惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

量子位
B
Blog
Last Week in AI
Last Week in AI
Jina AI
Jina AI
WordPress大学
WordPress大学
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
宝玉的分享
宝玉的分享
T
Tailwind CSS Blog
P
Proofpoint News Feed
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Google DeepMind News
Google DeepMind News
U
Unit 42
雷峰网
雷峰网
J
Java Code Geeks
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
MongoDB | Blog
MongoDB | Blog
F
Fortinet All Blogs
美团技术团队
Y
Y Combinator Blog
腾讯CDC
B
Blog RSS Feed
T
The Blog of Author Tim Ferriss
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Recent Announcements
Recent Announcements

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
5,000 தமிழக இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கிய சாம்சங்
2026-04-20 · via hindutamil

Updated on

2 min read

சாம்சங் இந்தியா குறித்து பொதுவாக பேசப்படும் கதை அதன் சந்தைப் பங்கு, ஸ்மார்ட்போன் வெளியீடுகள் மற்றும் உலகின் மிகப்பெரிய மொபைல் உற்பத்தி நிலையங்களில் ஒன்றான நொய்டா தொழிற்சாலை ஆகியவற்றைச் சுற்றி அமைந்துள்ளது.

இவை அனைத்தும் குறிப்பிடத்தக்க சாதனைகள்தான் என்றாலும் இது ஒரு பெரிய படத்தின் ஒரு பகுதி மட்டுமே. அதைவிட முக்கியமானதும், நீண்டகால தாக்கம் கொண்டதுமான ஒரு பகுதி, இந்தியாவின் மனிதவள மேம்பாடு மற்றும் புதுமை சூழலை உருவாக்குவதில் சாம்சங் வழங்கி வரும் பங்களிப்பாகும்.

இந்த மாற்றம் உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் வகுப்பறைகள், மகாராஷ்டிராவின் கோடிங் ஆய்வகங்கள், மேலும் ஐஐடி டெல்லி போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களின் இன்குபேஷன் மையங்களில் நடைபெற்று வருகிறது.

சாதனங்களை உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தாமல், டிஜிட்டல் இந்தியா வளர்ச்சிக்கு உதவும் ஒரு வலுவான புதுமை சூழலை உருவாக்குவதுதான் சாம்சங் இந்தியா நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக மாறியுள்ளது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஏப்ரல் 2026 நிலவரப்படி, அதன் முக்கியமான ‘சாம்சங் இன்னோவேஷன் கேம்பஸ் (SIC)’ திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் மட்டும் 5,000 இளைஞர்கள் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து சாம்சங் தென்மேற்கு ஆசியா நிறுவனத்தின் துணைத் தலைவர் எஸ்பி சுன் கூறும்போது, “இந்தியாவில் நாங்கள் 30 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த நேரத்தில், புதுமையும் கல்வியும் முன்னேற்றத்துக்கு உதவும் ஒரு கருவி மட்டுமல்ல. சமூகச் சேர்க்கைக்கு ஊக்கமாகவும் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.

எதிர்காலத்தில் இந்த திறன்களை பெரிய அளவில் பயனுள்ள தாக்கமாக மாற்றுவது முக்கியம். சாம்சங் நிறுவனத்தில், திறமை, படைப்பாற்றல் மற்றும் ஒத்துழைப்பு மனப்பான்மை கொண்ட புதிய தலைமுறை திறமையாளர்களை உருவாக்குவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என்றார்.

சாம்சங் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு (CSR) திட்டங்கள் இதுவரை 15 லட்சம் மக்களுக்கு பயன் அளித்துள்ளன. 2024–25 நிதியாண்டில் ரூ.144.48 கோடியாக இருந்த சமூகப் பொறுப்பு செலவு, 2025–26-ம் ஆண்டில் ரூ.193.89 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில், வகுப்பறையிலிருந்து வேலை வாய்ப்புகள் வரை மாணவர்களை வழிநடத்தும் ஒரு வலுவான திறன் மேம்பாட்டு அமைப்பை சாம்சங் உருவாக்கியுள்ளது. இந்த முயற்சியின் மையமாக எஸ்ஐசி திட்டம் அமைந்துள்ளது.

2025–26 ஆண்டுக்காக ரூ.77.25 கோடி ஒதுக்கீட்டுடன், செயற்கை நுண்ணறிவு, இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், பிக் டேட்டா மற்றும் நிரலாக்கம் போன்ற முன்னேற்றத் துறைகளில் இத்திட்டம் பயிற்சி வழங்குகிறது. 2022-ம் ஆண்டிலிருந்து இதுவரை 6,500 மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

அதில் 2024-ம் ஆண்டில் மட்டும் 3,500 பேர் சான்றிதழ் பெற்றுள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 17% அதிகரிப்பைக் காட்டுகிறது. 2025-ம் ஆண்டில், இந்த திட்டம் 10 மாநிலங்களில் 20,000 மாணவர்களை சென்றடைந்து, இந்திய அளவில் 48% பெண்கள் பங்கேற்பையும், தமிழ்நாட்டில் 70% க்கும் அதிகமான பெண்கள் பங்கேற்பையும் பதிவு செய்துள்ளது.

இந்த திட்டத்தின் தாக்கம் குறிப்பிடத்தக்க வகையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஈஎஸ்எஸ்சிஐ தேசியத் திறன் விருதுகள் 2024-ல், இத்திட்டம் “ஆண்டின் சிறந்த சமூகப் பொறுப்புணர்வு முயற்சி” என்ற விருதைப் பெற்றுள்ளது.

எஸ்ஐசி (SIC) திட்டத்தை பூர்த்தி செய்யும் வகையில், 'நாளைக்கான தீர்வு' என்ற ரூ.29.88 கோடி மதிப்புள்ள திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம், ஐஐடி டெல்லியின் புதுமை மற்றும் தொழில்நுட்ப பரிமாற்ற அறக்கட்டளை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் இந்தியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகிறது.

சமூக, சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சவால்களுக்கு தீர்வுகளை உருவாக்கும் இளைஞர்களை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். 2025-ம் ஆண்டு நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில், 'பாரஸ்பீக்' என்ற குழு தனது புதுமையான தீர்வுக்காக முதன்மை விருதைப் பெற்றது.

தொழில்நுட்பத் துறைக்கு அப்பாற்பட்டவர்களுக்காக, சாம்சங்கின் ‘டிஜிட்டல் மற்றும் நேரடித் திறன் பயிற்சி விற்பனைத் திட்டம்’ (DOST) மூலம் விற்பனை மற்றும் சேவை துறைகளில் பயிற்சி வழங்கப்படுகிறது.

‘நாணம்’ (Nanum) போன்ற தன்னார்வத் திட்டங்களுடன் இணைந்து, சாம்சங்கின் இந்த முயற்சிகள் ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்துகின்றன. இந்தியாவில் அதன் நிலையான பங்களிப்பு சாதனங்களின் விற்பனையில் அல்ல, திறமைகளை உருவாக்குவதிலேயே உள்ளது.