惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Hugging Face - Blog
Hugging Face - Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
量子位
腾讯CDC
N
Netflix TechBlog - Medium
aimingoo的专栏
aimingoo的专栏
小众软件
小众软件
S
SegmentFault 最新的问题
A
About on SuperTechFans
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
T
Tailwind CSS Blog
G
Google Developers Blog
U
Unit 42
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
雷峰网
雷峰网
罗磊的独立博客
Vercel News
Vercel News
L
LangChain Blog
V
V2EX
P
Proofpoint News Feed
M
MIT News - Artificial intelligence
博客园 - Franky
V
Visual Studio Blog
J
Java Code Geeks

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நாடு முழுவதும் மே.3-ல் நடந்த நீட் தேர்வு ரத்து: தேசிய தேர...
2026-05-12 · via hindutamil

Updated on

2 min read

புதுடெல்லி: வினாத்தாள் கசிந்த விவகாரத்தின் எதிரொலியாக நாடு முழுவதும் கடந்த 3-ம் தேதி (மே.3) நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மறு தேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மருத்துவ இளநிலை பட்டப்படிப்புக்கான நீட் தேர்வு (NEET UG 2026) கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. எனினும், தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் வினாத்தாள் கசிந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசியத் தேர்வுகளை நியாயமான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான முறையில் நடத்துவதில் தேசிய தேர்வு முகமை கொண்டுள்ள உறுதிப்பாட்டுக்கு இணங்க, மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு தொடர்பாக எழுந்துள்ள புகார்கள் தொடர்பாக சுயாதீனமான சரிபார்ப்பு மற்றும் தேவையான நடவடிக்கைகளுக்காக மத்திய முகமைகளுக்கு தேசிய தேர்வு முகமை கடந்த 8ம் தேதி பரிந்துரை செய்திருந்தது.

மத்திய முகமைகளுடன் ஒருங்கிணைந்து தேசிய தேர்வு முகமை மேற்கொண்ட ஆய்வுத் தகவல்கள் மற்றும் சட்ட அமலாக்க முகமைகளால் பகிரப்பட்ட விசாரணை முடிவுகளின் அடிப்படையில், மே 3 ஆம் தேதியன்று நடத்தப்பட்ட NEET (UG) 2026 தேர்வை ரத்து செய்யவும், தனியாக அறிவிக்கப்படும் தேதிகளில் அத்தேர்வை மீண்டும் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமைக்குக் கிடைத்த தகவல்களையும், சட்ட அமலாக்க முகமைகளால் பகிரப்பட்ட விசாரணை முடிவுகளையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, ​​தற்போதைய தேர்வு நடைமுறையைத் தொடர்ந்து நீடிக்க அனுமதிக்க இயலாது என்பது உறுதியாகிறது.

இவ்விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்வதற்காக, இதனை மத்தியப் புலனாய்வுத் துறைக்கு (CBI) பரிந்துரைக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. அத்துறையின் விசாரணைக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும், உதவிகளையும் தேசிய தேர்வு முகமை வழங்கும். இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை அளிக்கும்.

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், தேசியத் தேர்வு முகமையின் நம்பிக்கையை காக்கும் வகையிலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு மீண்டும் நடத்தப்படுவதால், தேர்வர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் சிரமங்கள் ஏற்படும் என்பதை தேசிய தேர்வு முகமை நன்கு உணர்ந்துள்ளது. இத்தகைய பின்விளைவுகளை தேசிய தேர்வு முகமை சாதாரணமாகக் கருதவில்லை. இருப்பினும், இதற்கு மாற்றாக வேறு முடிவை எடுத்திருந்தால், அதிக தீங்குகள் ஏற்பட்டிருக்கும் என்பதாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2026 மே மாதத் தேர்வுச் சுழற்சியின்போது பதிவு செய்யப்பட்ட விவரங்கள், தேர்வர்களின் தகுதிநிலை மற்றும் அவர்களால் தேர்வு செய்யப்பட்ட தேர்வு மையங்கள் ஆகியவை, மீண்டும் நடத்தப்படவுள்ள தேர்வுக்கும் அப்படியே எடுத்துக்கொள்ளப்படும். இதற்குப் புதிதாகப் பதிவு செய்யத் தேவையில்லை. கூடுதல் தேர்வுக்கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. இத்தேர்வு தேசிய தேர்வு முகமையின் வளங்களைப் பயன்படுத்தி மீண்டும் நடத்தப்படும்.

மீண்டும் நடத்தப்படவுள்ள தேர்வுத் தேதிகள் மற்றும் மீண்டும் வெளியிடப்படவுள்ள நுழைவுச்சீட்டு (Admit Card) குறித்த கால அட்டவணை உள்ளிட்ட மேலதிகத் தகவல்கள், முகமையின் அதிகாரப்பூர்வ வழிமுறைகள் வாயிலாக வெளியிடப்படும். தேர்வர்கள் மற்றும் பெற்றோர்கள் இவ்வதிகாரப்பூர்வ வழிமுறைகளை மட்டுமே சார்ந்திருக்குமாறும், சமூக ஊடகங்களில் பரவிவரும் சரிபார்க்கப்படாத தகவல்களைப் புறக்கணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினாத்தாள் கசிவு விவகாரம்: 2026- 27-ம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்காக கடந்த மே 3-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில் கேட்கப்பட்ட 200 வினாக்களில் 80%-க்கும் கூடுதலான வினாக்கள் தேர்வுக்கு பல நாள்கள் முன்பே ராஜஸ்தானில் வெளியாகி விட்டதாகவும், இது தொடர்பாக அம்மாநில காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரிப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

மருத்துவம் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த விஷயத்தில் தேசிய தேர்வு முகமை தொடர்ந்து அலட்சியமாக நடந்து கொள்வதாக அரசியல் கட்சிகளின் விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில், வினாத்தாள் கசிந்ததால் கடந்த 3-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மறு தேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஆனால், மறுதேர்வுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.