惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

S
SegmentFault 最新的问题
G
Google Developers Blog
H
Help Net Security
月光博客
月光博客
阮一峰的网络日志
阮一峰的网络日志
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
P
Proofpoint News Feed
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
B
Blog RSS Feed
爱范儿
爱范儿
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 三生石上(FineUI控件)
大猫的无限游戏
大猫的无限游戏
人人都是产品经理
人人都是产品经理
GbyAI
GbyAI
D
Docker
Hugging Face - Blog
Hugging Face - Blog
I
InfoQ
博客园 - 司徒正美
Last Week in AI
Last Week in AI
Microsoft Security Blog
Microsoft Security Blog
美团技术团队
Stack Overflow Blog
Stack Overflow Blog
M
MIT News - Artificial intelligence

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சுற்றுச்சூழல் மாறுபாட்டால் மதுரையில் அதிகரிக்கும் வெப்பம்!
ஒய்.டேவிட் ராஜா · 2026-06-25 · via hindutamil

Updated on: 

மதுரை: மதுரையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பத்தைக் குறைக்க மரக்கன்றுகளை நட்டு வளர்க்கப் பொதுமக்களுடன் இணைந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

205 நகரங்களை உள் ளடக்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வின்படி, உலகளவில் தீவிர வெப்ப அபாயத்தை எதிர்கொள்ளும் முதல் 50 நகரங்களின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது.

இந்தப் பட்டியலில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் 2-வது இடத்திலும், தமிழகத்தின் மதுரை 7-வது இடத்திலும் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

நகர்மயமாக்கல் மற்றும் உள்கட்டமைப்பு மாற்றங்கள் காரணமாக மதுரையில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. மதுரையில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் இயல்பைவிட அதிகமாக உள் ளது. சுமார் 100 முதல் 106 பாரன்ஹீட் வரை பதிவாகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைக்கும், கடற்கரைக்கும் நடுவில் சுமார் 100 கி.மீ. தூரத்தில் இந்நிலப்பரப்பு அமைந்துள் ளதால் இங்கு குளிர்ந்த காற்று வீசுவது குறைந்து வருகிறது.

மேலும், கான்கிரீட் கட்டிடங்கள் அதிகரிப்பு, மரங்கள் மற்றும் காடுகள் வேகமாக அழிக்கப்படும் காரணங்களால் வெப்பம் அதிகரிக்கிறது. உலக அளவில் ஏற்படும் தட்பவெப்ப மாற்றங்கள் மற்றும் கார்பன் உமிழ்வு அதிகரிப்பு காரணமாக மதுரை போன்ற நகரங்களின் வெப்பநிலை உயர்ந்துள்ளது.

நீண்ட வறண்ட வானிலை, மழைப்பொழிவு குறைவு, வடக்கில் இருந்து வீசும் வெப்பக் காற்று ஆகியவை மதுரைக்கு வெப்பத்தை அதிகரிக்கிறது என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். உலக அளவில் ஏற்படும் மாற்றங்களைத் தடுப்பது நமது கையில் இல்லை. ஆனால், உள்ளூர் அளவில் நம்மால் இயன்ற மாற்றங்களைச் செய்யலாம்.

காடுகள் அழிப்பைத் தடுக்க வேண்டும். நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதன் மூலம் வெயிலின் தாக்கத்தைக் குறைக்க முடியும். இதற்கு பொதுமக்களுடன் இணைந்து தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று பசுமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதுகுறித்து மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசி ரியர் ராஜேஷ் கூறியதாவது: மரக்கன்றுகளை நடுவதில் காட்டும் ஆர்வத்தை, அவற்றை வளர்ப்பதில் காட்டுவது இல்லை. 100 மரக்கன்றுகள் வைக்கப்பட்டால் அவற்றில் 10 மரங்கள் மட்டுமே வளரும் நிலை உள்ளது.

மாநகர் பகுதிகளில் இடம் இல்லாவிட்டால், மாநகரின் வெளியே பயன்படுத்தப்படாத இடங்களில் வனத்துறை யினர் அதிக அளவில் மரக் கன்றுகளை வைத்து குறுங்காடுகளை உருவாக்கலாம்.

பொதுமக்கள் தங்கள் வீட்டைச் சுற்றி நிழல் தரும் மரங்களை வளர்க்க வேண்டும். சுவர்களில் படரும் கொடிகள் வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும். வீட்டின் மொட்டை மாடியில் வெப்பத்தை உள்ளிழுக்காத வெள்ளை நிற பெயின்ட் அடிக்கலாம்.

சாலைகளில் உள்ள ரவுண்டானாக்களில் பெரிய இலைகள் மற்றும் அகன்ற கிளைகள் கொண்ட மரங்களை வளர்க்கலாம். மரங்கள் நிழல் தருவதுடன், வெப்பத்தை உறிஞ்சி காற்றின் வெப்பநிலையை 1 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க உதவும்.

வேகமாக வளரக்கூடிய பூவரசு, புங்க மரம், கடம்ப மரம், வாகை மரம், மூங்கில், பாதாம், மந்தாரை, தூங்குமூஞ்சி மரம் உள்ளிட்ட மரங்களை வளர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.