惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

The GitHub Blog
The GitHub Blog
The Last Watchdog
The Last Watchdog
C
Check Point Blog
Y
Y Combinator Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
CTFtime.org: upcoming CTF events
CTFtime.org: upcoming CTF events
云风的 BLOG
云风的 BLOG
Google DeepMind News
Google DeepMind News
K
Kaspersky official blog
P
Proofpoint News Feed
Security Latest
Security Latest
The Hacker News
The Hacker News
Simon Willison's Weblog
Simon Willison's Weblog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Microsoft Security Blog
Microsoft Security Blog
cs.CL updates on arXiv.org
cs.CL updates on arXiv.org
C
CXSECURITY Database RSS Feed - CXSecurity.com
T
Threatpost
WordPress大学
WordPress大学
Project Zero
Project Zero
A
Arctic Wolf
C
Cyber Attacks, Cyber Crime and Cyber Security
L
Lohrmann on Cybersecurity
C
Cybersecurity and Infrastructure Security Agency CISA
I
Intezer
G
GRAHAM CLULEY
A
About on SuperTechFans
S
Securelist
P
Palo Alto Networks Blog
T
Tor Project blog
罗磊的独立博客
C
Cisco Blogs
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Know Your Adversary
Know Your Adversary
NISL@THU
NISL@THU
Latest news
Latest news
博客园 - 叶小钗
C
CERT Recently Published Vulnerability Notes
U
Unit 42
AWS News Blog
AWS News Blog
J
Java Code Geeks
小众软件
小众软件
D
Docker
The Cloudflare Blog
Cisco Talos Blog
Cisco Talos Blog
B
Blog
V
Vulnerabilities – Threatpost
V
V2EX
GbyAI
GbyAI
博客园_首页

