惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Jina AI
Jina AI
N
Netflix TechBlog - Medium
P
Proofpoint News Feed
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
D
DataBreaches.Net
人人都是产品经理
人人都是产品经理
aimingoo的专栏
aimingoo的专栏
Stack Overflow Blog
Stack Overflow Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
月光博客
月光博客
阮一峰的网络日志
阮一峰的网络日志
I
InfoQ
F
Fortinet All Blogs
J
Java Code Geeks
Last Week in AI
Last Week in AI
美团技术团队
大猫的无限游戏
大猫的无限游戏
有赞技术团队
有赞技术团队
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
博客园_首页
量子位
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
小众软件
小众软件

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“இடைத்தேர்தல் போட்டி குறித்து ஜூலை 4ல் அறிவிக்கப்படும்”: ...
மு.வேல்சங்கர் · 2026-06-28 · via hindutamil

Updated on: 

சென்னை: இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும், கூட்டணி தொடர்பாகவும் வரும் 4-ம் தேதி நடைபெறும் உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்வோம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தங்கள் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் விவரித்தார். அப்போது அவர், “தமிழக முதல்வரை நடிகர்கள், நடிகைகள் எளிதாக பார்க்க முடிகிறது. ஆனால், மக்களின் பிரச்னைகள், கோரிக்கைகள் தொடர்பாக முதல்வரை நாங்கள் சந்திக்க முடியாத நிலை இருக்கிறது.

விஜய் தேர்தல் பிரச்சாரத்துக்கு முன்பு பேசியதை நினைவில் கொள்ள வேண்டும். தற்போது, விஜய்யின் அரசு தொடர்பாக பல கேள்விகள் இருக்கின்றன. அரசு வெளிப்படைதன்மையாக இருக்கிறது என்று சொன்னால் மட்டும்போதாது. செயலில் இருக்க வேண்டும்.

விஜய் ஆட்சிக்கு வந்தபிறகு, பூரண மதுவிலக்கு கொண்டு வந்து இருக்க முடியும். ஆனால், சுமார் 700 மதுகடைகளை மூடி உள்ளனர். ஊழல் ஒழிப்புக்கு பல நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் கீழ் இருந்து மேல் வரை ஊழலில் சிக்கி தவிப்பது டாஸ்மாக். டாஸ்மாக் நமது சமூகத்தின் மிகப்பெரிய கேடாகும். டாஸ்மாக் குறித்த வெள்ளை அறிக்கையில் லஞ்சம் வாங்கினார்கள் என கூறினால் அதனால் பெரிய பலன் இல்லை. டாஸ்மாக்கை மூடினால்தான், முழுமையானதீர்வு கிடைக்கும்.

அன்று பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதாக விஜய் கூறினார். ஆனால், இன்று பாட்டிலுக்கு ரூ.20 கூடுதலாக வாங்கப்படுகிறது. அன்று குற்றம் கூறி பிரச்சாரம் செய்யப்பட்ட விஷயம், இன்று நியாயப்படுத்தப்படுகிறது. இது எப்படி சரியாக இருக்க முடியும்?

தமிழக அரசு ரூ.13 லட்சம் கோடி கடன் வாங்கி இருப்பதாகக் கூறினால் போதாது. அப்பணம் ஊதரித்தனமாக செலவிடப்பட்டதா, ஊழல் நடந்ததா என சுட்டிக்காட்டி வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டிருந்தால், நன்மையாக இருக்கும்.

இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும், கூட்டணி தொடர்பாகவும் சென்னையில் வரும் 4 ம் தேதி நடைபெறும் உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷ்யாம் கிருஷ்ணசாமி உடன் இருந்தார்.