惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

T
The Blog of Author Tim Ferriss
罗磊的独立博客
月光博客
月光博客
GbyAI
GbyAI
腾讯CDC
G
Google Developers Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
U
Unit 42
Engineering at Meta
Engineering at Meta
A
About on SuperTechFans
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
aimingoo的专栏
aimingoo的专栏
C
Check Point Blog
Y
Y Combinator Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
I
InfoQ
雷峰网
雷峰网
B
Blog RSS Feed
美团技术团队
M
MIT News - Artificial intelligence
有赞技术团队
有赞技术团队
D
Docker

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தளி தொகுதியில் வெற்றி கிரீடம் யாருக்கு?
2026-04-20 · via hindutamil
கி.ஜெயகாந்தன்

Updated on

2 min read

தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகள் வரிசை பட்டியலில் 56-வது இடத்தில் தளி சட்டப்பேரவை தொகுதி உள்ளது. ‘லிட்டில் இங்கிலாந்து’ என்று அழைக்கப்படும் இத்தொகுதி கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கடைக்கோடியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் 60 சதவீதம் வனம் மற்றும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழகத்துக்குள் இத்தொகுதியில் உள்ள வனக் கிராமமான பிலுகுண்டுலு வழியாக நுழையும் சிறப்பு பெற்றுள்ளது.

கடந்த 1977-ம் ஆண்டுக்கு முன்னர் உத்தனப்பள்ளி சட்டப்பேரவைத் தொகுதியாக இருந்தது. 1977-ல் உத்தனப்பள்ளி தொகுதி நீக்கப்பட்டு, புதிதாக இத்தொகுதி உருவானது. இயற்கை வளங்கள் நிறைந்த இத்தொகுதியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது என 4 மொழிகள் பேசும் மக்கள் உள்ளனர்.

குறிப்பாக தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் அதிகம் உள்ளனர். மேலும், நாகரிக காலத்தில் பழமை மாறாமல் பாரம்பரியமாக வாழும் இருளர் இன மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இத்தொகுதி தளி மற்றும் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளன.

இத்தொகுதியைப் பொறுத்தவரை இதுவரை நடைபெற்ற 11 தேர்தல்களில் தேசிய கட்சிகள் அதிக முறை வெற்றி பெற்றுள்ளன. இதில், காங்கிரஸ் 4 முறையும், ஜனதா, பாஜக, திமுக, சுயேச்சை தலா ஒரு முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

தற்போதைய தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிட்டிங் எம்எல்ஏ ராமச்சந்திரன் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் நாகேஷ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் நரசிம்மன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சுரேஷ் மற்றும் சுயேச்சைகள் உட்பட 10 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்

மலைக் கிராமங்கள் அதிகமாக உள்ள இத்தொகுதி கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியிருப்பதால், அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் இம்மக்களுக்கு சென்று சேராத நிலையுள்ளது.

குறிப்பாக குழந்தைகள் கல்வி இடை நிறுத்தம், மக்களின் வறுமை மற்றும் அறியாமை காரணமாக இளம் வயது திருமணங்கள் அதிகம் நடைபெறுகின்றன. அடர்ந்த வனப்பகுதியையொட்டி உள்ளதால், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளால் பயிர்ச் சேதம் மற்றும் மனித உயிர்ச் சேதம் ஏற்படுகிறது.

இதை தடுக்க வனப்பகுதியை ஒட்டி சூரிய சக்தி வேலிகள், தடுப்புகள் அமைக்க வேண்டும். வனத்துறையில் கூடுதல் ஊழியர்களை நியமித்து வன விலங்குகள் விளைநிலங்களுக்குள் நுழைவதைத் தடுக்க வேண்டும். அஞ்செட்டி அருகே தொட்டல்லா பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பன விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

மலைக் கிராம மாணவர்கள் மேல்நிலை மற்றும் உயர்நிலை கல்வியைத் தொடர அரசு மேல்நிலை பள்ளிகள், அரசு கலை கல்லூரி, பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும் என்பது இளைஞர்களின் கோரிக்கையாக உள்ளது. மலைக் கிராமங்களில் சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்பது பழங்குடியின மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

வேட்பாளர்களின் பின்புலம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரன் 3 முறை இத்தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் தொகுதி மக்களிடம் நன்கு பரிச்சயமானவர் கட்சியில் மாவட்டச் செயலாளராக உள்ளார். பண பலம், மலைவாழ் மக்களிடம் உள்ள செல்வாக்கு இவருக்கு பலமாக கருதப்படுகிறது. இவர் மீதான வழக்குகளைக் கூறி பிற வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதானப்படுத்துவது இவருக்கு பலகீனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொகுதிக்கு இதுவரை தான் செய்த வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், குறிப்பாக யானைகளால் மனித உயிர்ச் சேதம் மற்றும் பயிர்ச் சேதங்களின்போது, விவசாயிகளுடன் இணைந்து போராடியது உள்ளிட்ட பணிகள் குறித்தும், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதாகக் கூறி பிரச்சாரத்தில் முன்னேறி வருகிறார்.

பாஜக வேட்பாளர் நாகேஷ்குமார் கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளார். தொகுதி மக்களிடம் பரிச்சயமானவர். கட்சியில் மருத்துவர் அணியில் பதவி வகித்துள்ளார். தற்போது மேற்கு மாவட்ட துணை தலைவராக உள்ளார்.

இம்முறை இவரது வெற்றியை உறுதி செய்ய அக்கட்சியின் தேசிய தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பிரச்சாரம் செய்திருப்பது இவருக்கு பலம் சேர்த்துள்ளது. மலைக்கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கூறி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நரசிம்மன், வனம், மலைகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாத்தல், சுற்றுச்சூழலை காப்பது, தற்சார்பு பொருளாதாரம் மற்றும் கட்சியின் தேர்தல் அறிக்கைகளை பட்டியலிட்டு மக்களிடம் தனது வெற்றிகாக களமாடி வருகிறார்.

தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சுரேஷ், புதியவர்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என்றும் கட்சியின் தேர்தல் அறிக்கைகளை பட்டியலிட்டும் தேர்தல் களப்பணியில் தீவிரம் காட்டி வருகின்றார். களத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பாஜகவுக்கு இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், இத்தொகுதியை மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தக்க வைக்குமா அல்லது தாமரை மலருமா என்பது தேர்தல் முடிவே தெளிவுபடுத்தும்.

வாக்காளர்கள் விவரம்

ஆண்கள் - 1,20,000

பெண்கள் - 1,15,947

3-ம் பாலினத்தவர் - 37

மொத்த வாக்காளர்கள் - 2,35,984