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம் இந்தியாவின் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி ஒரு மாதத்தில் 40%-லிருந்து 60% ஆக உயர்வு விஜய் தனிக்கட்சி தொடங்கியிருப்பது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம் “இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டே பழகிவிட்டேன்” - செங்கோட்டையன் ஒப்புதல் “ஸ்டாலினும், உதயநிதியும் டெல்டாக்காரர்கள் அல்ல...உல்டாக்காரர்கள்” - டிடிவி.தினகரன் நக்கல் “திமுக இனி ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது” - அண்ணாமலை கருத்து “மக்களவைத் தேர்தல் என ஸ்டாலின் நினைக்கிறார்” - அன்புமணி கிண்டல் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 ஏப்ரல் 2026 ஜோதிட நாள்காட்டி 12.04.2026 | பங்குனி 29 - ஞாயிற்றுக்கிழமை திமுக கூட்டணியை ஆதரித்து ஏப். 17 முதல் கமல் பிரச்சாரம் ‘ஜனநாயகன்’ படத்தை கசிய விட்டது யார்? - சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை தருமபுரி தொகுதியில் தடம் பதிப்பது யார்? பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: ஐசியூ-வில் தீவிர சிகிச்சை திருப்பத்தூர் தொகுதியில் திருப்பம் யாருக்கு? “பாஜகவுடன் சேர்ந்து ஜேடியு தலைவர்கள் நிதிஷ் குமாருக்கு எதிராக சதி செய்தனர்” - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு பிடிஆர் Vs சுந்தர்.சி: வெடித்த வார்த்தைப் போர் - மதுரை மத்திய தொகுதியில் நடப்பது என்ன? “என்டிஏ வந்தால் மீண்டும் தமிழகத்தை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவர்” - முதல்வர் ஸ்டாலின் “திமுக ஆட்சியில் கனிமவள கொள்ளை தீவிரம்” - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு The Voice of Hind Rajab: எல்லாரும் கேட்க வேண்டிய குரல் | சினிமாவும் அரசியலும் 26 தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்? திருத்துறைப்பூண்டி தொகுதியில் ‘திக் திக்’ வெற்றி யாருக்கு? உத்திரமேரூர் உக்கிரம் எடுக்கும் தேர்தல் பிரச்சாரம் காக்கி சர்க்கஸ்: நகைச்சுவை வெடிப்பும் காதலின் துடிப்பும் | ஓடிடி திரைப் பார்வை “ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கட்டணம் விதிக்க அமெரிக்கா அனுமதிக்காது” - ட்ரம்ப் உறுதி சங்கராபுரம் தொகுதியில் வெல்லப்போவது யார்? “மேற்கு வங்கத்தை கூட்டாக கொள்ளையடிப்பவர்களுக்கு தண்டனை உறுதி” - அமித் ஷா “தேதி குறித்து கள் இறக்குவேன்; என்னை சுடுங்கள் பார்க்கலாம்...” - சீமான் சவால் மடத்துக்குளம் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்? திருப்பத்தூர் தொகுதியில் தவெகவின் மாற்று வேட்பாளர் சுயேட்சையாக போட்டி! ஆயிரம் விளக்கு தொகுதியில் அனல் பறக்கும் ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள் கூடலூரில் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா திமுக? தி.நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சிகள் “திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” - பிரதமர் மோடி மேஷம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் “இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதற்கான நிதி குறித்து விளக்க வேண்டும்” - வெங்கய்ய நாயுடு ஆர்.கே.நகர் தொகுதியில் வீதிகளில் வலம்வரும் வேட்பாளர்கள் “மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது” - குஷ்பு ‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானது பற்றி சிபிஐ விசாரணை கோர விஜய் தயாரா? - பாஜக கேள்வி “அடுத்த 10 நாட்களுக்கு...” - தவெகவினருக்கு விஜய் வைத்த கோரிக்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஜே.டி. வேன்ஸ், முகம்மது பாகர் கலிபா இஸ்லாமாபாத் வருகை தலைமைச் செயலர் மாற்றம், சந்தீப் மிட்டல் நியமனத்தை திரும்பப்பெறுக - தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு கடிதம் “234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” - முதல்வர் ஸ்டாலின் மதுபாலா பயோபிக்​கில் சாரா அர்ஜுன் ரிஷபம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் LiK - விமர்சனம்: பிரதீப் ரங்கநாதனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் காதல் கதை எப்படி? பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பட்டையை கிளப்பப்போவது யார்? மோச​மான வதந்​தி​களை பரப்பிய ஹீரோ: சோமி அலி புகார் 7 உண்​மைச் சம்​பவங்​களை மையப்படுத்​திய ‘மிஸ்டர் எக்ஸ்’ - இயக்​குநர் தகவல் மலையாள இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் தமிழகத்தில் வணிக ரீதியான எல்பிஜி ஒதுக்கீட்டை 70% அதிகரிக்க நடவடிக்கை: இந்திய எண்ணெய் கழகத் தலைவர் தகவல் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வரின் தனிச்செயலர் மீது நடவடிக்கை கோரி வழக்கு சினி​மா​வில் 21 வருடங்கள்: நடிகை தமன்னா நெகிழ்ச்சி “முன்மாதிரி தொகுதியாக தாம்பரம் மாற்றப்படும்” - அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உறுதி தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் புதுச்சேரியில் ஏப்.19-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி! இந்​தி​யில் மீண்டும் நிமிஷா சஜயன் மத்திய பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: தேர்தலை சுதந்திரமாக நடத்த அறிவுறுத்தல் வட அமெரிக்கா​வில் இளையராஜா இசை சுற்றுப்பயணம் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி நீக்கம்: செல்வப்பெருந்தகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா வழக்கு “பயிற்சியில் 150 சிக்ஸர்கள் வரை விளாசுவேன்” - லக்னோ அணியின் புதிய ஹீரோ முகுல் சவுத்ரி ‘காசி’ தொகுதி சலசலப்பு | உள்குத்து உளவாளி “பேட்ஸ்மேன்களின் சாதுர்யத்தால் டி20 மாறிவிட்டது” - மனம் திறக்கும் நடராஜன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் “நடுவர் செய்த தவறால் லக்னோவிடம் தோற்றோம்” - கொல்கத்தா அணியின் ரோவ்மன் பாவல் ஆதங்கம் வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? - டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இன்று மோதல் இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்! மாதவிடாய் குறித்து சர்ச்சைக் கருத்து: ஸ்ரீலீலாவுக்கு எதி​ராக விமர்​சனம் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியாக உதயநிதி, எல்.முருகன் தான் காரணம்: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: கிருஷ்ணசாமி அறிவிப்பு Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13
Welcome to Dongmakgol: மகிழ்வூட்டும் திரை மொழியில் யுத்தமும் மனிதமும் | ஓடிடி சினிமா அலசல்
2026-04-18 · via hindutamil
முனைவர் மனோலஷ்மி பாண்டியராஜன்

