惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
M
MIT News - Artificial intelligence
MyScale Blog
MyScale Blog
博客园_首页
G
Google Developers Blog
博客园 - 【当耐特】
美团技术团队
博客园 - 聂微东
Stack Overflow Blog
Stack Overflow Blog
Vercel News
Vercel News
小众软件
小众软件
博客园 - 司徒正美
雷峰网
雷峰网
T
Tailwind CSS Blog
V
V2EX
博客园 - 三生石上(FineUI控件)
F
Fortinet All Blogs
罗磊的独立博客
量子位
P
Proofpoint News Feed
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
月光博客
月光博客
A
About on SuperTechFans
Hugging Face - Blog
Hugging Face - Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மூலப்பொருட்கள் விலையேற்றம், தொழிலாளர் பற்றாக்குறையால் கரூ...
செய்திப்பிரிவு · 2026-05-17 · via hindutamil

Updated on: 

கரூர்: மூலப்பொருட்களின் விலையேற்றம், தொழிலாளர் பற்றாக்குறையால் கரூர் ஜவுளித் தொழில் கடும் நெருக்கடியில் உள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்க உறுப்பினர்கள் கூட்டம், சங்ககூட்டரங்கில் நேற்று முன்தினம்நடைபெற்றது. இக்கூட்டத்தில், தற்போதைய ஜவுளித் தொழிலின் சவால்கள், உற்பத்தி தடைகள், ஏற்றுமதி துறையில் உருவாகி வரும் நெருக்கடிகள் குறித்து விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

குறிப்பாக கடந்த சில மாதங்களாக ஜவுளி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை 30 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை உயர்ந்திருப்பது குறித்து உறுப்பினர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்தனர். இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியது: மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் பெட்ரோலியம் சார்ந்த மூலப்பொருட்களான பாலியஸ்டர், சாயத் தொழிலுக்கான ரசாயனங்கள், பாலிதீன், பேக்கிங் பொருட்கள் உள்ளிட்ட ஜவுளிஉற்பத்திக்கு அத்தியாவசிய மான பொருட்களின் விலை திடீர் உயர்வை சந்தித்துள்ளது.

மேலும், சர்வதேச கப்பல் போக்குவரத்து தாமதங்கள், இறக்குமதி, சரக்குகளின் பற்றாக்குறை காரணமாக சாயமிடுதல், பிரின்டிங், பிற ஜாப்வொர்க் செயல்முறைகளின் செலவுகள் பெருமளவில் உயர்ந்துள்ளன. நாட்டில் பருத்தி உற்பத்தியில் முன்னணியில் இருந்தாலும், பருத்தி நூல் விலையேற்றம் செயற்கையாகவே தெரிகிறது.

அதேபோல, கரூர் ஜவுளித் துறையில் அதிகமாக பயன்படுத்தப்படும் மறுசுழற்சி செய்யப்பட்ட பருத்தி, பாலியஸ்டர் கலவை நூல்களின் விலையும் 10 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இத்துடன், இங்கு பணிபுரிந்து வந்த வெளிமாநில தொழிலாளர்கள் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். மேலும், உள்ளூர் தொழிலாளர்களின் வருகையும் குறைந்துள்ளதால், உற்பத்தி நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக ஊதியச் செலவுகளும் கணிசமாக உயர்ந்துள்ளன. இத்தகைய சூழலில், உற்பத்தியை தொடர்வதும், புதிய ஏற்றுமதி ஒப்பந்தங்களை மேற்கொள்வதும் தொழில் நிறுவனங்களுக்கு கடுமையான நிதிச் சுமையாக மாறியுள்ளது. இந்த நிலைநீடித்தால், கரூர் ஜவுளித் துறையின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், ஏற்றுமதிவளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு களுக்கும் பெரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, மத்திய, மாநில அரசுகளிடம் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்த கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்

ளது. ஜவுளித் துறைக்கு உடனடி நிவாரண, ஆதரவு திட்டங்களை அறிவிக்க வேண்டும். மூலப்பொருட்களின் விலை நிலைத்தன் மையை உறுதி செய்ய வேண்டும். ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வட்டி மானியம், நிதி உதவிகள்வழங்கவேண்டும். தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க சிறப்பு திட்டங்கள் உருவாக்கவேண்டும். சிறு, நடுத்தர ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு, ஊக்கத் திட்டங்கள் வழங்கவேண்டும்.

மேலும், கரூர் ஜவுளி நிறுவனங்களிலிருந்து பொருட்களை வாங்கும் உள்நாட்டு, வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு தற்போதைய சூழ்நிலைகளை விளக்கி, மூலப்பொருட்களின் விலையேற்றம், தொழிலாளர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு தயாரிப்புகளின் விலையை மறு ஆய்வு செய்யவும், உற்பத்தி, விநியோகத்துக்கான கால அவகாசத்தை நீட்டிக்கவும் வேண்டுகோள் விடுக்கும் வகையில் கடிதம் அனுப்ப சங்கம் முடிவு செய்துள்ளது.

அதேபோல, மூலப்பொருட்கள் வழங்கும் விற்பனையாளர்கள், சாயம், ஜாப்வொர்க் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய தரப்பினரும் தற்போதைய சூழ்நிலையை உணர்ந்து, அடிக்கடி விலை உயர்வு செய்யாமல், கரூர் ஜவுளித் துறையைப் பாதுகாக்கும் நோக்கில் தொழில் நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கரூர் ஜவுளித் துறை என்பது ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. எனவே, இந்த நெருக்கடியான சூழலில் வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், அனைத்து தொடர்புடைய தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் இந்த முக்கியமான ஏற்றுமதி துறையை பாதுகாக்க முடியும் என்று சங்கம் தெரிவித்துள்ளது.