惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Microsoft Security Blog
Microsoft Security Blog
WordPress大学
WordPress大学
Stack Overflow Blog
Stack Overflow Blog
D
DataBreaches.Net
罗磊的独立博客
博客园 - 司徒正美
Last Week in AI
Last Week in AI
The Cloudflare Blog
大猫的无限游戏
大猫的无限游戏
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
B
Blog RSS Feed
The GitHub Blog
The GitHub Blog
宝玉的分享
宝玉的分享
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
小众软件
小众软件
Jina AI
Jina AI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Hugging Face - Blog
Hugging Face - Blog
B
Blog
博客园 - 【当耐特】
V
V2EX
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வீட்டுக் கடன், வாகனக் கடன் பெறுவது இனி கடினமா? - ‘சிபில்’...
போத்தி ராஜ்.க · 2026-06-23 · via hindutamil

Updated on: 

வாடிக்கையாளர்களின் நலன்களுக்காகவும், வங்கிகளை கடன் பிரச்சினையில் சிக்காமல் தவிர்க்கவும் ரிசர்வ் வங்கி அவ்வப்போது புதிய விதிகளை அறிமுகம் செய்வதுடன் ஏற்கெனவே இருக்கும் விதிகளில் மாற்றமும், திருத்தமும் செய்வது வழக்கம். அந்த வகையில் வங்கியில் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் சிபில் (CIBIL) ஸ்கோரில் குறிப்பிட்ட மதிப்பெண்ணை அளவுகோலாக வைத்து கடன் வழங்க ரிசர்வ் வங்கி புதிய விதிகளை வகுத்துள்ளது.

இதன்படி, வங்கி வாடிக்கையாளர் ஒருவருக்கு குறைந்தபட்சம் சிபில் ஸ்கோர் 730 இருந்தால்மட்டுமே வீட்டுக் கடன், வாகனக் கடன் வழங்குவது குறித்து வங்கிகள் பரிசீலிக்க முடியும். சிபில் ஸ்கோர் 730-க்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் கடன் பெறுவதை கடினமாக்கும் வழிமுறைகளை முடிவு செய்துள்ளது.

இந்த புதிய விதிகள் 2027 ஏப்ரல் 1-ம் தேதி முதல் வங்கிகளில் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் வாங்குவோர் நிலை குறித்தும், அவர்களின் திருப்பிச் செலுத்தும் தன்மை, திறன் ஆகியவற்றை அறிந்து வங்கிகள் கவனத்துடன் கடன் வழங்க இந்த விதிகளால் முடியும். வீட்டுக் கடன், வாகனக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் அடுத்த ஆண்டிலிருந்து தீவிரமாக ஆய்வு செய்யப்படும்.

புதிய விதிகள் எதற்காக?

இந்தியாவில் உள்ள பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சினைதான் ‘வாராக் கடன்’ (என்பிஏ). இந்த சிக்கலில் இருந்து வங்கிகளை மீட்கும் வகையில் புதிய நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறது.

சில நேரங்களில் வாடிக்கையாளர்களின் தன்மை அறியாமல், கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் அறியாமல் வங்கிகள் கடன் அளிக்கின்றன. ஆனால், வாடிக்கையாளர்களில் சிலரால் அந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படும்போது அது வாராக் கடனாக மாறிவிடுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக ரிசர்வ் வங்கி எடுத்த பல்வேறு நடவடிக்கைகள், விதிகளால் வங்கிகளின் வாராக் கடன் குறைந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு வங்ககளின் வாராக்கடன் ரூ.10.36 லட்சம் கோடியாக இருந்த நிலையில், படிப்படியாகக் குறைக்கப்பட்டு 2026-ம் ஆண்டில் அது ரூ.4.18 லட்சம் கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த வாராக் கடன் அளவை மேலும் குறைக்கவும், கடன் வழங்கும் முறையை சீரமைக்கவும்தான் சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் பெறுவதை ரிசர்வ் வங்கி கடினமாக்குகிறது.

ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதிகளால் வங்கிகள் தங்களுக்கு நேரும் தவறுகளை முன்கூட்டியே அறிந்து, மதிப்பிட முடியும், வாடிக்கையாளர்களின் பணத்தையும் பாதுகாப்பாக வைக்க முடியும். எதிர்காலத்தில் ஏற்படப் போகும் இழப்பை அறிந்து இப்போதே வங்கிகள் தங்களை தயார் செய்யவும் முடிகிறது.

