惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Recent Announcements
Recent Announcements
人人都是产品经理
人人都是产品经理
月光博客
月光博客
博客园 - 三生石上(FineUI控件)
GbyAI
GbyAI
博客园 - 司徒正美
美团技术团队
Vercel News
Vercel News
IT之家
IT之家
U
Unit 42
Y
Y Combinator Blog
罗磊的独立博客
Microsoft Security Blog
Microsoft Security Blog
MongoDB | Blog
MongoDB | Blog
Jina AI
Jina AI
V
Visual Studio Blog
B
Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
MyScale Blog
MyScale Blog
博客园 - 叶小钗
A
About on SuperTechFans
WordPress大学
WordPress大学
Hugging Face - Blog
Hugging Face - Blog
B
Blog RSS Feed

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
திருச்சியில் சாலை வலத்தின் இடையே விஜய் மும்மத வழிபாடு: பே...
2026-04-19 · via hindutamil

Updated on

2 min read

திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் இன்று 2-ம் கட்டமாக சாலை வலம் வந்து வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வின் இடையே இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களின் வழிபாட்டு தலங்களில் வழிபாடு செய்து வாக்கு சேகரித்தார்.

 திருச்சி கிழக்கு சட்டப் பேரவை தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் ஏப்.2 அன்று வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு மரக்கடை பகுதியில் முதல் கட்ட பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து காந்தி மார்க்கெட், தஞ்சாவூர் ரோடு, பழைய பால்பண்ணை, செந்தண்ணீர்புரம், டி.வி.எஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம், கொட்டப்பட்டு, விமான நிலையம் பகுதிகளில் சாலை வலம் வந்து பிரச்சாரம் செய்தார்.

இந்நிலையில் தான் போட்டியிடும் கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட விமான நிலையம் வயர்லெஸ் சாலை, கே.கே.நகர், காஜாமலை பகுதி, கொட்டப்பட்டு பகுதிகளில் இன்று 2-ம் கட்ட வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். இதற்காக இன்று பிற்பகல் 3 மணியளவில் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்.

அப்போது, திருச்சி விமான நிலையத்தில் போலீஸார் அமைத்திருந்த தடுப்புகள் மீது ஏறி குதித்து உள்ளே செல்ல முயன்ற தொண்டர்கள் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

விமான நிலையத்திலிருந்து தனது பிரத்யேக பிரச்சார வேனில் ஏறி வெளியே வந்த விஜய், வேன் மீது நின்றபடி விசில் அடித்து, கையசைத்து வாக்கு சேகரித்தார். தொண்டர்கள் கொடுத்த வெள்ளை புறாக்களை கைகளில் ஏந்தி வானில் பறக்கவிட்டு மகிழ்ந்தார்.

 வயர்லெஸ் சாலையில் சாலை வலம் சென்றபோது அங்குள்ள புனித அந்தோணியார் கோயிலுக்குச் சென்று தரையில் முட்டிபோட்டபடி சிறிது தூரம் நடந்து சென்று ஜெபம் செய்தார்.

பின்னர், வேனில் ஏறி சாலை வலம் சென்று விஜய் வாக்கு சேகரித்தார். அப்போது வேனில் முன்னாள் அமைச்சரும், லால்குடி தொகுதி தவெக வேட்பாளருமான கு.ப.கிருஷ்ணனை ஏற்றிக் கொண்டு வாக்கு சேகரித்தார்.

வழிநெடுக மக்கள் கூட்டம், கூட்டமாக கூடி நின்று விஜய்யை வரவேற்று, துண்டு, பொன்னாடை, புகைப்படம், கிரிக்கெட் பேட் உள்பட பல்வேறு பொருட்களை நினைவு பரிசாக வழங்கினர். சில இடங்களில் குழந்தைகளை தூக்கி கொஞ்சினார். தொண்டர்கள் இரு சக்கர வாகனங்களின் விஜய்யின் வேனை பின் தொடர போலீஸார் அனுமதிக்கவில்லை. இதனால் தொண்டர்கள் வேனை பின் தொடர்ந்து ஓடி வந்தனர்.

திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டு அருகே உள்ள ஸ்ரீ பச்சநாச்சியம்மன் கோயிலில் தரையில் சாஸ்டாங்கமாக படுத்து சாமி கும்பிட்டார். அவருக்கு கோயில் நிர்வாகம் சாபில் பூ, பழம், விபூதி, குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டன.

திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள நூருல் ஹுதா பள்ளிவாசலுக்கு சென்று அதன் தலைவர் மோத்தி ஹாஜியாரை கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டு வாக்கு சேகரித்தார். பள்ளிவாசல் தலைவர் விஜய்க்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் சாலை வளம் வந்த விஜய் எங்கும் பேசவில்லை. கிழக்கு தொகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரம் சாலை வளம் வந்து தனது வாக்கு சேகரிப்பு பணியை முடித்துக் கொண்டு மாலை 5.45 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்குள் சென்றார். பின்னர், அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து வந்த தவெக தலைவர் விஜய்க்கு, திருச்சி கிழக்குத் தொகுதி பொறுப்பாளர் குடமுருட்டி டி.கரிகாலன் 900 விசில்களால் செய்த மாலையை அணிவித்தார். வெற்றி பெற்றதும் இதை விட பெரிய மாலை அணிவிப்பதாக கரிகாலன் கூறியதை கேட்ட விஜய், மைன்ட்ல வச்சுக்கிறேன் என்றார்.

தவெகவினர், விஜய் பேசுவதற்காக 6 இடங்களை குறிப்பிட்டு விண்ணப்பித்திருந்தனர். வயர்லஸ் சாலை, கே.கே.நகர் பேருந்து நிலையம், தந்தை பெரியார் கல்லூரி அருகே காஜாமலை சாலை சந்திப்புப் பகுதி ஆகிய 3 இடங்களில் பேச போலீஸார் அனுமதி அளித்திருந்தனர். ஆனால் சாலை வலம் வந்த விஜய், எங்கும் பேசவில்லை. இதனால் தவெகவினர் ஏமாற்றமடைந்தனர். கே.கே.நகர் பேருந்து நிலையம் அருகே கிரேன் மூலம் பிரம்மாண்ட  மாலை அணிவித்தனர்.

விஜய் வருகையை முன்னிட்டு கோழிபண்ணை சாலை, காஜாமலை வளாகம் ரேஸ்கோர்ஸ் சுற்றுச்சாலையில் பல பகுதிகளில் இரும்பு தடுப்புகள் கொண்டு போலீஸார் தடுத்திருந்தனர். இதனால் தவெகவினர் ஆங்காங்கே வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு நடந்து சென்றனர். இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞர்கள், பெண்கள் பலரும் தலைக்கவசம் அணியாமலும், ஒரு இருசக்கர வாகனத்தில் 3, 4 பேர் வரை விதிகளை மதிக்காமல் பயணித்தனர். மேலும் சாலையில் வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை வேகமாக இயக்கினர்.