惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

GbyAI
GbyAI
Jina AI
Jina AI
月光博客
月光博客
博客园_首页
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
IT之家
IT之家
Hugging Face - Blog
Hugging Face - Blog
T
Tailwind CSS Blog
V
Visual Studio Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
大猫的无限游戏
大猫的无限游戏
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
阮一峰的网络日志
阮一峰的网络日志
量子位
博客园 - 【当耐特】
The Cloudflare Blog
宝玉的分享
宝玉的分享
博客园 - 聂微东
博客园 - 叶小钗
美团技术团队
G
Google Developers Blog
人人都是产品经理
人人都是产品经理
博客园 - Franky
小众软件
小众软件

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பெட்ரோல், டீசல் விலை ரூ.3 உயர்ந்தது: அத்தியாவசியப் பொருட்...
2026-05-16 · via hindutamil

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நேற்று எரிபொருள் நிரப்ப காத்திருந்த வாகன ஓட்டிகள். படம்: பிடிஐ

Updated on

2 min read

புதுடெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு நேற்றே அமலுக்கு வந்தது.

இதுகுறித்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: நீண்ட இடைவேளைக்குப் பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நேற்றே நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை, இந்த விலை உயர்வைத் தொடர்ந்து, சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.103.67-க்கும், டீசல் ரூ.95.25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.94.77-ல் இருந்து ரூ.97.77 ஆகவும், டீசல் விலை ரூ.87.67-ல் இருந்து ரூ.90.67 ஆகவும் அதிகரித்துள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான மதிப்புக்கூட்டு வரி (VAT) வேறுபாட்டால், ஒவ்வொரு நகரத்திலும் விலையில் சிறு மாற்றங்கள் காணப்படுகின்றன.

4 ஆண்டுகளுக்குப் பிறகு.. கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில் இருந்து கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் மாற்றமின்றி இருந்தது. தமிழகம், புதுச்சேரி, கேரளம்,மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் நிறைவடைந்த 16 நாட்களுக்குப் பிறகு இந்த விலை உயர்வு அறிவிப்பு வெளிவந்துள்ளது.

தேர்தல் காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதிலும், உள்நாட்டில் விலையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் போக்கு கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக எரிசக்தி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதே கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இந்த மோதலுக்கு முன்னதாக ஒரு பேரல் 70 - 72 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை, பதற்றத்தின் உச்ச கட்டத்தில் 120 டாலரை கடந்தது. தற்போது 104 - 110 டாலர் என்ற அளவில் வர்த்தகம் ஆகி வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு ரூ.1,000 கோடி இழப்பு ஏற்படுவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதும் இறக்குமதிச் செலவை அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 96.14 ஆக சரிந்து வரலாற்று வீழ்ச்சியை சந்தித்தது.

சர்வதேச அளவில் கச்சாஎண்ணெய் விலை குறையும்போது, அதற்கேற்ப இந்தியாவில் விலை குறைக்கப்படவில்லை. ஆனால், தற்போது சர்வதேச சந்தையை காரணம் காட்டி, பெட்ரோல், டீசல் விலையை பொதுத் துறை நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதன்மூலம் எரிபொருள் விலை உயர்வு, போக்குவரத்து, சரக்கு கையாளும் செலவுகள் அதிகரிக்கும்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து பணவீக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரலில் சில்லறை பணவீக்கம் 3.48 சதவீதமாகவும், மொத்த விலை பணவீக்கம் 42 மாதங்களில் இல்லாத அளவாக 8.3 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. எரிபொருள்சிக்கனத்தை கடைபிடிக்குமாறும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.