惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
WordPress大学
WordPress大学
S
SegmentFault 最新的问题
罗磊的独立博客
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
The Cloudflare Blog
L
LangChain Blog
博客园 - 司徒正美
G
Google Developers Blog
博客园 - 【当耐特】
GbyAI
GbyAI
月光博客
月光博客
人人都是产品经理
人人都是产品经理
D
DataBreaches.Net
大猫的无限游戏
大猫的无限游戏
A
About on SuperTechFans
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
V
Visual Studio Blog
D
Docker
MongoDB | Blog
MongoDB | Blog
Vercel News
Vercel News
Stack Overflow Blog
Stack Overflow Blog
Jina AI
Jina AI
博客园 - 聂微东

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மீன்வளத் துறையில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு
Guest Author · 2026-06-24 · via hindutamil

Updated on: 

மருத்துவம், வேளாண்மை, பொறியியல் உள்ளிட்ட துறைகளுடன் மீன்வளக் கல்வியும் இன்று முக்கியத்துவம் பெற்று வருகிறது. உணவுப் பாதுகாப்பு, வேலை வாய்ப்பு, வருமானத்தில் முக்கியப் பங்காற்றும் மீன்வளத் துறை, இந்தியாவின் வளர்ந்துவரும் துறைகளில் ஒன்றாக உள்ளது.

பிளஸ் 2 அறிவியல் பிரிவில் (உயிரியல், வேதியியல், இயற்பியல்) பயின்ற மாணவர்கள் மீன்வளப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். சில கல்லூரிகளில் தொழிற் கல்விப் பிரிவில் விவசாயம் அல்லது மீன் வளம் படித்தவர்களுக்குத் தனி இடஒதுக்கீடு உண்டு.

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், அண்ணா மலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டப் படிப்புகளையும் தொழில் சார் படிப்புகளையும் வழங்குகின்றன.

மீன்வள அறிவியல், மீன்வளப் பொறியியல், மீன் வளர்ப்பு, மீன் பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் கல்வி கற்று அரசு, தனியார், ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிவாய்ப்புகளைப் பெறலாம்.

மத்திய - மாநில அரசு வேலைகள்

சம்பந்தப்பட்ட பாடங்களில் தேசியத் தகுதித் தேர்வு (NET) தேர்ச்சி பெற்று, முனைவர் பட்டம் பெற்றவர்கள் பேராசிரியர், பாட வல்லுநர், ஆராய்ச்சியாளர் ஆகலாம். தமிழ்நாடு மீன்வளம் - மீனவர் நலத் துறையில் மீன்வள உதவி ஆய்வாளர்/ஆய்வாளர், பண்ணை மேலாளர், மேலாளர், உதவி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்படுகின்றன.

வேளாண் ஆராய்ச்சிப் பணியில் (ARS) தேர்ச்சி பெற்றவர்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் - மீன்வளப் பல்கலைக் கழகங்களின் நன்னீர், உவர்நீர், கடல்நீர் ஆராய்ச்சி மையங்களில் விஞ்ஞானி களாகப் பணியாற்றலாம்.

மேலும், இந்திய மீன்வளக் கணக்கெடுப்பு நிறுவனம் (FSI), கடல்சார் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (MPEDA) ஆகியவற்றிலும் ஆய் வாளர், அதிகாரி பணிவாய்ப்புகள் உள்ளன.

வங்கித் துறை

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வேளாண்மை கடன் அதிகாரி (AFO), தேசிய வேளாண் - ஊரக வளர்ச்சி வங்கி (NABARD) போன்றவற்றில் மேலாளர் பணியும் உள்ளது. இதில் மீன்வளப் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இது மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களில் மீன் - இறால் வளர்ப்புப் பண்ணைகளில் மேலாளர்கள், மீன் தீவனத் தயாரிப்பு நிறுவனங்களில் தொழில்நுட்ப வல்லுநர்கள், கடல் உணவு பதப்படுத்தும், ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் பணிகளும் உள்ளன.

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு

சர்வதேச அளவில் கடல் உணவுக்கான தேவை அதிகரித்துவருகிறது. அது தொடர்பான நிறுவனங்களில் மீன்வளப் படிப்பு படித்தவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

குறிப்பாக நார்வே, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, வளைகுடா நாடுகளில் அதிநவீன மீன்வளர்ப்புப் பண்ணைகளிலும் ஆராய்ச்சி நிறுவனங் களிலும் இந்திய மீன்வளப் பட்டதாரிகளுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைகள் கிடைக் கின்றன.

நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா?

தமிழ்நாட்டில் மீன்வளக் கல்வி படிக்கத்தனியாக நுழைவுத் தேர்வு எதுவும் இல்லை. பிளஸ் 2 வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் (Cut-off Marks) அடிப்படை யிலேயே கலந் தாய்வு மூலம் சேர்க்கை நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு விதிகளின்படி மாணவர் சேர்க்கை நடைபெறு கிறது. மீனவர் சமூக மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலும் சிறப்பு இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் சேர்க்கை வழங்கப்படுகிறது.

ஆனால், மத்திய அரசின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ICAR-AIEEA போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டும்.

தொழில் வாய்ப்புகள்

மீன்வளத்தில் பல்வேறு தொழில் வாய்ப்பு கள் இருக்கின்றன. எடுத்துக் காட்டாக நன்னீர் மீன் உற்பத்தி, கடல் மீன் உற்பத்தி, இறால் வளர்ப்பு, ஆழ்கடல் மீன் பிடிப்பு, மதிப்பு கூட்டப்பட்ட மீன் உணவுப் பொருள்கள் தயாரித்தல், உயிர்மீன் விற்பனை, மீன் ஏற்றுமதி, மீன் கழிவுகளில் இருந்து உரம் தயாரித்தல், வண்ண மீன் வளர்ப்பு, வண்ண மீன் குஞ்சுப் பொரிப்பகம், வண்ண மீன் விற்பனை அங்காடி, ஜிலேபி மீன் உற்பத்தி - வளர்ப்பு - விற்பனை, கடல்பாசி வளர்ப்பு, மீன்பிடி - வளர்ப்பு தொடர்பான கருவிகள் தயாரிப்பு, மீன் உணவு தயாரித்தல், நண்டு வளர்ப்பு, ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு, கூண்டு மீன் வளர்ப்பு, இணையவழி மீன் விற்பனை எனப் பல்வேறு தொழில் வாய்ப்பு கள் மீன்வளம் சார்ந்து இருக்கின்றன.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மீன்களுக்கான சந்தை வாய்ப்பு மிக அதிகம். இவை தவிர மத்திய, மாநில அரசுகள் மீன்வளம் சார்ந்த ஆராய்ச்சி நிலையங்கள், தேசியக் கூட்டுறவு மேம்பாட்டு கழகம் ஆகியவை மீன் உற்பத்தியாளர்கள், மீனவர்களுக்குத் தொழில் முனைவோர் பயிற்சிகள், வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றன. மேலும் விவரங்களுக்கு: www.tnjfu.ac.in

- கட்டுரையாளர், இல. சுருளிவேல், உதவிப் பேராசிரியர், டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையம்; surulivel@tnfu.ac.in