惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

L
LangChain Blog
博客园_首页
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
月光博客
月光博客
S
SegmentFault 最新的问题
量子位
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园 - 司徒正美
博客园 - Franky
Google DeepMind News
Google DeepMind News
Recent Announcements
Recent Announcements
B
Blog RSS Feed
C
Check Point Blog
The Cloudflare Blog
M
MIT News - Artificial intelligence
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
F
Fortinet All Blogs
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 叶小钗
V
Visual Studio Blog
V
V2EX
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园 - 聂微东
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சமாஜ்வாதி கட்சி உடையப் போகிறதா? - உ.பி. அமைச்சரின் பதிவும...
மோகன் கணபதி · 2026-06-17 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: சமாஜ்வாதி கட்சி முழுமையாக பாஜகவில் இணையத் தயாராக உள்ளதாக உத்தரப் பிரதேச அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் கூறியுள்ள நிலையில், அதனை வதந்தி என ராம் கோபால் யாதவ் மறுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் எம்பிக்களும், தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா (யுபிடி) கட்சியைச் சேர்ந்த எம்பி மற்றும் எம்எல்ஏக்களில் பலர் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி முழுமையாக பாஜகவில் இணையத் தயாராக உள்ளதாக அம்மாநில அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் கூறியுள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவரான ஓம் பிரகாஷ் ராஜ்பர் இன்று (ஜூன் 17) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சமாஜ்வாதி கட்சியில் விரைவில் ஒரு பெரிய பிளவு ஏற்படப் போகிறது. ராம் கோபால் யாதவ், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஒரு கடிதத்தை அளித்துள்ளார்.

சுரங்க ஊழல் மற்றும் கோமதி நதிக்கரை மேம்பாட்டுத் திட்ட ஊழல் ஆகிவற்றின் பின்னணியில் உள்ள சூத்திரதாரி யார் என்பது உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். சட்ட நடவடிக்கைகள் இறுக்கமடைந்து வருவதால், சமாஜ்வாதி கட்சி பதற்றமடைந்துள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தை மறந்துவிடுங்கள். ஒட்டுமொத்த சமாஜ்வாதி கட்சியுமே பாஜகவில் இணையத் தயாராக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் பஞ்சாயத்து ராஜ் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரான ராஜ்பரின் இந்தப் பதிவு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ராஜ்பர், “நான் சொன்னது 100% உண்மை. நான் எதைச் சொன்னாலும் அதை துணிச்சலுடன் சொல்வேன்; உண்மையை மட்டுமே சொல்வேன். ராம் கோபால் யாதவ் ஒரு பட்டியலைத் தயாரித்து அதை உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஒப்படைத்துள்ளார். அவர்கள் இருவரும் பரிமாறிக்கொண்ட புன்னகையை நான் பார்த்தேன். இரு இதயங்கள் இணையும்போது வார்த்தைகள் மவுனமாகலாம். ஆனாலும், உரையாடல் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும்.

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி நெருக்கடியில் இருக்கும் தலைவர்கள், தங்களுக்கு எந்த தீங்கும் ஏற்படக்கூடாது என்பதையும், தாங்கள் பாஜகவில் இணையத் தயாராக இருப்பதையுமே அந்தக் கடிதம் உணர்த்துகிறது. அந்தக் கடிதத்தில் உள்ள பெயர்கள் குறித்து நான் இப்போதே வெளிப்படுத்தினால் அந்த முயற்சி முழுமையாக வீணாகிவிடும். தயவு செய்து சில நாட்கள் காத்திருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

ஓம் பிரகாஷ் ராஜ்பரின் இந்த விளக்கத்தை அடுத்து, இந்த விவகாரம் குறித்து பதில் அளித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் கோபால் யாதவ், “நான் கடிதம் சமர்ப்பித்தேனா என்பதை அமித் ஷாவிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். ஓம் பிரகாஷ் ராஜ்பர் கூறுவதை யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அவர் எப்போதும் இப்படித்தான் பேசுவார். என்ன பேசுகிறோம் என்பது அவருக்கே தெரியாது. சமாஜ்வாதி கட்சியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இனிமேலும் வராது. அவர்கள் வதந்திகளை மட்டுமே பரப்புகிறார்கள். மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பதில் அளித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “இந்த நாடகம் எவ்வளவு காலத்துக்கு தொடரும்? உங்களுக்கு உணவளிப்பவர்களின் மொழியைத்தான் நீங்கள் பேசுவீர்கள்” என விமர்சித்துள்ளார்.