惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Microsoft Azure Blog
Microsoft Azure Blog
WordPress大学
WordPress大学
小众软件
小众软件
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
V2EX
Hugging Face - Blog
Hugging Face - Blog
美团技术团队
博客园 - 三生石上(FineUI控件)
Last Week in AI
Last Week in AI
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - Franky
Microsoft Security Blog
Microsoft Security Blog
Y
Y Combinator Blog
A
About on SuperTechFans
The GitHub Blog
The GitHub Blog
U
Unit 42
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
云风的 BLOG
云风的 BLOG
IT之家
IT之家
MyScale Blog
MyScale Blog
V
Visual Studio Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
I
InfoQ
博客园 - 司徒正美

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“இடம் அல்ல... சேவையே முக்கியம்” - ஜோதிட அலுவலக சர்ச்சைக்க...
2026-05-19 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: தனது ஜோதிட அலுவலகத்தில் அரசு அதிகாரிகளைச் சந்தித்தது சமூக வலைதளங்களில் சர்ச்சையான நிலையில், அது குறித்து தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோவையின் கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற கனிமொழி சந்தோஷ், தீவிர அரசியலுக்குள் நுழைவதற்கு முன்பாக ஜோதிடராக வலம் வந்தவர். அவர் பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடினேன் என மூன்று புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.

அதில், மிகப் பெரிய சோபாவில் எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் அமர்ந்திருக்க, அவருக்கு எதிரே அரசு அதிகாரிகள் பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்திருந்தது போல இருந்தது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் கேள்விகள் எழுப்பினர். இந்நிலையில், உடனடியாக ஒரு வீடியோ வெளியிட்டு அவரது நிலைமையை விளக்கியிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எனது அன்பு மக்களுக்கும், நண்பர்களுக்கும் ஒரு தகவல். பல ஆண்டுகளாக நான் ஜோதிடராக மக்களை சந்தித்து வந்த எனது பழைய ஜோதிட அலுவலகம் இன்று வரை மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் சுமந்து நிற்கிறது. அந்த அலுவலகம் எனது வாழ்க்கைப் பயணத்தின் முக்கியமான நினைவுகளை தாங்கி நிற்கும் ஓர் இடம்.

தற்போது, எனது புதிய எம்எல்ஏ அலுவலகத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அலுவலகத்தின் பெயின்டிங் மற்றும் பிற பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. மக்கள் பயன்பாட்டுக்கு சிறப்பாகவும், அனைவரும் எளிதாக சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைக்கக் கூடிய வகையிலும் அதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

அந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை, வழக்கம்போல நான் எனது பழைய ஜோதிட அலுவலகத்திலேயே பொதுமக்கள், அதிகாரிகள் மற்றும் என்னைச் சந்திக்க விரும்பும் அனைவரையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து வருகிறேன். எனக்கு மக்கள் சேவையே முதன்மை. அலுவலகம் எந்த இடத்தில் இருந்தாலும், மக்களின் நலனுக்காக என் கதவுகள் என்றும் திறந்தே இருக்கும்.

புதிய எம்எல்ஏ அலுவலகம் முழுமையாக தயார் ஆனவுடன், மேலும் சிறப்பான சூழலில் அனைத்து பொது மக்களையும் அங்கு சந்தித்து, உங்கள் தேவைகள் மற்றும் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க உறுதியாக உள்ளேன். உங்கள் அன்பும், ஆதரவும், நம்பிக்கையும் எனக்கு என்றும் உறுதுணையாக இருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் எனது அலுவலகத்துக்கு அரசு அதிகாரிகளை வரவழைத்து, அவர்களை பிளாஸ்டிக் நாற்காலியில் அமரவைத்து அவமரியாதை செய்ததாக ட்ரோல் செய்கிறார்கள். இது எனது ஜோதிட அலுவலகம். இங்கு யார் வேண்டுமானாலும் வரலாம். இது லெதர் நாற்காலி. என்னை சந்திக்க வருவர்களுக்கு நல்ல தரத்தை தான் தருகிறேன்.

நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக ஜோதிடராக இருந்தேன். நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக சமூக செயல்பாட்டாளாராக இருந்தேன். தவெக தலைவர் விஜய்யால் எனக்கு அரசியலில் வர வாய்ப்பு வந்தது.

நான் எந்த அதிகாரியையும் வீட்டுக்கு வரவழைத்து ஊக்குவிப்பதும் கிடையாது. எனக்கும் அரசியல் நாகரிகம் தெரியும். எனது அலுவலகத்தில் தான், நான் அவரை சந்தித்தேன். யாரும் தவறாக நினைக்க வேண்டும். மக்களுக்காக பணி செய்ய தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். தலைவர் விஜய்க்கு எந்த விதமான பங்கமும் ஏற்பட விடமாட்டேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

எனது அன்பு மக்களுக்கும், நண்பர்களுக்கும் ஒரு தகவல்…
பல ஆண்டுகளாக நான் ஜோதிடராக மக்களை சந்தித்து வந்த எனது பழைய ஜோதிட அலுவலகம் இன்று வரை மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் சுமந்து நிற்கிறது. அந்த அலுவலகம் எனது வாழ்க்கைப் பயணத்தின் முக்கியமான நினைவுகளை தாங்கி நிற்கும் ஒரு இடம்.… pic.twitter.com/ZebRnrG5jq

— Kanimozhi Santhosh (@Kanimozhi_tvk) May 19, 2026