惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

aimingoo的专栏
aimingoo的专栏
WordPress大学
WordPress大学
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 司徒正美
月光博客
月光博客
宝玉的分享
宝玉的分享
Recent Announcements
Recent Announcements
小众软件
小众软件
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
美团技术团队
博客园 - 三生石上(FineUI控件)
A
About on SuperTechFans
J
Java Code Geeks
云风的 BLOG
云风的 BLOG
罗磊的独立博客
大猫的无限游戏
大猫的无限游戏
IT之家
IT之家
Vercel News
Vercel News
量子位
Martin Fowler
Martin Fowler
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
Visual Studio Blog
腾讯CDC
有赞技术团队
有赞技术团队

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“இந்துக்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறார் முதல்வர் விஜய...
செய்திப்பிரிவு · 2026-06-21 · via hindutamil

Updated on: 

சென்னை: ​முதல்​வர் விஜய் தனது செயல்​பாடு​கள் மூலம் இந்​துக்​களுக்கு மிகப்​பெரும் நம்​பிக்​கை​யைக் கொடுத்​துள்​ளார் என்​கிறார் ஆலய வழிபடு​வோர் சங்​கத் தலை​வ​ரான மயி​லாப்​பூர் டி.ஆர்​.ரமேஷ்.

இந்து சமய அறநிலை​யத் துறை​யில் கடந்த திமுக ஆட்​சி​யில் அறிவிக்​கப்​பட்டு பணி​கள் தொடங்​கப்​ப​டா​மல் இருந்த 29 திருமண மண்​டபங்​கள், 17 வணிக வளாகங்​கள் என மொத்​தம் ரூ.245 கோடி மதிப்​புள்ள 46 கட்​டு​மானப் பணி​களுக்கு வழங்​கப்​பட்ட நிர்​வாக அனு​மதி ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த நடவடிக்கை மூலம் முதல்​வர் விஜய் மற்​றும் அறநிலை​யத் துறை அமைச்​சர் ரமேஷ் ஆகியோர் இந்​துக்​களுக்கு மிகப்​பெரும் நம்​பிக்​கை​யைக் கொடுத்​துள்​ள​தாக வலை​தளப் பதி​வில் மகிழ்ச்சி தெரி​வித்​துள்​ளார் டி.ஆர்​.ரமேஷ். தமிழகத்​தில் உள்ள முக்​கிய கோயில்​களின் நிதி ஆதா​ரம், வரவு - செலவு கணக்​கு​கள் தொடர்​பாக உயர் நீதி​மன்​றத்​தில் பல வழக்​கு​களை இவர் தொடர்ந்​துள்​ளார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’க் காக பேசி​ய​போது, அவர் மேலும் கூறிய​தாவது: ‘இனிவரும் காலங்​களில் கோயில் நிதி புனித​மான நோக்​கங்​களுக்கு மட்​டுமே பயன்​படுத்​தப்​படும். அறநிலை​யத் துறை​யில் கடந்த காலங்​களில் நடை​பெற்ற நிர்​வாக குளறு​படிகள் சரிசெய்​யப்​படும்’ என்ற ஆளுநர் உரை மூல​மாக, முதல்​வர் விஜய்​யின் நோக்​கம் தெளி​வாகத் தெரி​கிறது.

கோடி கோடி​யாக உள்ள கோயில் நிதி​யைப் பாது​காக்க கடந்த 5 ஆண்​டு​கால திமுக ஆட்​சி​யில் நீதி​மன்​றப் படியேறிப் போராடிய எங்​களைப் போன்ற சிலருக்கு மட்​டுமே இது எவ்​வளவு பெரிய முன்​னேற்​றம் என்​பது தெரி​யும். குறை​வாகப் பேசி அதி​க​மாக செயல்​படு​பவரே சிறந்த தலை​வர். அந்த வகை​யில், சிறந்த செயல் வீர​ராகத் திகழ்​கிறார் முதல்​வர் விஜய் . அவர் எடுத்​துள்ள இத்​தகைய நேர்​மறை​யான நடவடிக்​கைகளை மனதா​ரப் பாராட்​டியே ஆகவேண்​டும்.

தமிழக கோயில்​களைப் பொருத்​தவரை கடந்த திமுக ஆட்​சிக் காலம் என்​பது ஒரு கெட்ட கனவைப் போன்​றது. கோயில் நிதியை தவறாகப் பயன்​படுத்தி திட்​டங்​கள் என்ற பெயரில் எப்​படி​யெல்​லாம் செல​வழிக்க முடி​யுமோ அதைத்​தான் திமுக ஆட்​சி​யாளர்​கள் செய்​தனர்.

கோயில் நிதி​யைப் பயன்​படுத்தி வணிக ரீதி​யாக கட்​டு​மானங்​களை மேற்​கொள்​ளக் கூடாது என சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்​வில் கடந்த 2025 ஜூன் 19-ம் தேதி தடை உத்​தரவு பெற்​றேன். அந்த உத்​தரவை கடந்​த​கால திமுக அரசு மதிக்​க​வும் இல்​லை; அதை செயல்​படுத்​த​வும் இல்​லை.