வங்கிகளின் இந்த பாதுகாப்பான அணுகுமுறை நிதி அமைப்பின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதேசமயம், பொருளாதாரத்தில் கடன் வழங்குவதில் கட்டுப்பாடுகள் ஏற்படும்போது அதில் பொருளாதார வளர்ச்சியையும், வங்கிகளின் லாபத்தையும் பாதிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

சிபில் (CIBIL) ஸ்கோர் முக்கியமா?

வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் கடன் பெறுவதற்கு அவர் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதும், வர்த்தகராகவோ அல்லது தொழில் நடத்துபவராகவோ இருந்தால் எவ்வளவு தொகை பணப்வர்த்தனை, வர்த்தகம் செய்கிறார், அவருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதெல்லாம் முக்கியம் அல்ல.

இதுபோன்ற அம்சங்களை ஆய்வு செய்வதைவிட, வங்கிகள் தற்போது கடன் கேட்க வரும் வாடிக்கையாளரின் சிபில் ஸ்கோரைத்தான் ஆய்வு செய்கின்றன.

சிபில் ஸ்கோர், அதாவது கடன் பெற்று அந்த கடனை உரிய தேதியில் திருப்பிச் செலுத்தும் நபராக இருந்தால் அவரின் மதிப்பெண் உயர்ந்திருக்கும். அவ்வாறு சிறந்த மதிப்பெண் வைத்திருக்கும் வாடிக்கையாளருக்குத்தான் வங்கிகள் கடன் வழங்க முன்னுரிமை வழங்குகின்றன.

அதேசமயம், குறைந்த சிபில் மதிப்பெண் வைத்திருக்கும் வாடிக்கையாளர், நல்ல வாடிக்கையாளராக இருந்தாலும், சிறந்த பணப்பரிவர்த்தனை செய்திருந்தாலும், அவருக்கு கடன் வழங்குவது கடினமாகும்.

அவ்வாறு சிபில் ஸ்கோர் குறைவாக இருக்கும் வாடிக்கையாளருக்கு கடன் அவசியம் கொடுக்க வேண்டிய சூழல் இருக்கும் பட்சத்தில் கூடுதலாக பிணையம், பிணையதாரர் சொத்து மதிப்பு, அதிகபட்ச வட்டி ஆகியவற்றை வங்கிகள் விதித்துதான் கடன் வழங்குவதை பரிசீலிக்கின்றன.

அந்த வகையில் ரிசர்வ் வங்கி வகுத்துவரும் விதிமுறைகளில் சிபில் ஸ்கோர் 730-க்கு குறைவாக வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வாகனக் கடன், கல்விக் கடன், வீட்டுக்கடன் வழங்குவது கடினமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், வாடிக்கையாளர்களிலும், தொழில் துறையினரிலும் 62 சதவீதம் பேரின் சிபில் ஸ்கோர் ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் 730 மதிப்பெண்களுக்கும் குறைவாக இருக்கிறது. இந்த விதிகள் 2027-ம் ஆண்டு ஏப்ரலில் நடைமுறைக்கு வந்தால், வீட்டுக் கடன், வாகனக் கடன் பெறுவது கடினமாகும்.

ஏன் இந்தக் கட்டுப்பாடு?

வங்கிகளைப் பொறுத்தவரை பணத்தை டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களின் பணத்தை பாதுகாக்காகவும், வாராக் கடனிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ளவும், வலிமையான, ஸ்திரமான, நம்பிக்கையான கடன்பெறுவோரைக் கண்டறியவை இந்த கட்டுப்பாடுகளை புகுத்துகின்றன.

அதேசமயம், கிரெடிட் ஸ்கோர் 730-க்கு அதிகமாக வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான சிரமமும் இன்றி கடனை வழங்கவும் முடியும். நிதிப் பரிவர்த்தனை ஒழுக்கமாகவும், கடனை முறையாக திருப்பிச் செலுத்துபவர்களாக இருப்பதால் அவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

730-க்கு மேல் சிபில் மதிப்பெண் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் கடன் கேட்கும்போது விரைவாக பரிசிலீக்க முடியும், குறைந்த வட்டியும் வழங்கிடவும் வங்கிகளால் சாத்தியமாகும்.

