惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

The GitHub Blog
The GitHub Blog
M
MIT News - Artificial intelligence
Engineering at Meta
Engineering at Meta
云风的 BLOG
云风的 BLOG
博客园 - 叶小钗
Jina AI
Jina AI
Last Week in AI
Last Week in AI
The Cloudflare Blog
博客园 - 【当耐特】
Stack Overflow Blog
Stack Overflow Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
WordPress大学
WordPress大学
博客园_首页
I
InfoQ
G
Google Developers Blog
Martin Fowler
Martin Fowler
Recent Announcements
Recent Announcements
H
Help Net Security
U
Unit 42
Blog — PlanetScale
Blog — PlanetScale
阮一峰的网络日志
阮一峰的网络日志
P
Proofpoint News Feed
IT之家
IT之家
Microsoft Security Blog
Microsoft Security Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ரூ.10 கோடி கோயில் நிதியில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அவசி...
செய்திப்பிரிவு · 2026-06-23 · via hindutamil

Updated on: 

சென்னை: பல கோயில்களில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையில், கோயில் நிதி ரூ.10 கோடியில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் கட்ட முந்தைய ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டதாக அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் விமர்சித்தார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று நடந்தது.

அதன் விவரம்:

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்: ஆளுநர் உரையில் உள்ள அனைத்து விஷயங்களும் ஆளுங்கட்சியினர் வலை தளங்களில் ‘ரீல்ஸ்’ போட உதவுமே தவிர, ‘ரியல்’ பிரச்சினைகளுக்கு தீர்வு தருவதாக இல்லை.

அறநிலையத் துறையின் அசையும், அசையா சொத்துகளின் வருவாய், அதன் புனிதமான நோக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம், அறநிலையத் துறையே இருக்கக் கூடாது என பாஜகவின் குரலாக தவெக அரசு சொல்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. அந்த நிதியில் பள்ளி, கல்லூரிகள் தொடங்கக் கூடாது என்றும் கூறி வருகின்றனர்.

இந்த நிலைப்பாடு, திருமண மண்டபங்கள், வணிக வளாகங்களுக்கு மட்டுமின்றி, பள்ளி, கல்லூரிகளுக்கும் பொருந்துமா? இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சி.ரமேஷ்: பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்யாமல், வணிக நோக்கத்துடன் திருமண மண்டபங்கள் போன்றவற்றைக் கட்டுவதையும், அதன்மூலம் வருவாய் ஈட்டுவதையும் மட்டுமே குறிக்கோளாக வைத்துக்கொண்டு திட்டங்கள் தொடங்கப்பட்டன.

அதன்மீது பல்வேறு வழக்குகளில் தடை விதிக்கப்பட்டதால், அத்திட் டங்களை ரத்து செய்துள்ளோம். குன்னூர் விநாயகர் கோயில் நிதி ரூ.10 கோடியில் அங்கு பன்னடுக்கு வாகன நிறுத்தம் கட்ட முந்தைய அமைச்சர் அனுமதி அளித்திருக்கிறார்.

மாதத்துக்கு சராசரியாக 500 பக்தர்கள்தான் அந்த கோயிலுக்கு வருவார்கள். அப்பகுதியைச் சுற்றியுள்ள 50 கோயில்களில் கழிவறை போன்ற அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையில், பன்னடுக்கு வாகன நிறுத்தம் அவசியமா? இதுபோன்ற திட்டங்களுக்கு தடை விதிக்கும் அரசாணையில், கோயில்கள், பக்தர்கள் பயன்பெறும் வகையில் மாற்றுத் திட்டம் செயல்படுத்தப்படும் என கூறியுள்ளோம்.

பழநியில் சித்த மருத்துவமனை கட்ட மத்திய அரசு நிதி தர தயாராக இருந்தது. கடந்த ஆட்சியில் அந்த திட்டத்தை கிடப்பில் போட்டனர். நாங்கள் இப்போது அதை கையில் எடுத்துள்ளோம்.

முன்னாள் அமைச்சர் சேகர்பாபு: சட்ட விதிகளுக்கு உட்பட்டு, தொகுதி எம்எல்ஏக்களின் கோரிக்கையை ஏற்றுதான் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. குன்னூரில் நகராட்சி பரிந்துரையின்பேரில், பன்னடுக்கு வாகன நிறுத்தம் கொண்டு வந்தால், கோயிலுக்கு வருமானம் பெருகும் என்பதால் கொண்டு வரப்பட்டது.

அமைச்சர் ரமேஷ்: நகராட்சி நிர்வாகத்திடம் நிலத்தை குத்தகைக்கு கொடுத்து, அதில் வரும் வருமானத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கலாம். ஆனால், ரூ.10 கோடி கோயில் நிதியையே எடுத்து பன்னடுக்கு வாகன நிறுத்தம் கட்ட வேண்டுமா? பக்தர்கள் யாரும் பன்னடுக்கு வாகன நிறுத்தம் கேட்கவில்லை. அடிப்படை வசதி களைத்தான் கேட்கிறார்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.