惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Jina AI
Jina AI
博客园 - 【当耐特】
量子位
C
Check Point Blog
博客园 - 叶小钗
博客园 - 聂微东
博客园 - 三生石上(FineUI控件)
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Hugging Face - Blog
Hugging Face - Blog
美团技术团队
The Cloudflare Blog
T
Tailwind CSS Blog
人人都是产品经理
人人都是产品经理
月光博客
月光博客
V
V2EX
Last Week in AI
Last Week in AI
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
IT之家
IT之家
大猫的无限游戏
大猫的无限游戏
有赞技术团队
有赞技术团队
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
S
SegmentFault 最新的问题
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
4 தலைமுறைக்கு நீடித்த நிலத் தகராறு: 59 ஆண்டுக்குப் பின்னர...
செய்திப்பிரிவு · 2026-06-28 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: கடந்த 4 தலைமுறைகளாக நீடித்து வந்த நிலத்தகராறு வழக்கு, 59 ஆண்டுகளுக்குப் பின்னர் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் முடிவுக்கு வந்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவார் கிராமத்தில் 15.5 பிகா பரப்பு நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. 1957-ல் வாங்கப்பட்ட இந்த நிலம் தொடர்பான வழக்கு விசாரணை 4 தலைமுறையாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் அண்மையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பிரசாந்த்குமார் மிஸ்ரா, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த நிலத்தை சராபத் அலி என்பவரின் முன்னோர்கள் 1957-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி விற்பனைப் பத்திரம் மூலம் வாங்கியுள்ளனர். ஆனால் சராபத் அலியின் உறவினர்களில் பலர் அதற்குச் சொந்தம் கொண்டாடி வழக்கு தொடுத்தனர். கடந்த 1957-ல் பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரத்தின் அடிப்படையில் இந்தத் தகராறு எழுந்தது. இதை எதிர்த்து சராபத் அலியின் முன்னோர்கள் சிலர் வழக்கில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிலையில், 1957-ல் கையெழுத்திடப்பட்ட விற்பனைப் பத்திரத்தை உறுதி செய்வதன் மூலம், 70 ஆண்டுகள் பழமையான நிலத் தகராறுக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்வு கண்டது. ஒரு குடும்பத்தின் 4 தலைமுறையினர் 7 தசாப்தங்களுக்கும் மேலாக இந்தச் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நிலம் யாருக்குச் சொந்தம் என்பதில்தான் பிரச்சினையே இருந்தது. இந்நிலையில் 1957-ல் பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரம் செல்லும் என்றும், சராபத் அலி இந்தச் சொத்தை அனுபவிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன்மூலம் 70 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின் போது சாட்சியம் அளித்த பாரு என்பவர் தனது வாக்குமூலத்தில் தனது இருப்பிடத்தை நசிர்பூர் கலன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் விற்பனைப் பத்திரத்தின் சான்று செய்யப்பட்ட நகலில் அவர் தனது இருப்பிடத்தை நிஹந்த்பூர் சுதாரி என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் விற்பனைப் பத்திரச் செயல் முறை முறையாக நிரூபிக்கப்படவில்லை என்று கருதப்பட்டது.

ஜூன் 4, 1957 தேதியிட்ட விற்பனைப் பத்திரத்தைச் செல்லாததாகக் கருதியதும், சாட்சி தொடர்பான முக்கியமற்ற முரண்பாடுகளின் அடிப்படையில் அதை நிராகரித்ததும் உயர் நீதிமன்றம் மற்றும் நில ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் வெளிப்படையான தவறு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி வழக்கை நிறைவு செய்தது.

அடுத்த ஆண்டு இந்தியா வருகிறார் அதிபர் டொனால்டு ட்ரம்ப்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ தகவல்