惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
D
DataBreaches.Net
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
The GitHub Blog
The GitHub Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
Microsoft Security Blog
Microsoft Security Blog
A
About on SuperTechFans
Vercel News
Vercel News
L
LangChain Blog
B
Blog RSS Feed
Y
Y Combinator Blog
IT之家
IT之家
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
GbyAI
GbyAI
V
V2EX
博客园 - 三生石上(FineUI控件)
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
阮一峰的网络日志
阮一峰的网络日志
有赞技术团队
有赞技术团队
D
Docker
V
Visual Studio Blog
aimingoo的专栏
aimingoo的专栏
Last Week in AI
Last Week in AI
月光博客
月光博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
லக்னோ: பயிற்சி மைய கட்டிட தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 14...
மோகன் கணபதி · 2026-06-22 · via hindutamil

Updated on: 

லக்னோ: உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள பயிற்சி மைய கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

லக்னோ அலிகஞ்ச் பகுதியில் உள்ள மூன்று மாடி கட்டிடம் ஒன்றில் மாணவர்களுக்கான பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு, செல்ல பிராணிகளுக்கான கடை உள்ளிட்ட பிற கடைகளும் இதில் இயங்கி வந்துள்ளன.

இந்நிலையில், இந்த கட்டிடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்து வேகமாக கட்டிடம் முழுவதற்கும் பரவியது. பயிற்சி மையத்தில் இருந்த மாணவர்கள் பலர் இந்த தீ விபத்தில் சிக்கிய நிலையில், அவர்களில் சிலர் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளனர். மேலும், பலர் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டுள்ளனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தீ அணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பதக்கும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தீ கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, கட்டிடம் முழுவதும் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரதேச பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரஜேஷ் பதக், “இந்த சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர். நான்கு பேர் காயமடைந்து கேஜிஎம்சி மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை அளிப்பதே எங்கள் முன்னுரிமை. தீ விபத்து எப்படி, ஏன் ஏற்பட்டது என்பது குறித்த விவரங்கள் விசாரணை அறிக்கைக்குப் பிறகே தெரிய வரும்.

சம்பவ இடத்தில் தேடுதல் பணியை அதிகாரிகள் முடித்துவிட்டனர். மாணவர்கள் வேறு யாரும் உள்ளே சிக்கி இருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த தீ விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு தனது முழு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. தேவையான அனைத்து உதவிகளும் அவர்களுக்கு வழங்கப்படும்” என தெரிவித்தார்.

சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், “இது மூன்று மாடி கட்டிடம். மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு வேகமாகப் பரவியது. மீட்புப் பணிகளின்போது சில ஜன்னல்கள் உடைக்கப்பட்டன. ஐந்து முதல் ஏழு மாணவர்கள் கிழே குதித்தனர். அவர்களில் ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது” என தெரிவித்தார்.

விபத்து குறித்து வேதனை தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.