惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

大猫的无限游戏
大猫的无限游戏
月光博客
月光博客
博客园 - Franky
博客园 - 三生石上(FineUI控件)
爱范儿
爱范儿
博客园 - 司徒正美
博客园 - 叶小钗
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
美团技术团队
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
The Cloudflare Blog
B
Blog RSS Feed
阮一峰的网络日志
阮一峰的网络日志
宝玉的分享
宝玉的分享
V
Visual Studio Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
IT之家
IT之家
博客园_首页
S
SegmentFault 最新的问题
A
About on SuperTechFans
Blog — PlanetScale
Blog — PlanetScale
GbyAI
GbyAI
H
Help Net Security
MongoDB | Blog
MongoDB | Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
குருகிராம் மருத்துவரிடம் இருந்து நீட் வினாத்தாளை ரூ.30 லட...
செய்திப்பிரிவு · 2026-05-14 · via hindutamil

வினாத்தாள் கசிந்ததால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் உள்ள தேசிய தேரவு முகமை அலுவலகம் அருகே, அகில பாரதிய வித்யா பரிஷத் அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated on: 

ஜெய்ப்பூர்: குரு​கி​ராம் மருத்​து​வரிட​மிருந்து ரூ.30 லட்​சத்​துக்கு நீட் வினாத்​தாளை வாங்​கிய​தாக ராஜஸ்​தானைச் சேர்ந்த சகோதரர்கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இதில் ஒருவருடைய குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாடு முழு​வதும் மே 3ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் (யுஜி) 2026 தேர்வு நடை​பெற்​றது.

இந்தத் தேர்வுக்கு முன்​கூட்​டியே வினாத்​தாள் கசிந்​த​தாக புகார் எழுந்​த​தால் நீட் தேர்வு நேற்று முன்​தினம் ரத்து செய்​யப்​பட்​டது. இதுகுறித்து விரி​வான விசா​ரணை நடத்த அரசு உத்​தர​விட்​டது. இதையடுத்​து, சிபிஐ முதல் தகவல் அறிக்​கையை பதிவு செய்து விசா​ரணை​யைத் தொடங்​கி​யுள்​ளது. இதில் கேரளா, மகாராஷ்டிர மருத்துவ மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைக்காகச் சிறப்​புப் படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இதனிடையே, புதிய தேர்வு நடை​பெறும் தேதி அடுத்த 7 முதல் 10 நாட்​களுக்​குள் அறிவிக்​கப்​படும் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தெரி​வித்​துள்​ளது. இதனிடையே நீட் தேர்​வின் நம்​பகத்​தன்மை குறித்து மாணவர்​கள் கேள்வி எழுப்​பி​யுள்​ளதோடு, எய்ம்ஸ்​- டெல்லி மூலம் தேர்வை நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்​நிலை​யில், நீட் வினாத்​தாள் கசிவு வழக்​கின் பின்​னணி ஒவ்வொன்​றாக வெளிச்​சத்​துக்கு வந்து கொண்​டிருக்​கிறது. ராஜஸ்தானின் ஜம்வா ராம்​கரைச் சேர்ந்த சகோ​தரர்​களான மங்கிலால் மற்​றும் தினேஷ் பிவால் ஆகியோர், இந்த ஆண்டுக்கான நீட்​-​யுஜி வினாத் ​தாளை குரு​கி​ராம் மருத்​து​வர் ஒருவரிட​மிருந்து ஏப்​ரல் 26ம் தேதி ரூ.30 லட்​சத்​துக்கு வாங்​கியது தெரிய​வந்​துள்​ளது.

இவர்​களில் ஒரு​வர், சிகார் பகு​தி​யில் நீட் தேர்​வுக்​குத் தயா​ராகி வந்த தனது மகனுக்கு அந்த வினாத்​தாளைக் கொடுத்​துள்​ளார். பின்​னர் ஏப்​ரல் 29-ம் தேதி அவர்​கள் அந்​தத் தாளை பலருக்கு விற்றுள்​ளனர். ஜெய்ப்​பூர் அருகே உள்ள ‘சி​கார்' பகு​தி, இந்த வினாத்​தாள் கசிவு மோசடி​யின் மையப்​புள்​ளி​யாக மாறி​யுள்​ளது. சிகாரில் உள்ள எம்​பிபிஎஸ் ஆலோ​சனை ஏஜென்ட் ராகேஷ் குமார் மண்​ட​வாரியா என்​பவர் அந்​தத் தாளை வாங்​கி, கேரளாவில் எம்​பிபிஎஸ் பயிலும் சிகார் மாணவர் ஒரு​வருக்கு ரூ.30,000-க்கு விற்​றுள்​ளார்.

அந்த மாணவர் தேர்​வுக்கு முந்​தைய நாள் தனது தந்​தைக்கு (சி​காரில் விடுதி நடத்​துபவர்) அந்​தத் தாளை அனுப்​பி​யுள்​ளார். அவர் தனது விடு​தி​யில் தங்​கி​யிருந்த மாணவி​களுக்கு அதனைப் பகிர்ந்துள்​ளார். இந்த வழக்​கின் முக்​கிய நபராக குரு​கி​ராம் மருத்து​வர் கருதப்​படு​கிறார்.

கைது செய்​யப்​பட்​ட​வர்​களில் ஒரு​வ​ரான தினேஷுக்கு ஓர் அரசியல் கட்​சி​யுடன் தொடர்பு இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. இவர்​களது குடும்​பத்​தைச் சேர்ந்த 4 குழந்​தைகள் கடந்த ஆண்டு நீட் தேர்​வில் தேர்ச்சி பெற்​றிருந்​ததும் விசா​ரணை​யில் தெரியவந்துள்​ளது.

உத்​த​ராகண்ட் மாநிலம் டேராடூனில் கைது செய்​யப்​பட்ட ராகேஷ் குமார் மண்​ட​வாரி​யா, சுமார் 700 மாணவர்​களுக்கு வினாத்​தாளை விநி​யோகித்​த​தாகக் கூறப்​படு​கிறது. பின்​னர் இது பிடிஎஃப் வடிவிலும் அச்சு வடி​விலும் நாடு முழு​வதும் பரவி​யுள்​ளது.

ராஜஸ்​தான் போலீ​ஸாரின் கூற்​றுப்​படி, மாணவர்​களிடையே பகிரப்​பட்ட ஒரு ‘வே​தி​யியல் கெஸ் பேப்​பரில்' இருந்த 410 கேள்விகளில் சுமார் 120 கேள்வி​கள் அசல் வி​னாத்​தாளில் இடம்​பெற்​றிருந்​தது தெரிய​வந்​துள்​ளது. தற்​போது நாசிக்​கிலும் ஒரு​வர்​ கைது செய்​யப்​பட்​டுள்​ளார்​. இதுகுறித்​து தீவிர வி​சா​ரணை நடைபெற்​று வருகிறது.