Updated on

4 min read

போரையும், போர்க்களத்தையும் அடிப்படையாக கொண்டு திரைப்படங்கள் உருவாக்க மிகவும் ஏற்ற நாடு என்று கூறினால், வட/தென் கொரிய நாடு(கள்) தான். சித்தாந்த வேறுபாடுகளால் பிரிந்த இந்த நாடுகள், வரலாற்றின் காயங்களை சுமந்த நாடுகள். இன்னும் முடிவுறாத மோதலின் நினைவால் வடிவமைக்கப்பட்ட நாடுகள். அந்த வரலாற்றுக் காயங்களிலிருந்தே உலகின் சிந்தனையூட்டும் போர்த் திரைப்படங்கள் சில தென் கொரிய நாட்டில் இருந்து உருவாகின. அவற்றில் தனித்துவமாக திகழ்வது ‘வெல்கம் டூ டோங்க்மாகோல்’ (Welcome to Dongmakgol).

2005-ஆம் ஆண்டு வெளியான, பார்க் வாங்-ஹியூன் (Park Kwang-hyun) இயக்கிய இந்தப் படம் கற்பனை, நகைச்சுவை, சோகம், பிரிவு, குற்ற உணர்வு மற்றும் அரசியல் சிந்தனையை ஒன்றாக இணைத்து ஓர் ஆழமான போருக்கு எதிரான கருத்தை முன்வைக்கிறது. இது நம்மை ஒரே நேரத்தில் சிரிக்க வைக்கும், மனதை நொறுக்கும், மென்மையும் வேதனையும் கலந்த ஓர் அனுபவத்தை கொடுக்கும்.

முக்கியமாக, மனிதர்களின் அப்பாவித்தனத்தையும், ஒரு சாமானியனின் கோபத்தையும் கொண்டு போரின் விளைவுகளை காண்பிக்கும் ஒரு படம். 2007-ஆம் ஆண்டு சென்னை நகரில் நடைபெற்ற சர்வதேச கொரிய திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் படம் இதுவே.

முதல் பார்வையில் இது ஒரு சாதாரண போர்ப் படமாகத்தான் தெரியும். ஆனால், மெல்ல மெல்ல காட்சிகள் நகர, அங்கே பெரிய போர் காட்சிகள், தேசப்பற்று உரைகள் அல்லது ராணுவ திட்டங்கள் எதுவும் தென்படவில்லை. அதற்கு பதிலாக, நவீன அரசியலால் தொடாத ஒரு மலையக கிராமத்தை படம் அறிமுகப்படுத்துகிறது.

அந்தக் கிராம மக்கள் இயற்கையுடன் ஒற்றுமையாக வாழ்கின்றனர். துப்பாக்கி, விமானம், அரசியல் சித்தாந்தம் போன்றவற்றைப் பற்றி அவர்களுக்கு தெரியாது. அவர்களைச் சுற்றி போர் நடக்கிறது என்பதையும் அவர்கள் அறியவில்லை. இதுவே, படத்தின் மிகப்பெரிய பலம்.

எதிர் எதிர் தரப்பில் உள்ள சிப்பாய்களை இந்த அமைதியான உலகுக்குள் கொண்டு வைக்கும்பொழுது படம் ஓர் எளிய, ஆனால் வலிமையான கேள்வியை எழுப்புகிறது. அது:

நவீன சமூகத்தால் நமக்குள் கட்டமைக்கப்பட்டுள்ள சிந்தனைகளிலில் இருந்தும், பயம் மற்றும் அரசியல் பிரச்சாரங்களிலிருந்தும் மனிதர்கள் விலகி நின்றால் என்ன நடக்கும்?

