惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

GbyAI
GbyAI
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Jina AI
Jina AI
Hugging Face - Blog
Hugging Face - Blog
A
About on SuperTechFans
Y
Y Combinator Blog
D
DataBreaches.Net
I
InfoQ
Recent Announcements
Recent Announcements
Last Week in AI
Last Week in AI
G
Google Developers Blog
博客园_首页
博客园 - 司徒正美
V
V2EX
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - 叶小钗
Engineering at Meta
Engineering at Meta
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
B
Blog
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - 【当耐特】
D
Docker
量子位

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மயங்க் யாதவுக்கு எதிரான ‘ட்ரோல்கள்’ பயங்கரமானவை - இயன் பி...
2026-04-24 · via hindutamil

Updated on

2 min read

23 வயதேயான இந்திய அதிவேக பவுலர் மயங்க் யாதவுக்கு எதிரான வசைகளும் ட்ரோல்களும் மிகவும் பயங்கரமானவை என்று மேஇ.தீவுகள் முன்னாள் பவுலரும் தற்போதைய வர்ணனையாளருமான இயன் பிஷப் கூறியுள்ளார்.

அதிவேகப் பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 தொடரின் போது ஏற்பட்ட ஒரு பெரிய பின்னடைவில் தொடங்கி, தொடர்ச்சியான காயங்களால் அவதிப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான முதுகுப் பிரச்சினை, அவரை ஐபிஎல் 2025 தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலக்கி வைத்தது.

இப்படி கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும் பின்னடைவுகளைச் சந்தித்து விட்டு மீண்டும் வந்துள்ளார் அவர். 2026 சீசனின் தனது முதல் போட்டியில் யாதவ் புதன்கிழமை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக விளையாடினார், ஆனால் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. கடைசி ஓவரில் 20 ரன்கள் உட்பட நான்கு ஓவர்களில் 56 ரன்களை அவர் விட்டுக்கொடுத்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 159/6 ரன்களை எடுத்தது, பின்னர் லக்னோ அணியை 119 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கிரிக்கெட்டில் ஒரு பவுலர் குறிப்பாக 353 நாட்கள் கடும் காயங்கள், சிகிச்சைகளுக்குப் பின்னர் கடும் பயிற்சி மேற்கொண்டால்தான் மீண்டும் வந்து மணிக்கு 150 கிமீ வீச முடியும். ஐபிஎல் ரசிகர்களுக்கு கிரிக்கெட் தெரியாது என்பதை அவர்கள் மயங்க் யாதவை ட்ரோல் செய்வதன் மூலம் தங்களது தற்குறித்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளனர்.

இயன் பிஷப் உண்மையில் மயங்க் யாதவ் குறித்துப் பேசியதை மற்ற யாரும் பேசாமல் இருப்பது ஐபிஎல் பணமழை கிரிக்கெட் வளர்த்து விடும் அராஜகப் போக்கையே காட்டுகிறது. “இன்று மயங்க் யாதவ் பற்றிய எதிர்மறையான கருத்துக்களைப் பார்ப்பது திகிலூட்டுகிறது. அந்த இளைஞர் தனது 21 வயதில், தனது கிரிக்கெட் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் கிட்டத்தட்ட இழந்துவிட்டிருப்பார்.

அவர் மீண்டும் விளையாடுவதைப் பார்ப்பதே ஒரு பெரிய உத்வேகம். அவர் மீண்டும் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பந்து வீசியதே ஒரு அதிசயம். 23 வயதில், அவன் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று அவருக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். கட்டுப்பாடு தானாகவே வரும்.” என்று கருணையுடனும் பரிவுடனும் அவரை அணுக வேண்டிய நிர்பந்தத்தை வலியுறுத்தியுள்ளார்.

மயங்க் யாதவின் இளம் கிரிக்கெட் வாழ்க்கை, பல நம்பிக்கைகள் நிறைந்ததாக இருந்தாலும், பின்னடைவுகளாலும் சூழப்பட்டிருந்தது. 2024-ல் அவர் ஒரு பரபரப்பான அறிமுகத்தை மேற்கொண்டார். தனது அறிமுகப் போட்டியிலேயே மணிக்கு 155.8 கி.மீ வேகத்தில் பந்து வீசியது எதிர்பார்ப்புகளை அதிகரித்தது. ஐபிஎல் 2024-ல், அவர் 4 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார், மேலும் வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் மூன்று போட்டிகளில் 6.91 என்ற எகானமி ரேட்டில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், தொடர்ச்சியான காயங்கள் அவரை எப்போதும் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியாத நிலைக்குத் தள்ளின. இந்திய அணிக்காக விளையாடிய பிறகு, அவர் மீண்டும் காயமடைந்தார், பின்னர் மற்றொரு முதுகு காயத்தால் பாதிக்கப்பட்டார். இது ஐபிஎல் 2025-ன் முதல் பாதியில் அவர் விளையாட முடியாமல் செய்தது.

அந்த சீசனில், மீண்டும் முதுகு காயம் ஏற்படுவதற்கு முன்பு அவர் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். ஒருவருடைய கிரிக்கெட் வாழ்க்கை, அவரது வாழ்வாதாரம், கடின உழைப்பு போன்றவற்றைப் பற்றியெல்லாம் இந்த நெட்டிசன்கள் என்ற மவுட்டீக கிரிக்கெட் ரசிகர்கள் கும்பலுக்கு கவலையில்லாத நிலை தோன்றி வருகிறது. முதலில் இந்த ட்ரோல் கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.