惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Last Week in AI
Last Week in AI
GbyAI
GbyAI
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
N
Netflix TechBlog - Medium
量子位
aimingoo的专栏
aimingoo的专栏
D
Docker
F
Fortinet All Blogs
T
Tailwind CSS Blog
V
V2EX
D
DataBreaches.Net
Google DeepMind News
Google DeepMind News
MyScale Blog
MyScale Blog
G
Google Developers Blog
罗磊的独立博客
MongoDB | Blog
MongoDB | Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
WordPress大学
WordPress大学
博客园 - 三生石上(FineUI控件)
小众软件
小众软件
A
About on SuperTechFans
IT之家
IT之家

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“மக்கள் தொகை உயர்வுக்கு ஏற்ப தொகுதி எண்ணிக்கையை கூட்டுவது...
2026-04-17 · via hindutamil

Updated on

2 min read

புதுடெல்லி: நாட்டில் மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும், இதற்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள வழிமுறைகளின்படியே தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள அரசு விரும்புகிறது என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

மகளிர் இடஒதுக்​கீடு சட்​டத்தை நிறைவேற்றும் நோக்கில் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இதில், அரசி​யல் சாசன திருத்​த (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறு​வரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்​டங்​கள் (திருத்த) மசோதா 2026 ஆகிய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவற்றின் மீது விவாதம் நடத்தப்பட்டு வருகிறது.

இன்றைய விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்த மசோதாக்கள் தொடர்பாக மக்களவையில் 100-க்கும் மேற்பட்டோர் உரையாற்றி இருக்கிறார்கள். இதில் 50-க்கும் மேற்பட்டோர் பெண்கள்.

பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை அனைவருமே ஆதரிப்பதாகவும், ஆனால் அது செயல்படுத்தப்படும் முறையை மட்டுமே எதிர்ப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். உண்மையில் அவர்களின் இந்த எதிர்ப்பு என்பது செயல்படுத்தப்படும் முறைக்கு எதிரானது அல்ல. பெண்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகத்தான் அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இந்த மூன்று மசோதாக்களின் நோக்கத்தை புரிய வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பெண்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம். இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு அவை சட்டமாகும்போது, 2029ம் ஆண்டு முதல் மகளிர் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும்.

தற்போது இந்த அவையில் 543 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எம்பிக்களின் தொகுதிகளில் உள்ள மக்கள் தொகை ஒவ்வொருவருக்கும் வேறாக இருக்கிறது. சில எம்பிக்கள் 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். சில எம்பிக்கள் 48 லட்சம் மக்கள் தொகை கொண்ட தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

மக்கள் தொகை அதிகரிக்கும்போது தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் உறுப்பினர்களுக்கு சவால்கள் அதிகரிக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டுதான் நமது அரசியல் சாசனத்தில் அவ்வப்போது தொகுதிகளை மறுவரையறை செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்போது, அதில் நாம் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றுவோம். இதன் காரணமாக எஸ்சி, எஸ்டி உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இப்போது எதிர்ப்பவர்கள், எஸ்சி, எஸ்டி உறுப்பினர்களின் எண்ணிககை உயர்வதையும் சேர்த்தே எதிர்க்கிறார்கள்.

தொகுதி மறுவரையறையை நிறைவேற்றும் பொறுப்பு அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் பல புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. பல புதிய ரயில் நிலையங்கள் உருவாக்கப்படுகின்றன, பல புதிய மாவட்டங்கள் உருவாக்கின்றன. இவை அனைத்தும் இந்த தொகுதி மறுவரையறையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

பெண்களுக்கு சரிசமமான அதிகாரத்தை அளிப்பது, கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்துவது, நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவது ஆகியவையே இந்த மசோதாக்களின் நோக்கம்.

இந்த மசோதாக்களை நீங்கள் ஏன் இப்போது கொண்டு வருகிறீர்கள் என பலர் கேட்கிறார்கள். 1971-ம் ஆண்டு முதல் தொகுதிகளின் எண்ணிக்கை அப்படியே உள்ளது. 1971ல் 56 கோடியாக இருந்த மக்கள்தொகை தற்போது 140 கோடியாக உயர்ந்துவிட்டது. பல தொகுதிகளிலும் மக்கள்தொகை இரண்டு மடங்காகிவிட்டது. 2029க்குள் தொகுதி மறுவரையறையை முடிக்க முடியாது. எனவே 2029 முதல் பெண்கள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் நோக்கில் இந்த மசோதாக்கள் கொணடு வரப்பட்டுள்ளன.

2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கவிட்டது. ஆனால் அது முடிந்து அதன் பிறகு அதன் அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்வது என்றால் அதற்கென்று ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றின் முடிவுகளின்படி நடைமுறைப்படுத்த காலம் பிடிக்கும். எனவேதான், அனைத்து மாநிலங்களின் விகிதாச்சாரத்தை மாற்றாமல் தொகுதிகளின் எண்ணிக்கையை தற்போதே மாற்றும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இந்த மசோதாக்களை எதிர்ப்பவர்கள், தங்கள் மாநிலங்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார்களா அல்லது எதிராக பேசுகிறார்களா என்பது அவர்களுக்கே தெரியவில்லை.

தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மதிப்பு, அவரது தொகுதியில் உள்ள மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மதிப்பை கொண்டிருக்கவில்லை. தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் மதிப்பும் சரிசமமாக இருக்கும்.

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அது மேலும் குறையும் என்றும் கூறுகிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அவையின் கால கட்டத்தையும் அரசு நீட்டிக்கும். எனவே, நேரம் குறைவாக இருப்பதறகு எந்த காரணமும் இருக்காது” என்று அமித் ஷா விவரித்தார்.