惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
Docker
G
Google Developers Blog
J
Java Code Geeks
B
Blog
C
Check Point Blog
云风的 BLOG
云风的 BLOG
MyScale Blog
MyScale Blog
I
InfoQ
A
About on SuperTechFans
WordPress大学
WordPress大学
F
Fortinet All Blogs
S
SegmentFault 最新的问题
T
Tailwind CSS Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 【当耐特】
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
M
MIT News - Artificial intelligence
月光博客
月光博客
Y
Y Combinator Blog
Jina AI
Jina AI
V
V2EX
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
腾讯CDC
Apple Machine Learning Research
Apple Machine Learning Research

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேற்கு வங்கத்தில் 50 எம்எல்ஏக்கள் திடீர் போர்க்கொடி: திரி...
செய்திப்பிரிவு · 2026-06-03 · via hindutamil

Updated on: 

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்​தில், திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யில் (டிஎம்​சி) இருந்து இடைநீக்​கம் செய்​யப்​பட்ட முக்​கி​யத் தலை​வர் ஒரு​வர், தங்​களுக்கு 50 எம்​எல்​ஏக்​களின் ஆதரவு இருப்​ப​தாகக் கூறி அதிர்ச்​சியை ஏற்​படுத்தி உள்​ளார்.

மேற்கு வங்க மாநில சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்​சி​யைப் பிடித்​தது. முதல்​வ​ராகச் சுவேந்து அதி​காரி பொறுப்​பேற்​றார். இந்​நிலை​யில், தேர்​தலில் தோல்வி அடைந்த திரிண​மூல் காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் மற்​றும் வெற்றி பெற்ற எம்​எல்​ஏ.க்​கள் பலர் பாஜக.வுக்கு தாவ முயற்​சித்து வரு​கின்​றனர். எனினும், தற்​போதைக்​குத் திரிண​மூல் கட்​சி​யில் இருந்து வருபவர்​களை கட்​சி​யில் சேர்க்க வேண்​டாம் என்று பாஜக மேலிடம் உத்​தர​விட்​டுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.

இதற்​கிடை​யில், திரிண​மூல் தேசிய செய்​தித் தொடர்​பாள​ரும் மூத்த தலை​வரு​மான ரிஜு தத்தா கடந்த சில நாட்​களுக்கு முன்​னர் பாஜக தலை​வர்​களை வெகு​வாகப் பாராட்டி பேசி​னார். தேர்​தலுக்​குப் பிந்​தைய வன்​முறை​யின் போது தனது குடும்​பத்​தைக் காப்​பாற்​றியதற்​காகப் பாஜக தலை​வர்​களுக்கு ரிஜு தத்தா நன்றி தெரி​வித்​திருந்​தார். இதனால் அதிருப்தி அடைந்த கட்​சித் தலை​வர் மம்தா பானர்​ஜி, ரிஜுவை கட்​சி​யில் இருந்து இடைநீக்​கம் செய்தார். இதை போல் மேலும் சிலர் இடைநீக்​கம் செய்​யப்​பட்​டனர்.

இந்​தப் பரபரப்​பான சூழ்​நிலை​யில், ஓட்​டல் ஒன்​றில் கூடிய திரிண​மூல் அதிருப்தி எம்​எல்​ஏ.க்​கள் குழு, தங்​களுக்கு மூன்​றில் இரண்டு பங்கு பெரும்​பான்மை இருப்​ப​தாக உரிமை கோரி​யுள்​ளது. இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில் ரிஜு தத்தா கூறிய​தாவது:

மேற்கு வங்​கத்​தில் தற்​போது மகா​ராஷ்டிர மாடல் அரசி​யல் அரங்​கேறி வரு​கிறது. எங்​களிடம் மூன்​றில் இரண்டு பங்கு பெரும்​பான்மை உள்​ளது. சுமார் 50 எம்​எல்​ஏ.க்​கள் எங்​களு​டன் இணைந்து செயல்​படு​கின்​றனர். நாங்​கள்​தான் உண்​மை​யான திரிண​மூல் காங்​கிரஸ். எனவே, சோவன்​தேப் சட்​டோ​பாத்​யாய்க்​குப் பதிலாக ரிதப்​ரதா பந்​தோ​பாத்​யாய் எதிர்க்​கட்​சித் தலை​வ​ராக இருப்​பார். பெரும்​பான்மை எம்​எல்​ஏ.க்​கள் எங்​கள் வசம் இருப்​ப​தால், கட்​சி​யின் சின்​னத்தை நாங்​களே தக்க வைத்​துக் கொள்ள அனு​ம​திக்க வேண்​டும். இவ்​வாறு ரிஜு தத்தா கூறி​யுள்​ளார்.

மேற்கு வங்க சட்​டப்​பேர​வை​யில் சமர்ப்​பிக்​கப்​பட்ட ஆவணங்களில் தங்​களது கையெழுத்​துகள் போலி​யாகப் போடப்​பட்​டுள்​ள​தாக, கட்​சி​யில் இருந்து நீக்​கப்​பட்ட ரிதப்​ரதா பந்​தோ​பாத்​யாய் மற்​றும் சந்​தீபன் சாகா ஆகிய திரிண​மூல் மூத்த தலை​வர்​கள் குற்​றம் சாட்​டி​யிருந்​தனர். இந்த கையெழுத்து மோசடி தொடர்​பாக சிஐடி விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

மேற்கு வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி 80 இடங்​களில் மட்​டுமே வெற்றி பெற்​றது. தற்​போது 50 எம்​எல்​ஏ.க்​கள் போர்க்​கொடி தூக்கி உள்​ள​தால், கட்சி 2 ஆக உடை​யும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. அத்​துடன், கட்​சி​யும் சின்​ன​மும் மம்தா பானர்​ஜி​யின் கையை விட்டு செல்​லும் சூழல் உரு​வாகி இருக்​கிறது.

‘செய் அல்​லது செத்து மடி’: கொல்​கத்​தா​வில் மம்தா பேச்சு

திரிணமூல் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி மீது சில நாட்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து திரிணமூல் எம்.பி. கல்யாண் பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இவற்றைக் கண்டித்தும் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டியும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நேற்று தர்ணாவில் ஈடுபட்டார்.

அப்போது மம்தா பேசியதாவது: மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகள் உள்ளன. இதில் 177 தொகுதிகளில் பாஜக முறைகேடுகளை செய்து வெற்றி பெற்றுள்ளது. முதலில் எஸ்ஐஆர் மூலம் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தேர்தலின் போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற்றன. நான் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தேன். ஆனால் முறைகேடுகளால் தோல்வி அடைந்தேன்.

சமீப காலமாக எனது கட்சித் தலைவர்களே துரோகிகளாக மாறி வருகின்றனர். எனக்கு எதிராகவும் திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராகவும் சதி வேலைகளைச் செய்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஒன்று சொல்கிறேன். திரிணமூல் கட்சியைக் கட்டிக்காக்க ‘செய் அல்லது செத்துமடி’ என்ற வகையில் நாம் செயல்பட வேண்டும்.

பாஜகவுக்கு எதிரான இண்டியா கூட்டணி கட்சிகள் டெல்லியில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்த உள்ளன. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.