இந்த புதிய விதியின் கீழ் கடன் வாங்குபவர் மாதத் தவணைகளை சரியான நேரத்தில் செலுத்துகிறாரா என்பதை மட்டும் வங்கிகள் கவனிக்காது.

மாறாக, கடன் பெறுவோர் நிதிச் சூழல், சொத்து விவரம், கடன் திருப்பிச் செலுத்திய கடந்த கால அறிக்கை, சிபில் ஸ்கோரில் ஏற்பட்ட மாறறங்கள், வருமான நிலைத்தன்மை, ஏற்கெனவே இருக்கும் கடன், எந்த மாதிரியான வேலையில் இருக்கிறார் என்பதையும் ஆய்வு செய்துதான் கடன் வழங்க பரிசீலிப்பர்.

இனி என்ன செய்ய வேண்டும்?

ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் நடைமுறைக்கு வரும்போது வங்கிகளில் கடன் பெறுவது கடினமாகும். ஆதலால், இப்போதே வாடிக்கையாளர்கள் தங்களை தயார் செய்து, தேவையான மாற்றங்களை செய்து ஆரோக்கியமான சிபில் ஸ்கோரை கொண்டு வர முயலலாம்.

ஏற்கெனவே வாங்கிய கடனுக்கான இஎம்ஐ-க்களை சரியான தேதிகளில் செலுத்த வேண்டும், கிரெடிட் கார்டு பில்களை சரியான காலக்கெடுவில் முடிக்க வேண்டும், கூடுதலாக கடன் வாங்காமல் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் கிரெடிட் ஸ்கோர் உயர்ந்து சிபில் ஸ்கோர் அதிகரிக்கும்.

வாடிக்கையாளர்களுக்கு இனிவரும் காலங்களில் சிபில் ஸ்கோர்தான் மிகவும் சக்தியான சொத்துக்காக இருக்கும். அதை சிறப்பாக பராமரித்தால் கடன் பெறுவது வரும் காலத்தில் எளிதாகும், குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும், வழிமுறையும் இலகுவாகும்.

பாதுகாப்புக்கு புதிய விதி

ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களின் நலனுக்காக கடந்த வாரம் புதிய விதியை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, வங்கிகள், வாடிக்கையாளர் ஒருவருக்கு கடன் வழங்கும்போது அவரின் விருப்பம் இன்றி, வலிந்து சில நிறுவனங்களின் காப்பீடு, பரஸ்பர நிதித் திட்டங்கள் ஆகியவற்றையும் விற்பனை செய்கின்றன. வாடிக்கையாளர்களும் தேவைக்கு கடன் கிடைக்கிறதே எனக் கருதி அதை ஏற்கின்றனர்.

ஆனால், ரிசர்வ் வங்கி கொண்டு வந்த புதிய விதியின் கீழ் வாடிக்கையாளர் விருப்பம் இன்றி, ஒப்புதல் இன்றி இதுபோன்ற செயல்கள் வங்கிகள் ஈடுபட்டால் அவற்றின் மீது புகார் அளிக்க முடியும். தங்களிடம் வேண்டுமென்றே விற்பனை செய்த காப்பீடு, பரஸ்பர நிதித் திட்டங்களுக்கான பணத்தையும் வாடிக்கையாளர்கள் திரும்பப் பெறலாம். இந்த விதி 2027 ஜனவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்த புதிய விதியின் மூலம் வங்கிகளின் தங்களின் ஏஜென்ட்கள் மூலம், ஊழியர்கள் மூலம் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசி காப்பீடு, பரஸ்பர நிதி, சேமிப்புத் திட்டங்கள் ஆகியவற்றில் சேர்க்கக் கூற முடியாது. மேலும், சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர்கள் மூலம் பரப்புரை செய்வது, டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்வது போன்றவற்றுக்கும் தடை செய்துள்ளது ரிசர்வ் வங்கி.

மிகக் குறிப்பாக வாடிக்கையாளர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டோம் எனத் தெரிந்தால், சந்தேகப்பட்டால், தவறுதலாக விற்கப்பட்டதாக என உணர்ந்தால் வங்கி மீது ரிசர்வ் வங்கியிடம் புகார் அளிக்கலாம். விற்கப்பட்ட அந்த சேவை, காப்பீடு ஆகியவற்றுக்கான பணத்தையும் வாடிக்கையாளர்கள் திரும்பப் பெறலாம்.