惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
G
Google Developers Blog
雷峰网
雷峰网
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
人人都是产品经理
人人都是产品经理
U
Unit 42
B
Blog RSS Feed
博客园 - 【当耐特】
T
Tailwind CSS Blog
V
V2EX
S
SegmentFault 最新的问题
美团技术团队
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Y
Y Combinator Blog
M
MIT News - Artificial intelligence
量子位
aimingoo的专栏
aimingoo的专栏
Stack Overflow Blog
Stack Overflow Blog
Engineering at Meta
Engineering at Meta
GbyAI
GbyAI
P
Proofpoint News Feed
D
DataBreaches.Net
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
A
About on SuperTechFans

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“பாஜகவின் ‘இறுதி ஆட்டம்’தான் கருத்துக் கணிப்பு முடிவுகள்”...
2026-04-30 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: “மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 226-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்” என அம்மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “மேற்கு வங்கத்தில் மே 4-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, திரிணமூல் காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்கும்.

தேர்தலுக்குப் பிந்தையை கருத்துக் கணிப்புகளை நிராகரிக்கிறோம். இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் அனைத்தும் பாஜக அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டவை. இவை அனைத்தும் புனையப்பட்டவை. திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களின் மன உறுதியைக் குலைக்கும் நோக்கத்துடன் இவை உருவாக்கப்பட்டுள்ளன.

பாஜக தனது இறுதி ஆட்டத்தையும் ஆடிவிட்டது. உண்மையான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டு இருந்தால், பங்குச் சந்தைகள் சரிந்திருக்கும். இந்தக் கணிப்புகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று எனக்கு உளவுத் துறை தகவல்கள் கிடைத்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை நாளன்று அனைவரும் 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும். 294 தொகுதிகளிலும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களை வேட்பாளர்களும் மூத்த தலைவர்களும் நேரில் சென்று கண்காணிக்க வேண்டும்

நான் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் வரை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தை விட்டு யாரும் வெளியேறக் கூடாது.

திரண்டு வந்து வாக்களித்த வாக்காளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் (பாஜக) ஏதாவது வன்முறையைக் கட்டவிழ்த்தால் உடனடியாகப் பதிலடி கொடுக்காதீர்கள். அமைதியையும் நிதானத்தையும் கடைபிடியுங்கள்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 226-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்” என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கருத்துக் கணிப்புகள் கூறுவது என்ன?

மேட்ரிஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் மேற்கு வங்கத்தில் பாஜக 146 முதல் 161 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் 125 முதல் 140 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.

பி-மார்க் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக அணி 150 முதல் 175 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் 118 முதல் 138 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. பீப்பிள்ஸ் பல்ஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் திரிணமூல் காங்கிரஸ் 177 முதல் 187 இடங்களையும், பாஜக அணி 95 முதல் 110 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.