惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

N
Netflix TechBlog - Medium
月光博客
月光博客
Y
Y Combinator Blog
WordPress大学
WordPress大学
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
雷峰网
雷峰网
美团技术团队
T
Tailwind CSS Blog
小众软件
小众软件
量子位
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
有赞技术团队
有赞技术团队
P
Proofpoint News Feed
G
Google Developers Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Recent Announcements
Recent Announcements
The GitHub Blog
The GitHub Blog
博客园 - 三生石上(FineUI控件)
云风的 BLOG
云风的 BLOG
Vercel News
Vercel News
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
爱范儿
爱范儿
V
Visual Studio Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உயிரிழந்த சகோதரியின் கணக்கில் இருந்த ரூ.19,300-ஐ தர மறுத்...
2026-04-29 · via hindutamil

Updated on

1 min read

கியோஞ்கர்: ஒடிசா மாநிலத்தில் உயிரிழந்த தனது சகோதரியின் வங்கிச் சேமிப்புக் கணக்கிலிருந்து ரூ.19,300 பணத்தை எடுப்பதற்காக, இறப்பு ஆதாரத்துக்காக அவரின் எலும்புக்கூட்டைத் தோண்டி எடுத்து வங்கிக்குச் சுமந்து வந்த அண்ணனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் கியோஞ்கர் மாவட்டம் தியானாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீத்து முண்டா (50). இவரது சகோதரி கக்ரா முண்டா கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தார். கக்ராவின் கணவர் மற்றும் ஒரே மகனும் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், ஜீத்து முண்டா மட்டுமே அவரது ஒரே உறவினராக இருந்துள்ளார்.

மலிபோசி பகுதியில் உள்ள ஒடிசா கிராமீன் வங்கிக் கிளையில் கக்ரா முண்டா கணக்கு வைத்திருந்தார். அதில் சுமார் 19,300 ரூபாய் இருப்பு இருந்தது. இந்தப் பணத்தை எடுப்பதற்காக ஜீத்து முண்டா பலமுறை வங்கிக்குச் சென்றுள்ளார். ஆனால், முறையான இறப்புச் சான்றிதழ் அல்லது வாரிசுச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் அதிகாரிகள் பணம் தர மறுத்துள்ளனர். மேலும், கணக்கு வைத்திருப்பவரை நேரில் அழைத்து வாருங்கள் என்று அதிகாரிகள் அலட்சியமாகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.

உடலைத் தோண்டி எடுத்து..

படிக்காத பழங்குடியினரான ஜீத்து முண்டாவுக்குச் சிக்கலான வங்கி நடைமுறைகள் புரியவில்லை. அதிகாரிகளின் பதிலால் விரக்தியடைந்த அவர், திங்கள்கிழமை சுடுகாட்டிற்குச் சென்று புதைத்த தனது தங்கையின் உடலைத் தோண்டி எடுத்துள்ளார். எஞ்சியிருந்த எலும்புக்கூட்டை ஒரு துணியில் சுற்றி தோளில் சுமந்தபடி சுட்டெரிக்கும் வெயிலில் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து வங்கிக்கு வந்து சேர்ந்தார்.

இந்தக் காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வங்கியின் மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வறுமையில் வாடும் ஏழை மக்களிடம் கனிவுடன் நடந்துகொள்வதை விட்டுவிட்டு, அதிகாரிகள் ஆவணங்களுக்காக அலைக்கழிப்பதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்துத் தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து ஜீத்து முண்டாவைச் சமாதானப்படுத்தினர். பின்னர் அந்த எலும்புக்கூடு மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. அமைச்சர் கடும் கண்டனம் இதுகுறித்து ஒடிசா மாநில அமைச்சர் சுரேஷ் புஜாரி கூறுகையில், “வங்கி ஊழியர்களின் இந்த மனிதாபிமானமற்ற அணுகுமுறை கண்டிக்கத்தக்கது. இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.