1950-களின் கொரியப் போரின் பின்னணியில் கதை நகர்கிறது. மூன்று வட கொரிய சிப்பாய்கள், இரண்டு தென் கொரிய சிப்பாய்கள், மற்றும் ஓர் அமெரிக்க விமானி, எல்லோரும் தவறுதலாக டோங்க்மாகோல் கிராமத்தில் அடைக்கலம் தேடி வந்து சேருகின்றனர்.

வெளி உலகத்தில் அவர்கள் எதிரிகள். ஆனால், இந்த கிராமத்தில் அந்த அடையாளங்கள் மெதுவாக மறைகின்றன. அவர்களின் உடைகளில் இருக்கும் அரசியல் அடையாளங்கள் முக்கியமல்ல; உழைப்பு, சிரிப்பு, நிம்மதியான தூக்கம், ஒருவருக்கு ஒருவர் தரும் அன்பு – இவைதான் முக்கியம். டோங்க்மாகோல் மெதுவாக இவர்களை எதிரிகளில் இருந்து நண்பர்களாக மாற்றுகிறது.

இந்தப் படத்தின் மிகச் சிறந்த அம்சம், அதன் ‘டோன்’. பெரும்பாலான போர் படங்கள் பதற்றம் மற்றும் துயரத்தை மையமாகக் கொண்டிருக்கும். அதனால் போர்க் காட்சிகள் கோரமாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இங்கு இயக்குநர் வேறு ஒரு பாதையைத் தேர்வு செய்கிறார். நகைச்சுவை மூலம் போரின் அவலத்தை வெளிப்படுத்துகிறார்.

ஒரு முக்கியக் காட்சியில் சிப்பாய்கள் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் மிரட்டும்போது, கிராம மக்கள் குழப்பமடைகின்றனர். அவர்களுக்கு அது வெறும் “குச்சிகள்” போலத் தெரிகிறது. இந்த ஒரு காட்சியில் வெளிப்படுத்தும் எளிய உண்மை இதுதான்: வெறுப்பு கற்றுக் கொள்ளப்படுவது; இயல்பானது அல்ல.

முதலில் பயந்தாலும், நேரம் கடக்க கடக்க அந்த கிராம மக்கள் அந்த சிப்பாய்களின் ‘மெக்சிகன் ஸ்டாண்ட் ஆஃபை’ அலட்சியமாக எடுத்துக்கொண்டு, அவர்களின் அன்றாட வேலையில் ஈடுபடுகின்றனர். சில தினங்களுக்குப் பிறகு அது அவர்களுக்கு வேடிக்கையாக இருக்கிறது.

படத்தின் மிகவும் நினைவில் நிற்கும் ஒரு காட்சி, ஒரு குண்டு வெடிக்கும்போது சோளம் பாப்கார்னாக வானத்தில் பனி போல விழுகிறது. போரின் ஆயுதம் ஓர் அற்புதமாக மாறுகிறது. அந்த பாப்கார்ன் மழையில் நனையும் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால், அதன் பின் அந்த கிராம மக்களின் சோளக் கிடங்கை அழித்தற்காக இரு தரப்பு சிப்பாய்கள் வெட்கப்படுகிறார்கள். குளிர்காலத்துக்காக உழைத்து சேர்த்து வைத்திருந்த உணவை அழித்துவிட்ட குற்ற உணர்வில் நிற்கின்றனர் சிப்பாய்கள்.

இந்தப் படத்தில் டோங்க்மாகோல் கிராமம் என்பது ஓர் இடம் மட்டுமல்ல. அது ஒரு சின்னம். அரசியல் பிரிவுகளுக்கு முன்பிருந்த ஒரு கொரியாவை அது குறிக்கிறது. படம் முழுவதும் இப்படி ஒரு கனவாக செல்லவில்லை, மாறாக இறுதியில் அந்தக் கிராமத்தையும் போர் தாக்குகிறது. அதுவே கதைக்கு உணர்ச்சியும் வலிமையும் தரும் தருணமாக மாறுகிறது.

இந்தப் படத்தின் ஆழத்தில் வலிமை கொண்ட நாடுகளின் போர் வெறியால் சரியாக புரிதல் இல்லாத இளம் சிப்பாய்களின் அறியாமையையும் கண்மூடித்தனமான சித்தாந்த நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறார் இயக்குநர்.

