惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

爱范儿
爱范儿
博客园_首页
U
Unit 42
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
云风的 BLOG
云风的 BLOG
MongoDB | Blog
MongoDB | Blog
美团技术团队
H
Help Net Security
G
Google Developers Blog
B
Blog RSS Feed
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
aimingoo的专栏
aimingoo的专栏
Google DeepMind News
Google DeepMind News
J
Java Code Geeks
M
MIT News - Artificial intelligence
腾讯CDC
IT之家
IT之家
Vercel News
Vercel News
C
Check Point Blog
博客园 - 三生石上(FineUI控件)
Last Week in AI
Last Week in AI
I
InfoQ
博客园 - 司徒正美
A
About on SuperTechFans

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தேர்தலுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? - மத்திய ...
2026-04-29 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 29) நடக்க உள்ள நிலையில், அதன் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், தேர்தல் முடிந்தவுடன் எரிபொருள் விலை உயர்த்தப்படலாம் என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. இதன் காரணமாக, ஆந்திர் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பொதுமக்கள் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்பத் தொடங்கினர்.

இதன் காரணமாக சுமார் 400-க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில், மத்திய அரசு தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா கூறுகையில், “பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. பொதுமக்கள் வதந்திகளை நம்பி தேவையற்ற முறையில் பீதி அடைந்து எரிபொருளைச் சேமிக்க வேண்டாம். நாட்டில் போதுமான அளவு பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர் இருப்பு உள்ளது,” என்று தெரிவித்தார். மேலும், எரிபொருள் விநியோகத்தை அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் உறுதி அளித்தார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்தியாவில் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இருப்பினும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 114 டாலராக உயர்ந்துள்ளதால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு தினசரி சுமார் ரூ.2,400 கோடி இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பெட்ரோலில் லிட்டருக்கு ரூ.20-ம், டீசலில் ரூ.100-ம் இழப்பு ஏற்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல், குறிப்பாக ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எண்ணெய் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களில் கச்சா எண்ணெய் விலை 50 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.