惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
WordPress大学
WordPress大学
阮一峰的网络日志
阮一峰的网络日志
V
Visual Studio Blog
雷峰网
雷峰网
博客园_首页
The Cloudflare Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
爱范儿
爱范儿
小众软件
小众软件
D
Docker
P
Proofpoint News Feed
B
Blog
Vercel News
Vercel News
B
Blog RSS Feed
U
Unit 42
月光博客
月光博客
The GitHub Blog
The GitHub Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Y
Y Combinator Blog
I
InfoQ
Recent Announcements
Recent Announcements

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தேனாம்பேட்டை நட்சத்திர விடுதியில் சூதாட்டம் - தொழிலதிபர்க...
செய்திப்பிரிவு · 2026-05-31 · via hindutamil

Updated on: 

தேனாம்பேட்டையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் சட்டவிரோதமாக லட்சக்கணக் கில் பணம் வைத்து சூதாட் டம் நடப்பதாக சென்னை மாநகர காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், தேனாம்பேட்டை தனிப்படை போலீஸார் நேற்று நள்ளிரவு அந்த நட்சத்திர விடுதிக்குள் புகுந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள ஒரு சொகுசு அறையில், முக்கியப் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சினிமாத் துறையினர் அமர்ந்து சூதாடிக் கொண்டிருந்தனர்.

போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயன்ற 22 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்கள் சூதாட்டத்துக்குப் பயன்படுத்திய பொருட்கள், ரூ.81,17,530 பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 25 விலை உயர்ந்த செல்போன்கள், சூதாட்டப் பணத்தை எண்ணுவதற்காக பயன்படுத்தப்பட்ட பணம் எண்ணும் இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவர்கள் தொழில் அதிபர்கள், முக்கியஸ்தர்கள் என்பது தெரிய வந்தது.

சினிமா மேக்கப்மேனாக பணிபுரிந்து வரும் சேகர் (66), ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கள் கபீர் (44), ரமேஷ் (52), நாகநாதன் (47), கட்டுமான தொழிலதிபர்கள் சேகர் (62), கலைச்செல்வம் (62), பிரபு (41) ஆகியோர் முக்கியமானவர்கள்.

மேலும், கிண்டி ரேஸ் கோர்ஸில் பணிபுரிந்து வரும் ராஜேஷ் (28), துணி வியாபாரிகள் மன்மோகன் ரெட்டி (42), சீனிவாசன் (43), சுந்தர் ராஜ் (33), நடராஜ் (36) மற்றும் சுப்பாரெட்டி (52), ராஜேந்திரன் (38), குணசேகரன் (31), நரசிம்ம மூர்த்தி (30), சேகர் (67), சீனிவாசன்(26), ஏழுமலை (56), ஜெயச்சந்திரன்(52), ஆனந்தன் (40) சேகர் (66) என 22 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது தேனாம்பேட்டை போலீஸார் சட்ட விரோதச் சூதாட்டத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.