惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 三生石上(FineUI控件)
博客园 - Franky
GbyAI
GbyAI
B
Blog
WordPress大学
WordPress大学
D
Docker
小众软件
小众软件
月光博客
月光博客
博客园 - 【当耐特】
T
The Blog of Author Tim Ferriss
IT之家
IT之家
腾讯CDC
Engineering at Meta
Engineering at Meta
Vercel News
Vercel News
H
Help Net Security
M
MIT News - Artificial intelligence
L
LangChain Blog
云风的 BLOG
云风的 BLOG
S
SegmentFault 最新的问题
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
美团技术团队
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
V
V2EX
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மத்திய இணை அமைச்சரின் மகன் போக்சோ வழக்கில் கைது
2026-05-17 · via hindutamil

Updated on

1 min read

ஹைதராபாத்: சிறுமிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகாரில், மத்திய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி சாய் பகீரத் சனிக்கிழமை மாலை தெலங்கானா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

முன்னதாக, தனக்கு முன்கூட்டியே ஜாமீன் வழங்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தெலங்கானா உயர் நீதிமன்றம், அவரது கைதுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

17 வயது சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த மே 8-ஆம் தேதி ஹைதராபாத்தின் பேட் பஷீராபாத் காவல் நிலையத்தில் சாய் பகீரத் மீது போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா  ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருமண ஆசை காட்டி மொய்னாபாத்தில் உள்ள பண்ணை வீட்டில் வைத்துச் சிறுமிக்குக் கட்டாய மது கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சிறுமியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பிறகு, இந்த வழக்கில் கடுமையான பிரிவுகள் சேர்க்கப்பட்டன.

வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை நீண்ட இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையில், அரசுத் தரப்பு வழக்கறிஞர் சிறுமியின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அவர் மைனர் என்பதை உறுதிப்படுத்தினார். மேலும், சாய் பகீரத் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர் முதல்முறை குற்றவாளி அல்ல என்றும் வாதிடப்பட்டது. இதையடுத்து, நீதிபதி டி.மாதவி தேவி இடைக்கால தடை வழங்க மறுத்து, இறுதித் தீர்ப்பை மே 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சாய் பகீரத் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க சைபராபாத் போலீஸார் லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிட்டனர். மேலும், ஹைதராபாத் மற்றும் கரீம்நகரில் உள்ள அமைச்சரின் இல்லங்களில் ஐந்து தனிப்படைகள் மூலம் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்தச் சூழலில், சனிக்கிழமை மாலை போலீஸார் தங்களின் தொழில்நுட்பக் குழுவின் உதவியுடன் சாய் பகீரத் இருப்பிடத்தைக் கண்டறிந்து கைது செய்ததாகத் தெரிவித்துள்ளனர்.

மகன் கைது குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார், "சட்டத்தின் முன் அனைவரும் சமம். என் மகன் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறுகிறான், இருப்பினும் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க அவனை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார். கைதான சாய் பகீரத் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு மேட்சல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.