惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
V
V2EX
小众软件
小众软件
MongoDB | Blog
MongoDB | Blog
Jina AI
Jina AI
G
Google Developers Blog
H
Help Net Security
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
月光博客
月光博客
The GitHub Blog
The GitHub Blog
Y
Y Combinator Blog
爱范儿
爱范儿
B
Blog
云风的 BLOG
云风的 BLOG
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
GbyAI
GbyAI
博客园 - 叶小钗
aimingoo的专栏
aimingoo的专栏
Blog — PlanetScale
Blog — PlanetScale
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
有赞技术团队
有赞技术团队
博客园_首页
Google DeepMind News
Google DeepMind News
M
MIT News - Artificial intelligence

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தோனி பாணியில் முதல் ஐபிஎல் அரைசதத்தை கொண்டாடிய கார்த்திக்...
2026-05-03 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: தனது ஐபிஎல் கிரிக்கெட் அரைசதத்தை தோனி போல கொண்டாடி இருந்தார் சிஎஸ்கே அணியின் இளம் வீரர் கார்த்திக் சர்மா. அவரது கொண்டாட்டம் இப்போது ஐபிஎல் பார்வையாளர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

சனிக்கிழமை (மே 2) அன்று சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இதில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை 18.1 ஓவர்களில் எட்டியது சிஎஸ்கே. இதில் 3-வது விக்கெட்டுக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கார்த்திக் சர்மா இணைந்து 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அது சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு உதவியது.

இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணிக்காக பேட்டிங் வரிசையில் 4-வது வீரராக கார்த்திக் சர்மா களம் கண்டார். 40 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். ஐபிஎல் கிரிக்கெட்டில் இது அவரது முதல் அரைசதம். இந்த சீசனுக்கு முன்னதாக 20 வயதான அவரை ரூ.14.2 கோடிக்கு சிஎஸ்கே வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தானை சேர்ந்த இவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். தனது முதல் அரைசதத்தை Gun-Point செலிப்ரேஷன் பாணியில் அவர் கொண்டாடி இருந்தார். அது குறித்து ஆட்டத்துக்கு பிறகு அவர் பேசினார்.

“அணிக்காக களத்தில் கடைசி வரை இருந்து வெற்றி பெற்று தர வேண்டும் என்பது மட்டுமே எனது திட்டமாக இருந்தது. ‘உனது ஆட்டத்தை ஆடினால் போதும். வேறெதுவும் வேண்டாம்’ என ருதுராஜ் என்னிடம் சொன்னார். ஆடுகளம் நிதானமாக இருந்தது. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கிரிப் கிடைத்தது. அதற்கு ஏற்றபடி நாங்கள் எங்களது ஆட்டத்தை அட்ஜஸ்ட் செய்ய வேண்டி இருந்தது.

இன்று ஆட்டத்தில் ரன் சேர்த்தால் அதை இப்படித்தான் கொண்டாட வேண்டும் என்று முன்பே திட்டமிட்டிருந்தேன். மற்றபடி அதில் வேறெதுவும் இல்லை” என தனது அரைச்சத கொண்டாட்டம் குறித்து கார்த்திக் சர்மா தெரிவித்தார்.

கடந்த 2005-ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 145 பந்துகளில் 183 ரன்களை இந்திய அணிக்காக விளையாடிய தோனி விளாசினார். அப்போது Gun-Point செலிப்ரேஷனில் தோனி ஈடுபட்டார். அதை இப்போது கார்த்திக் சர்மா ரீ-கிரியேட் செய்துள்ளார். தோனி, கார்த்திக் என இருவரும் இப்போது சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ளனர்.