惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

阮一峰的网络日志
阮一峰的网络日志
The GitHub Blog
The GitHub Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
雷峰网
雷峰网
U
Unit 42
Y
Y Combinator Blog
I
InfoQ
P
Proofpoint News Feed
Engineering at Meta
Engineering at Meta
量子位
Microsoft Security Blog
Microsoft Security Blog
B
Blog
The Cloudflare Blog
F
Fortinet All Blogs
Google DeepMind News
Google DeepMind News
MyScale Blog
MyScale Blog
C
Check Point Blog
S
SegmentFault 最新的问题
爱范儿
爱范儿
博客园 - 叶小钗
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Hugging Face - Blog
Hugging Face - Blog
罗磊的独立博客
T
Tailwind CSS Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“சிபிஎஸ்இ-க்குள் பிக் பாக்கெட் திருடர்கள்... ஜாக்கிரதை!” ...
மோகன் கணபதி · 2026-06-01 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: சிபிஎஸ்இ விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்தவதற்கு கட்டணங்கள் என்ற பெயரில் பணம் கொள்ளையடிக்கப் படுவதாகவும், சிபிஎஸ்இ-க்குள் இருக்கும் பிக்பாக்கெட் திருடர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஓஎஸ்எம் முறை (On-Screen Marking - OSM) காரணமாக மதிப்பெண்கள் குறைந்துள்ளதாக மாணவர்கள் பலர் குற்றம் சாட்டி இருந்தனர். வேதாந்த் என்ற ஒரு மாணவர் மறுமதிப்பீட்டுக்காக விடைத்தாள் கோரி இருந்த நிலையில் அவருக்கு வேறொருவரின் விடைத்தாள் கொடுக்கப்பட்டது குறித்து சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்த நிலையில், அவரது சமூக ஊடக கணக்கு பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், வேதாந்த் உள்ளிட்ட சிபிஎஸ்இ12ம் வகுப்பு தேர்வெழுதி பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலருடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அவர் தனது உரையில், “ஓஎஸ்எம் முறை தொடர்பாக மாணவர்கள் பலர் புகார்களை தெரிவித்துள்ளனர். கல்வித்துறை என்பது ஒரு வணிகமாகவே பார்க்கப்படுகிறது. அதில் ஏற்படும் நிர்வாகத் தவறுகளுக்கான விலையை மாணவர்களே சுமக்க நேரிடுகிறது.

விடைத்தாள் நகல்களைப் பெறுவதற்கும், மதிப்பெண்களை மறு கூட்டல் செய்வதற்கும், மறு மதிப்பீடு செய்வதற்கும் வசூலிக்கப்படும் கட்டணங்கள் பிக்பாக்கெட் திருடர்கள் சிபிஎஸ்இ-க்குள் இருப்பதையும் அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதையுமே காட்டுகிறது.

கணினிமயமாக்கப்பட்ட விடைத்தாள் நகல்களைப் பெற ஒரு பாடத்துக்கு ரூ.100 கட்டணம், மறுகூட்டல் கோருவதாக இருந்தால் ஒரு விடைத்தாளுக்கு ரூ.100 கட்டணம், மறுமதிப்பீடு கோருவதாக இருந்தால் ஒரு கேள்விக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் ஒரு மாணவர் தனது சொந்த விடைத்தாளை துல்லியமாக மதிப்பிட ரூ.2,000 வரை செலுத்த வேண்டி இருக்கலாம். இதற்காக 4 லட்சம் மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது சிபிஎஸ்இ எவ்வளவு வருவாயை ஈட்டுகிறது என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள்.

கைபேசிகளைப் பயன்படுத்தி விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும்போது, மதிப்பிடுவதில் பிழைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. அந்த பிழைகளைச் சரி செய்வதற்கான செலவை மாணவர்கள ஏற்க வேண்டி இருக்கிறது. சிபிஎஸ்இ-யின் தவறுகளுக்கான தண்டனை மணவர்கள் மீது விழுகிறது. அதனால் கிடைக்கும் லாபம் அரசாங்கத்துக்குச் செல்கிறது.

கல்வி என்பது ஒரு சேவையாகப் பார்க்கப்படாமல், ஒரு வணிகமாகப் பார்க்கப்படும்போது பிழைகள் சரி செய்யப்படுவதில்லை. மாறாக, அவை பன்மடங்கு பெருகுகின்றன. இதற்கான மிகக் கடுமையான விலையை நம் குழந்தைகளே செலுத்தி வருகிறார்கள். அதோடு, தங்கள் நேரம், தங்கள் தன்னம்பிக்கை, தங்கள் எதிர்காலம் ஆகியவற்றையும் அவர்கள் இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

நீட் தேர்வு மட்டுமல்ல, சிபிஎஸ்இ தேர்வும் நிதிமயமாக்கப்பட்டுவிட்டது. அதீத அதிகார குவிப்பு ஒரு சிக்கலாகி, அது அமைப்பின் ஒரு பெரும் தோல்வியாகிவிடுகிறது. மாறாக, பரவலாக்கப்பட்ட அமைப்பு இருந்தால் ஒரு பக்கம் செயலிழந்தாலும் மற்றொரு பக்கத்தின் மூலம் உங்களால் அதைச் சமாளிக்க முடியும். எனவே, இந்திய கல்வி முறை இப்போது ஒரு கட்டமைப்புச் சிக்கலில் உள்ளது. மாணவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் கிடைக்க வேண்டும். காங்கிரஸ் அதை உறுதி செய்யும்” என தெரிவித்தார்.