惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

A
About on SuperTechFans
博客园 - 聂微东
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - 司徒正美
宝玉的分享
宝玉的分享
美团技术团队
量子位
The Cloudflare Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
IT之家
IT之家
爱范儿
爱范儿
J
Java Code Geeks
博客园 - Franky
Last Week in AI
Last Week in AI
B
Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
I
InfoQ
GbyAI
GbyAI
Recent Announcements
Recent Announcements
小众软件
小众软件
H
Help Net Security
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
MyScale Blog
MyScale Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
திருவள்ளூர்: பறக்கும் படை பறிமுதல் செய்த பொருட்களில் உரிய...
2026-05-03 · via hindutamil

திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பிரதாப்

Updated on

1 min read

பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தவர்களிடம் ரூ.16.94 கோடி பணம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பிரதாப் வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணை கடந்த மார்ச் 15ம் தேதி வெளியிடப்பட்டதை தொடர்ந்து, அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன.

திருவள்ளூர் தேர்தல் மாவட்டத்துக்கு உட்பட்ட 10 பேரவைத் தொகுதிகளில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது, உரிய ஆவணங்களின்றி மற்றும் சந்தேகத்துக்கு இடமான வகையில் எடுத்து செல்லப்படும் பணம், மதிப்புமிக்கப் பொருட்கள் ஆகியவற்றை கண்காணிக்கும் பொருட்டு திருவள்ளுர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிரதாப் தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவற்றை நியமித்தார்.

திருவள்ளுர் தேர்தல் மாவட்டத்துக்கு உட்பட்ட 10 தொகுதிகளில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது, தேர்தல் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் உள்ளிட்ட பிற துறைகளால், உரிய ஆவணங்களின்றி, சந்தேகத்துக்கு இடமான வகையில் எடுத்து செல்லப்பட்ட ரூ.17,70,30,547 ரொக்கம், ரூ.73,58,28,713 மதிப்புமிக்க பொருட்கள், ரூ.15,81,38,293 மதிப் புள்ள இதர வகையிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் மதிப்புமிக்கப் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு, சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் மேல்முறையீடு செய்து திரும்ப பெற்றுக் கொள்ள ஏதுவாக, திருவள்ளுர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரால் அமைக்கப் பட்டிருந்த மாவட்ட குறைதீர் குழு மற்றும் மாவட்ட வருமானவரித் துறை, மாநில சரக்கு மற்றும் சேவை வரித்துறை உள்ளிட்ட பிற துறைகளால், 254 மனுக்கள், பரிசீலனை செய்யப்பட்டு, உரிய ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்ட இனங்களுக்கு. ரூ.16,94,79,342 ரொக்கம், ரூ.73.09,93,756 மதிப்புமிக்கப் பொருட்கள். ரூ.64.39.113 மதிப்புள்ள இதர வகையிலான பொருட்கள் விடுவிப்பு செய்யப்பட்டுள்ளன.

உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கக் கோரி 5 மனுக்கள் பரிசீலனையிலும், உரிய ஆவணங்கள் சமர்பிக்காத 14 கைப்பற்றுகை தொடர்பாக சம்பந்தப்பட்ட பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வழக்குப் பதிவுகளும் செய்யப்பட்டுள்ளன.