நன்​கொடை​யாக, காணிக்​கை​யாக சிறுகச் சிறுகச் சேர்ந்த கோயில் நிதியை ஒரே நாளில் காலி செய்​யும் வித​மாக அறநிலை​யத் துறை அமைச்​ச​ராக இருந்த சேகர்​பாபு சட்​ட​விரோத அறி​விப்​பு​களை வெளி​யிட, அதற்​கெல்​லாம் தலை​யாட்​டும் வகை​யில் துறை ஆணை​யரும், செயலரும் சேர்ந்து கடந்த 5 ஆண்​டு​களில் பல்​வேறு தவறான அரசாணை​களை வெளி​யிட்​டனர். திமுக அரசின் சட்ட அதி​காரமற்ற அறி​விப்​பு​களை தூக்கி சுமந்த அறநிலை​யத் துறை அதி​காரி​கள் மீதும் கட்​டா​யம் நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

முன்​னாள் முதல்​வர் ஸ்டா​லினின் தொகுதி என்​ப​தற்​காக கொளத்​தூரில் மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில் நிதி​யில் இருந்து கல்​லூரியைத் தொடங்கி பல்​வேறு குளறு​படிகளை செய்​துள்​ளனர். அந்த கல்​லூரி​கூட அவசர கதி​யில் தொடங்​கப்​பட்டு தனி​யார் பள்​ளி​யில் இயங்​கியது. இதே​போல பல்​வேறு இடங்​களில் கோயில் நிதி​யில் இருந்து கல்​லூரி​களைத் தொடங்​கிய​தால், அதை எதிர்த்​தும் வழக்கு தொடர்ந்​தோம்.

வெறும் சட்​டப்​பேரவை அறி​விப்​பு​களை மட்​டுமே அடிப்​படை​யாகக் கொண்டு கோயில்​களில் இருந்து எடுக்​கப்​பட்ட பணம், சட்​டத்​தின் முன்​பாக திருடப்​பட்ட கோயில் பணம் என்​ப​தில் எந்த மாற்​றுக் கருத்​தும் இருக்க முடி​யாது. ஆண்​டு​தோறும் கோயி​லின் நிகர வரு​மானத்​தில் 25 சதவீதத்தை தனி​யாகப் பிரித்​து, கோயில் கட்​டு​மானத்​தைப் பாது​காக்​க​வும், சீரமைக்​க​வும் ஒரு நிதி​யம் உரு​வாக்க வேண்​டும் என அறநிலை​யத் துறை சட்​டப் பிரிவு 86சி கூறுகிறது. ஆனால், கடந்த 40-50 ஆண்​டு​களாக இவ்​வாறு வரு​மானத்​தில் 25 சதவீதத்தை எந்த கோயி​லிலும் சேமித்து வைக்​க​வில்லை என்​பது வேதனைக்​குரியது.

பொது சுகா​தா​ரம், வரு​டாந்​திர கோயில் செல​வு​கள், அர்ச்​சகர்​களுக்​குரிய பயிற்சி உள்​ளிட்ட செல​வினங்​கள் நீங்​கலாக எஞ்​சிய உபரி நிதி​யில் அறங்​காவலர்​கள் விருப்​பப்​பட்​டால் ஆணை​யரின் அனு​மதி பெற்று குறிப்​பிட்ட சதவீதத்தை வேத ஆகமப் பாட​சாலை, மருத்​து​வ​மனை, இந்து மதம் சார்ந்த பள்​ளிக்​கூடங்​கள், கல்​லூரி​கள், ஆதர​வற்​றோர் விடு​தி​கள் தொடங்​கப் பயன்​படுத்​தலாம்.

இந்த நற்​பணி​களை செய்​வ​தாக இருந்​தா​லும் விண்​ணப்ப விவரங்​களை அறநிலை​யத் துறை ஆணை​யர் பிரபல நாளிதழ்​களில் விளம்​பரம் செய்து ஆட்​சேபம் ஏதும் உள்​ளதா என விசா​ரணை நடத்தி அதன்​பிறகே அனு​மதி அளிக்க முடி​யும். இவ்​வாறு கோயில் நிதி​யைப் பாது​காக்க, செலவு செய்ய அறநிலை​யத் துறை சிறப்​பான சட்ட அம்​சங்​களைக் கொண்​டுள்​ளது. ஆனால், கடந்​த​கால ஆட்​சி​யாளர்​கள் இதை முறை​யாக அமல்​படுத்​த​வில்​லை.

திருப்​பரங்​குன்​றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்​டும் என்ற தனி நீதிப​தி​யின் உத்​தரவை உச்ச நீதி​மன்​ற​மும் உறுதி செய்​து​விட்​டது. இந்த விஷ​யத்​தில் மதத்​துக்கு அப்​பாற்​பட்டு எந்த இஸ்​லாமியருக்​கும் எதிர்​மறை​யான எண்​ணங்​கள் இருப்​ப​தாக தெரிய​வில்​லை. உச்ச நீதி​மன்ற உத்​தரவே இறு​தி​யானது என்ற அடிப்​படை​யில், அதை செயல்​படுத்த முடி​யாது என்று கூற யாருக்​கும் அதி​காரம் கிடை​யாது. அவ்​வாறு கூறி​னால், அது நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கை.

அமைச்​சர் நிர்​மல் குமார் திருப்​பரங்​குன்​றம் தொகுதி எம்​எல்ஏ என்ற முறை​யில் தனிப்​பட்ட முறை​யில் சில கருத்​துகளை தெரி​வித்​துள்​ளார். அதை முதல்​வர் விஜய்​யின் கருத்​தாகவோ, அறநிலை​யத் துறை அமைச்​சர் ரமேஷின் கருத்​தாகவோ எடுத்​துக் கொள்ள முடி​யாது. மொத்​தத்​தில் அறநிலை​யத் துறை​யில்​ நேர்ந்​த கடந்​த​கால துன்​பங்​கள்​ இனி இந்​த ஆட்​சி​யில்​ இருக்​காது என்​பது மகிழ்ச்​சி​யே. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.