惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

有赞技术团队
有赞技术团队
Stack Overflow Blog
Stack Overflow Blog
爱范儿
爱范儿
B
Blog
博客园 - 三生石上(FineUI控件)
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
A
About on SuperTechFans
C
Check Point Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
P
Proofpoint News Feed
Engineering at Meta
Engineering at Meta
Y
Y Combinator Blog
WordPress大学
WordPress大学
小众软件
小众软件
博客园 - 司徒正美
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Recent Announcements
Recent Announcements
L
LangChain Blog
大猫的无限游戏
大猫的无限游戏
阮一峰的网络日志
阮一峰的网络日志
D
DataBreaches.Net
博客园 - 聂微东
Microsoft Security Blog
Microsoft Security Blog
美团技术团队

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை: 2 பேர் கைது - கோவை அதிர்ச்...
2026-05-23 · via hindutamil

இடது: கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி | வலது: கைதான கார்த்தி, மோகன்

படம்: ஜெ.மனோகரன்

Updated on

2 min read

கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை அருகே போத்தனூர் செட்டிபாளையத்தில் வசித்து வந்த தம்பதியருக்கு 10 வயதில் மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர். இந்த நிலையில் தந்தை சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள வெல்டிங் ஒர்க்‌ஷாப்பில் தொழிலாளியாக பணி செய்து வந்தார். தொடர்ந்து தனது பணியிடத்துக்கு அருகே வீட்டை மாற்ற நினைத்து, பள்ளபாளையத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பு குடியேறினார்.

இந்த நிலையில், கடந்த 21-ம் தேதி மாலை தம்பியுடன், சிறுமி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிறுமி மாயமானார். இது தொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கண்ணம்பாளையம் குளம் அருகே தென்னந்தோப்பில் சிறுமி சடலமாக நேற்று மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று இரவு 9.30 மணி முதல் தொடர் சூலூர் காவல் நிலையம் முன்பு சிறுமியின் மரணத்துக்கு நீதி கேட்டு சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுத்தனர். தொடர்ந்து இரவு முழுவதும் சுமார் 8 மணி நேரத்துக்கு மேல் மறியல் போராட்டம் தொடர்ந்தது.

நூற்றுக்கணக்கான மாவட்ட அதிரடிப்படை போலீஸார் சூலூரில் குவிக்கப்பட்டனர். கோவை மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி, டிஐஜி சாமிநாதன், கோவை மாவட்ட எஸ்.பி. பவன்குமார் ரெட்டி மற்றும் சூலூர் எம்.எல்.ஏ.சுகுமார் உள்ளிட்ட பலர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இன்று காலை பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியை கொலை செய்ததாக கூறி, கார்த்தியை அப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்தனர். அவருக்கு உதவிய அவரது நண்பர் மோகனும் கைது செய்யப்பட்டார்.

இதில் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற கார்த்தி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதிக்க முயன்றபோது, வலது கால் மற்றும் வலது கை பலத்த காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டார். இதையடுத்து, கார்த்தி கோவை அரசு மருத்துவமனையில் போலீஸார் பாதுகாப்புடன் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மோகன் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

காவல் அதிகாரிகள் ஆய்வு

இந்த நிலையில், தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், ஏடிஜிபி மகேஷ்வர் தயாள் ஆகியோர் இன்று கோவைக்கு வந்தனர். சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணையை முடுக்கிவிட்டனர்.

தொடர்ந்து சிறுமியின் சடலம் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் தங்களது சொந்த ஊரான சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கிராமத்துக்கு சிறுமியின் சடலத்தை அடக்கம் செய்ய எடுத்து சென்றனர்.

கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது: “சிசிடிவி கேமராக காட்சிகள் மற்றும் தொழில் நுட்ப ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் அருகில் வசித்து வந்த நாகை மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி கார்த்தி (33) 10 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.

<div class="paragraphs"><p>கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி</p></div>

கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி

படம்: ஜெ.மனோகரன்

சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து, கண்ணம்பாளையம் குளம் அருகே உள்ள தென்னை தோட்டத்தில் வைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதில் அவருக்கு உடந்தையாக அவரது நண்பர் மோகன் (30) இருந்துள்ளார். அவர் மீது குற்றத்தை மறைத்து சதியில் ஈடுபட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு விரைவில் அரசின் நிவாரண உதவித்தொகையும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையும் பெற்றுத் தரப்படும்” என்று அவர் தெரிவித்தார்.