நிலவி விட்டது. அணிக்கு தலைமையேற்றுள்ள காங்கிரஸ், திமுக ஒருமித்த கருத்தோடு பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நிலையில் உறுதியாக இருந்திருந்தால், நிச்சயமாக அந்த அணிக்கு மக்கள் மகத்தான ஆதரவை அளித்திருப்பார்கள்.

ஆனால், நிலையான உறுதிபாட்டினை திமுக, காங்கிரஸ் தலைவர்கள் மேற்கொள்ளாதது, விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்காதது, காங்கிரஸ் கட்சிக்குள் பரஸ்பர போட்டி என்பதெல்லாம் ஏற்பட்டு, ஒரு குழப்பத்துக்கு அவர்களே காரணமாகிவிட்டார்கள். எதுவாக இருந்தாலும், தேர்தல் முடிவு எப்படி வர போகிறது என்று பார்க்க வேண்டி இருக்கிறது.

மாஹேவில் மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவோடு போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற சூழல் நிலவுகிறது.

தமிழகத்தில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட நாங்கள் விரும்பினாலும், 5 இடங்களுக்கு மேல் கொடுக்க முடியாது என்று திமுக கூறியது வருத்தம் அளித்தது. 1, 2 இடத்தை உயர்த்தி கொடுப்பதால் கூட்டணிக்குள் குழப்பம் வந்துவிட போவதில்லை.

எங்களுக்குள் மனச்சங்கடங்கள் இருந்தாலும், தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும். அதிமுக துணையோடு பாஜக ஆட்சியை பிடிக்க இடம் அளித்துவிடக் கூடாது என்ற ஒற்றை காரணத்துக்காக திமுகவுடன் இணைந்து பணியாற்றி உள்ளோம். எதிர்காலத்திலும் பாஜகவை எதிர்த்து போராடுவோம்.

அதேசமயம், எதிர்காலத்தில் ஆட்சியை அமைக்கக் கூடிய திமுக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பொறுத்து மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக எங்களுடைய அணுகுமுறையை மேற்கொள்வோம்.

கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் இளைஞர்கள் பங்களிப்பு அதிகமாக இருந்தது. அதில் ஒரு பகுதியினர் விஜய் பின்பு சென்றிருக்கலாம். ஆனால், ஏதோ ஒரு எதிர்பார்ப்பு, மாற்றம் வேண்டும் என்பது இளைஞர்களிடம் இருக்கிறது. அப்படிப்பட்ட இளைஞர்களை அணி திரட்டுவதற்கு ஆக்கப்பூர்வமான வேலையை மேற்கொள்வோம்” என்று அவர் கூறினார்.