காங் ஹையி-ஜுங் (Kang Hye-jung) நடித்த யியோ-யில் (Yeo-il) என்ற கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. அவள் குழந்தை போன்றவள். எதிரி என்ற கருத்தே அவளுக்குத் தெரியாது. அவளே கதையின் இதயத் துடிப்பு. அவளின் இழப்பு தரும் சோகம்தான் அங்கே கிராம மக்களும், சிப்பாய்களும் உணரும் முதல் மனக்கசப்பு.

படத்தின் காட்சிகள் மெல்ல மெல்ல மனிதர்களை இணைக்கிறது. சாப்பாடு, உழைப்பு, சிரிப்பு - இவற்றால் எதிரிகளாக நின்ற மனிதர்களின் மனதில் ஒரு நட்புக்கான நம்பிக்கையை உருவாக்குகிறது அந்த கிராமத்தின் சூழல்.

ஒரு காட்டுப் பன்றி தாக்கும் காட்சி மிகவும் முக்கியமான ஒன்று. அந்தப் பன்றி போரின் சின்னமாக பார்க்கப்படுகிறது. அதை வென்ற பிறகு அனைவரும் ஒன்றாக இணைகிறார்கள். எதிரிகள் அனைவரும் நண்பர்களாக மாறுகிறார்கள். இதில் என்னவென்றால், அந்த கிராம மக்கள் சுத்த சைவம்.

இரு தரப்பு சிப்பாய்களும் அந்த காட்டுப் பன்றியை கொன்ற பின், மக்கள் அதை புதைக்க, வெகு நாட்களாக அசைவம் சாப்பிடாத அந்த சிப்பாய்கள் இரவில் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் அந்த பன்றிக் கறிக்காக ஒன்றுகூடுவது நம்மை சிரிக்க வைக்கும். பசி வந்தால் பத்தும் பறந்து போகும், இதில் அரசியல் சதஜ் தாந்தமும் ஒன்று போல. அடிப்படையில் வேறொருவர் ஊட்டி வளர்த்த சித்தாந்தத்தில் நமக்கு நம்பிக்கையில்லை என்றால் அதற்கு ஆயுள் காலமும் கம்மிதான்.

“இவர்கள் தான் எதிரி”, “அவர்கள் தான் எதிரி” என்று கற்றுக் தருகிறது அரசியல் சூழல்கள். ஆனால், அருகில் வாழும்போது எதிர் தரப்பு மனிதர்கள் நம்மைப் போல் சாதாரண மனிதர்கள் என்பதைக் காட்சிகள் வாயிலாக காணமுடிகிறது.

படத்தின் இறுதிப் பகுதி மிகவும் உணர்ச்சிமிக்கது. கிராமத்தை காப்பாற்ற சிப்பாய்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்கிறார்கள். அவர்கள் போருக்காக அல்ல, அந்த கிராமத்தின் அமைதிக்காக இறக்கிறார்கள்.

இந்தப் படம் நமக்கு ஒரு தீர்வும் சொல்லாது. ஆனால், ஓர் உண்மையை நினைவூட்டுகிறது. அமைதியான ஒரு சூழலில், இக்கட்டான ஒரு நிமிடங்களில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடியும்.

இது ஒரு சாதாரண போர்ப் படம் அல்ல. இது மனிதம் பற்றிய ஒரு கதை. இது சிரிக்க வைக்கும், அழ வைக்கும், சிந்திக்க வைக்கும். அதன் மென்மைதான் அதன் வலிமை. இன்றும் இந்தப் படம் பொருத்தமானதாக இருப்பதற்குக் காரணம், உலகம் இன்னும் பிரிவினைகளால் நிரம்பியுள்ளது.

மொத்தத்தில், ‘வெல்கம் டூ டோங்க்மாகோல்’ ஓர் அரிதான படம். இது ரசிக்க வைப்பது மட்டுமல்ல, மனதை மாற்றும். எதிரிகள் உருவாக்கப்படுகிறார்கள். ஆனால், நட்பு இயல்பாக வருகிறது. அதுவே இந்தப் படத்தின் மிகப்பெரிய உண்மை. இந்தப் படத்தை நீங்கள் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் கண்டு நல்ல திரை அனுபவம் பெறலாம்.

> தொடர்புக்கு: drmanoideunom@gmail.com